Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்க அதிபர் தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் - ஏன்?

Featured Replies

சிறிலங்க அதிபர் தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் - ஏன்?

எம்.ஜி. தேவசகாயம்

செவ்வாய், 19 ஜனவரி 2010( 18:32 IST )

WD

இத்தாலி நாட்டின் மிலன் நகரில் இருந்து செயல்பட்டுவரும் சுதந்திர அமைப்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal - PPT), இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்ற‌ங்கள் குறித்து அயர்லாந்து தலைநகர் டப்ளினில் பொங்கல் தினத்தன்றும், அதற்கு மறுநாளும் விசாரணை நடத்தியது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அளித்த சாட்சியங்கள், இதர ஆதாரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த அத்தீர்ப்பாயம், சிறிலங்க அரசு போர் குற்றவாளியே என்றும், அது மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளது என்றும் தனது முதற்கட்டத் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, சிறிலங்க அரசிற்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்று குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் மக்கள் தீர்ப்பாயம் கூறியுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்க அரச படைகள் கனரக ஆயுதங்களைக் கொண்டு நடத்திய தாக்குதலில் 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முல்லைத் தீவுப் பகுதியில் அமைந்திருந்த மக்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிவந்தவர்கள் உட்பட பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் பலர் இத்தீர்ப்பாயத்தில் சாட்சிமளித்துள்ளனர்.

சிறிலங்க அரசிற்கு எதிராக இந்தக் குற்றச்சாற்றைத்தான் கடந்த பல மாதங்களாக பன்னாட்டு சமூகமும், புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும் கூறிவந்தனர். தங்கள் நாட்டு மக்கள் மீதே இப்படிப்பட்ட கொடூர குற்றங்களை இழைத்ததாக குற்றம்சாற்றப்பட்டவர்கள் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோராவர். இவர்களில் மகிந்த ராஜபக்சவும், சரத் பொன்சேகாவும்தான் வரும் 26ஆம் தேதி நடைபெறவுள்ள சிறிலங்க அதிபர் தேர்த‌லில் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரையும்தான் போர்க் குற்றவாளிகள் என்றும், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்தவர்கள் என்றும் அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயம் உறுதிபடுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட பின்னணியில், ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளாக தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு அளிப்பது என்கின்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதற்கு மாற்றாக, சிறிலங்க அதிபர் தேர்தலை முற்றிலுமாக புறக்கணிப்பது என்று முடிவெடுக்க வேண்டும்.

சரியான நேரத்தில் அயர்லாந்து மக்கள் தீர்ப்பாயம் இவர்களின் குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது என்பது மட்டுமின்றி, தேர்தலை புறக்கணிப்பது என்பதற்கான ஆழமான வேறு பல காரணங்களும் உள்ளன:

1) சிறிலங்க அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பேய்க்கும் பெருங்கடலிற்கும் இடையிலான தெரிவு என்று கூறப்படுகிறது. இரண்டுமே பேய்தான், இதில் தமிழர்களுக்கு எந்த இடமும் இல்லை.

2) இந்த இருவரில் யாருக்குத் தமிழர்கள் வாக்களித்தாலும், தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றமிழைத்த, மானுடத்திற்கு எதிரான குற்றமிழைத்த இவர்களுக்குச் சாதகமான தீர்ப்பாகவே ஆகும்.

3) இன்றுள்ள நிலையில், ஈழத் தமிழர்கள் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில், அதற்கு ஒரே வழி அதிபர் தேர்தலை புறக்கணிப்பதே என்பதே தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மை கருத்தாக உள்ளது.

4) கடைசியாக, ஆனால் மிக முக்கியமானது இலங்கையில் ஜனநாயகம் நடைமுறையில் இல்லை என்பதே. மக்கள் தீர்ப்பைப் பெற்று சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்துவதற்கான ஒரு நாடகமே அங்கு நடைபெறவுள்ளத் தேர்தல். இதில் தமிழர்களை பங்கேற்கச் சொல்வது ஏமாற்றுச் செயலாகும்.

தேர்தலில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறும் ஒரே காரணம், தங்களுக்கு அரசியல் செய்ய இடமில்லாதவாறு, ராஜபக்ச ஆதரவாளர்களான டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும், பிள்ளையானும், ஆனந்தசங்கரியும் அபகரித்துவிட்டார்கள். எனவே, தேர்தலில் பங்கேற்று ராஜபக்சாவை தோற்கடிப்பதன் மூலம் அவர்களை முறியடித்து தங்கள் அரசியல் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதே.

இந்த வாதம் எந்த அளவிற்கு அடிப்படையற்றது என்பதற்கு ஒரு சிங்கள வல்லுனர் கூறிய கருத்தே போதுமானது: “டக்ளஸும், கருணாவும், பிள்ளையானும் தமிழர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும், அதனால் தமிழர் இனப் பிரச்சனைக்கு ஜனநாயக ரீதியிலான ஒரு அரசியல் தீர்வு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால், எதிர்க்கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவும், இன்று அவரை ஆதரிக்கும் அரசியல் சக்திகளும், அவர்களின் சிந்தனையும், பின்னணியும் வைத்துப் பார்க்கும்போது தமிழர் பிரச்சனைக்கு நியாயமான, பன்முகத்தன்மை கொண்ட ஒரு தீர்வை அவர்கள் அளிப்பார்கள் என்பது சந்தேகமே” என்று கூறினார்.

அதுமட்டுமல்ல, “சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் தமிழர் அரசியலிற்கு இடம் கிடைக்காது, மாறாக, இராணுவ முகாம்களுக்கும், அதி உயர் பாதுகாப்பு மண்டலங்களுக்கும்தான் அதிக இடம் கிடைக்கும்” என்று அந்த நிபுணர் கூறினார்!

எனவே சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை எல்லாவிதத்திலும் இழப்பை நோக்கியதாகவே உள்ளது. இந்த நிலைப்பாட்டினால் அவர்கள் அரசியல் செய்வதற்கு எந்த இடமும் கிடைக்காது, மாறாக, தமிழர்கள் தங்கள் மரியாதையை முழுமையாக இழப்பார்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு புகழ் பெற்ற திருக்குறள் ஒன்றை நினைவூட்டுகிறேன்:

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் எ‌ன்பது இழுக்கு”

(இந்தியா முழுவதும் கால் நூற்றாண்டிற்கு மேலாக பணியாற்றி இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான திரு. எம்.ஜி. தேவசகாயம் அவர்கள், 1964ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் இணைந்து நாட்டுப் பணியைத் துவக்கியவர். 1965ஆம் ஆண்டுப் போரில் ஈடுபட்டு சிறப்பான பணியாற்றியமைக்காக சேவா பதக்கம் பெற்றவர். இராணுவத்தில் போர் அனுபவம், பிரிவினைவாத அமைப்புகளை ஒடுக்கும் பணி, உள்நாட்டுக் கலவரத்தை ஒடுக்குதல் ஆகிய மூன்று பணிகளிலும் பொறுப்பேற்று அனுபவம் பெற்றவர் தேவசகாயம்.)

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1001/19/1100119096_1.htm

நல்லதோர் கருத்து. வாக்களித்தாலும் வாக்களிப்பைப் பகிஷ்கரித்தாலும் தமிழினம் ஒன்றுபட்டு முடிவினை எடுக்கவேண்டும். அதன் பலம் சிதைவடையக் கூடாது. பொன்சேகா, மகிந்த என்பதல்ல முடிவு. தமிழர்களால் என்ன முடிவு கொடுக்கப்பட்டது என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும்.

  • தொடங்கியவர்

2003 ம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தேசிய தலைவர்கள் அவர்கள் சொன்ன கருத்து ஒண்று...

முடிவில்லாத ஒரு துன்பியல் நாடகமாகத் தமிழரின் இனப் பிரச்சினை தொடர்கிறது. எமது பிரச்சினைக்குத் தீர்வுகாண ஆளும்கட்சி முயற்சிப்பதும் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் பின்பு எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக மாறி மீண்டும் அதே முயற்சியும் அதே எதிர்ப்புமாக இந்தச் சிங்கள அரசியல் வரலாற்று நாடகம் தொடர்ச்சியாக ஒரே பாணியிற் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக மேடையேறி வருகிறது. இலங்கையில் மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகளுமே தமிழர்களுக்கு விரோதமான இந்த விபரீத நாடகத்தின் இயக்குனர்கள். இந்த இனவாத நாடகத்தின் கதாநாயகர்கள் காலத்திற்குக்காலம் மாறியபோதும் கதையின் கருப்பொருள் மாறவேயில்லை. தற்போது கொழும்பில் உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடியும் இந்த அபத்த நாடகத்தின் அப்பட்டமான வெளிப்பாடுதான்.

தமிழர்களைப் பகடைக் காய்களாகப் பாவித்து ஆடப்படும் இந்த சதுரங்க விளையாட்டின் எதிர்விளைவாக எத்தனையோ சமரச முயற்சிகள் பாழடிக்கப்பட்டன. எத்தனையோ பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின. எத்தனையோ உடன்பாடுகள் கிழித்தெறியப்பட்டன. எத்தனையோ ஒப்பந்தங்கள் செயலிழந்து செத்துப் போயின. இதனால் தமிழரின் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கிறது. காலத்தால் மோசமாகித் தமிழரின் அவல வாழ்க்கை தொடர்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.