Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேகாவின் வாக்குறுதிகள் அமெரிக்காவை கவர்ந்துள்ளன! - ஏ.எஃப்.பியின் ஆய்வில் தெரிவிப்பு

Featured Replies

பொன்சேகாவின் வாக்குறுதிகள் அமெரிக்காவை கவர்ந்துள்ளன! - ஏ.எஃப்.பியின் ஆய்வில் தெரிவிப்பு

ஊடக சுதந்திரம், சுயாதீன ஆணைக் குழுக்களை அமைத்தல் போன்ற பொன்சேகாவின் உறுதி மொழிகள் அமெரிக்காவை கவர்ந்துள்ளன. எல்லா வேட்பாளர்களும் பல விடயங்களில் உறுதி மொழிகளை வழங்கி வருகின்றனர். ஆனால் அவர்கள் அதனை பின்னர் நிறைவேற்றுவதில்லை. எனினும் ஜெனரல் பொன்சேகா தெரி வித்து வரும் கருத்துக்கள் ஆக்கப் பூர்வமானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏ.எஃப்.பி வெளியிட்ட செய்தி ஆய்வின் தமிழ் வடிவம் வருமாறு, இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் அமெரிக்காவுக்கு புதிய நம்பிக்கைகளை தோற் றுவித்துள்ளது. வன்னியில் நடைபெற்ற போர் அனைத்துலக சமூகத்திற்கும் இலங்கைக் கும் கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தியிருந்தது.

எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெற வுள்ள தேர்தலானது. போர் நிறைவடைந்த பல மாதங்களின்பின் நடைபெறும் போதும் இலங்கை அரசு மீது அதிகளவிலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தப் பட்டுள்ளன. நடைபெறப்போகும் தேர்தல் இலங்கைக் கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உற வில் மாற்றத்தை கொண்டுவருமா என கேட் டபோது இலங்கையுடனான உறவுகள் ஏற் கனவே ஒரு அனுகூலமான நிலைக்கு திரு ம்பியுள்ளதாக அமெரிக்க அரசின் உயர் அதி காரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களாக நாம் பல முன் னேற்றமான நடவடிக்கைகளை காண்கின் றோம். தேர்தல் நடைபெறுவதால் கூட அது இருக்கலாம். எனினும் அவை பொதுமக் களுக்கு நன்மையானதே என தனது பெய ரை குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி எம் மிடம் தெரிவித்தார். பல மாதங்களாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் விடுவிக்கப்பட்டது அனைத்துலக மட்டத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

இலங்கை தொடர்பில் உன்னிப்பாக அவதா னங்களை மேற்கொண்டுவரும் சில தரப்பி னர் மேற்குலகத்துடன் நிற்கின்றனர். குறிப் பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை குறிப்பிடலாம். அவர்கள் அரசிற்கு மிகப் பெரும் அழுத்தங்களை கொடுத்துவரு கின் றனர். எனினும் அவர்களிடம் பொன் சேகா தொடர்பில் இரு வேறுபட்ட பார்வைகள் உண்டு. பொன்சேகா அமெரிக்காவின் கிறீன்காட் விசாவை கொண்டுள்ளவர். போர் குற்றம் தொடர்பான அமெரிக்க அரசின் விசாரணை களில் இருந்து கடந்த நவம்பர் மாதம் தப்பி இருந்தார்.

ஜனாதிபதியாக பொன்சேகா வருவதை அமெரிக்கா தனது முதல் தெரிவாக கொண்டிருக்கவில்லை எனினும் அவர் வெற்றி பெற்றால் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் நல்ல மாற்றம் ஏற்படுவதற்கான வழி திறக்கப்படும் என நெப்ரஸ்கா வெஸ்லியன் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த இலங்கையின் வெளிவிவகா ரங்கள் தொடர்பான நிபுணர் றொபேட் ஒபோ ஸ்ட் தெரிவித்துள்ளார். ஆனால் பொருளாதார நலன்களை பின் தள்ளி, முன்னர் பிரித்தானியா மேற்கொண்ட காலனித்துவ ஆளுமை மேற்குலகத்தை ஆட்கொண்டுள்ளதா என தான் சந்தேகப் படுவதாக ஜெர்கெடவுடன் பல்கலைக்கழகத் தின் துணை பேராசிரியரும் இலங்கையில் நடைபெற்ற பிரிவினைவாத போர் என்ற நூலின் ஆசிரியருமான அசோக பண்டாரகே தெரிவித்துள்ளார்.

மேற்குலகத்துடன் உள்ள உறவை முறித்து கொள்வதற்கு சிங்கள சமூகம் விரும்பப் போவ தில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்கள் மீது போரை தொடுத்தவர்கள் என்பதால் தம்மிடம் தெரிவு எதுவும் இல்லையயன அமெரிக்காவின் இலங்கைப் பொருட்களை புறக்கணிக் கும் போராட்டத்தை மேற்கொண்டுவரும் அமைப்பைச் சேர்ந்த தஷா மனோரஞ்சன் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் பின்னர் அவர்கள் தமிழ்மக் கள் மீது தயவுகாண்பிக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் மகிந்த ராஜபக்­வை விட பொன்சேகாவை புலம்பெயர் தமிழ் சமூகம் அதிகம் விரும்புகிறது. அவர்கள் பொன்சேகா விற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க தீர்மானித்துள் ளனர். மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும் என் பதே புலம் பெயர் தமிழ் சமூகத்தின் ஆவல் என கனடா தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

சூழ் நிலைகள் மாறும் போது புதிய நம்பிக் கைகள் உதயமாகலாம். அது இலங்கையின் அரசியல் சூழ்நிலைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ள தாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=2106

அமெரிக்கா தான் யாருக்கும் ஆதரவு இல்லை எண்டு சொன்னதாக எங்கள செய்தி சேவையிலை சொன்னார்கள்.... ஏன் AFP எங்கட அறிவாளிகளை குழப்புது...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.