Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலட்சக் கணக்கான மக்களை முட்கம்பிக்குள் முடக்கிய அரசாங்கம் தற்போது பாசத்தை பொழிய ஆரம்பித்துள்ளது

Featured Replies

யுத்தப் பிரதேசத்திலிருந்து அரசாங்கத்தின் பகுதிக்கு அபயம் தேடி வந்த இலட்சக் கணக்கான அப்பாவி பொது மக்களை முட்கம்பி கூட்டுக்குள் டக்கி வைத்திருந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் வந்தவுடன் தமிழ் மக்கள் மீது பாசத்தை பொழிய தொடங்கி விட்டது. இந்தக் கபட நாடகத்தையெல்லாம் அரங்கேற்றி தமிழ் மக்களின் வாக்குகளில் குறி வைத்திருக்கும் அரசாங்கத்திற்கு நாட்டின் சிறுபான்மை சகம் ஜனாதிபதி தேர்தலில் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெவித்தார்.

அட்டன் தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தோட்டக் கமிட்டி தலைவர்கள் மற்றும் மகளிர் அணி, இளைஞர் முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிய போதே இவ்வாறு அவர் தெவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது,இந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களுக்கு தமது எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு கிடைத்த அற்புதமான சந்தர்ப்பமாகும். வடக்கிலே உமைகோ ஆயுதம் ஏந்தியவர்கள் ஒன்றில் கொல்லப்பட்டு விட்டார்கள்.

எஞ்சியவர்கள் நிராயுத பாணி களாக்கப் பட்டு விட்டார்கள்.

தற்போது தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஒரே ஒரு அரசியல் ஆயுதமான வாக்குமையைக் கொண்டு பல்வேறு சவால்களுக்கு கங்கொடுக்க துணிச்சலுடன் செயற்பட வேண்டிய காலகட்டம் இதுவாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் யுத்தம் நடத்தி அதில் வெற்றியும் கண்டார்.

யுத்தத்தில் காட்டிய கரிசனையை யுத்த களத்தில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொது மக்கள் விடயத்தில் காட்ட தவறி விட்டார்.

பல்லாயிரக்கணக்கானவர்கள் பட்டினியால் தவித்த போது ஐரோப்பிய தமிழர்களால் அனுப்பப்பட்ட கப்டன் அலி கப்பலின் நிவாரணப் பொருட்களை உரிய நேரத்தில் உரியவர்களுக்கு வழங்க அரசு எவ்விதமான கரிசனையும் காட்டவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டிருப்பாரேயானால் இரண்டு வருடங்கள் மீதமிருக்கின்ற போது இந்தத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு காட்டிய அவசரத்தைப் போல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராக இல்லை.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு இருக்கின்ற பெரும்பான்மையுடன் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவையும் பெற்று இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இருந்த போதும் பெரும்பான்மை மக்கள் யுத்த பெருமிதத்தில் இருந்து மீள்வதற்கு முன்பு தேர்தல் வெற்றியைத் தட்டிப் பறித்து விட வேண்டும் என்பதே அவரது நோக்கமாகவுள்ளது. அத்துடன் ஒரு புறத்தில் இனவாதம் பேசி அரசியல் பிழைப்பு நடத்தும் விமல் வீரவன்சவையும், மறுபுறத்தில் ஜாதிக ஹெல உறுமயவையும் வைத்துக் கொண்டு ஜனாதிபதியினால் எவ்வாறு இனப் பிரச்சினைக்கு தீர்வை ன் வைக்க முடியும்? தற்போது நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் மிக நெருக்கமான போட்டியைக் கொண்டிருப்பதால் தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் வரலாற்று பாத்திரத்தை வகிக்கப் போகின்றன.

வரலாற்றில் என்றுமே இணைந்து செயற்படாத பல தமிழ், முஸ்லிம் கட்சிகள் சரத் பொன்சேகாவை ஆதக்கும் அணியில் ஒரே நோக்கத்தோடு ஒன்றுபட்டுள்ளன.

இதனால் இந்தத் தேர்தலில் சரத் பொன்சேகா இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. அவர் ஜனாதிபதியாக பதவியேற்றவுடனேயே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை உட்பட நாம் அவருடன் உடன்பட்டுக் கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை ன்வைக்க நடவடிக்கை எடுப்போம்.

அதனால் மலையகத்தில் சரத் பொன்சேகாவை ழுமையாக வெற்றி பெறச் செய்ய வேண்டும்

http://thinamurasam.com/ http://thinamurasam.com/ http://thinamurasam.com/

யுத்தப் பிரதேசத்திலிருந்து அரசாங்கத்தின் பகுதிக்கு அபயம் தேடி வந்த இலட்சக் கணக்கான அப்பாவி பொது மக்களை முட்கம்பி கூட்டுக்குள் டக்கி வைத்திருந்த அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் வந்தவுடன் தமிழ் மக்கள் மீது பாசத்தை பொழிய தொடங்கி விட்டது. .

தற்போது தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஒரே ஒரு அரசியல் ஆயுதமான வாக்குமையைக் கொண்டு பல்வேறு சவால்களுக்கு கங்கொடுக்க துணிச்சலுடன் செயற்பட வேண்டிய காலகட்டம் இதுவாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் யுத்தம் நடத்தி அதில் வெற்றியும் கண்டார்.

யுத்தத்தில் காட்டிய கரிசனையை யுத்த களத்தில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொது மக்கள் விடயத்தில் காட்ட தவறி விட்டார்.

பல்லாயிரக்கணக்கானவர்கள் பட்டினியால் தவித்த போது ஐரோப்பிய தமிழர்களால் அனுப்பப்பட்ட கப்டன் அலி கப்பலின் நிவாரணப் பொருட்களை உரிய நேரத்தில் உரியவர்களுக்கு வழங்க அரசு எவ்விதமான கரிசனையும் காட்டவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டிருப்பாரேயானால் இரண்டு வருடங்கள் மீதமிருக்கின்ற போது இந்தத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. யுத்தத்தை வெற்றி கொள்வதற்கு காட்டிய அவசரத்தைப் போல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி தயாராக இல்லை.

http://thinamurasam.com/ http://thinamurasam.com/ http://thinamurasam.com/

மகிந்தவின் லட்சணங்கள்,இவை.

இதில் வேறு,தீர்வு பற்றிய பித்தலாட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.