Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டுச் சம்பவங்களுக்கு சில விசமிகளே காரணம் அரச அனுசரணை--பொன்சேகா குற்றச்சாட்டு

Featured Replies

யாழ்.குடாநாட்டில் நேற்று அதிகாலை இடம்பெற்ற சம்பவங்களுக்கு இராணுவத்திலுள்ள ஒரு சில தீயசக்திகளின் செயற்பாடே காரணமென எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.கொழும்பிலுள்ள அவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

பெருமளவு மக்கள் வாக்களிக்க முன்வந்தமைக்கு காரணம் ஆட்சி மாற்றமொன்றை விரும்பியதேயாகும் என்று ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்ததுடன், யாழ்ப்பாணத்தில் குண்டுத்தாக்குதல் அதிகாலை இடம்பெற்றதால் 9 மணிக்கு பின்னரே மக்கள் வாக்களிக்கச் சென்றதாகக் கூறினார்.

செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் மேலும் தெரிவித்ததாவது;வாக்களிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமானதையடுத்து பெருமளவு மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டனர். எனினும் சில இடங்களில் மக்களின் வாக்களிப்பை தடுக்கும் பொருட்டு சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகாலை 1 மணிமுதல் 5 மணியான காலப்பகுதியில் ஆட்லெறி ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், 10 க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அனுசரணையுடனேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியை மாற்றி அரசாங்கம் அப்பொறுப்பை கிளிநொச்சியிலுள்ள உயர் இராணுவ அதிகாரிக்கு கொடுத்துள்ளது. அவரது தலைமையில் இராணுவத்திலுள்ள சிலர் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.மக்களை அச்சத்துக்குள்ளாக்கி வாக்களிப்பை தடுப்பதற்கே இவ்வேலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், யாழ்.மாவட்ட மக்கள் 9 மணிக்கு பின்னர் வாக்களிப்பை மேற்கொண்டனர். அங்குள்ள பெருமளவான மக்கள் வாக்களிப்பதில் மும்முரமாக செயற்பட்டனர். இதேவேளை அம்பலாங்கொடை பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இரு ஜே.வி.பி. உறுப்பினர்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு வாக்களிப்பு சுமுகமாக இடம்பெறுவதை தடுக்கும் நடவடிக்கை இடம்பெற்ற போதும் நாடு முழுவதும் மக்கள் மும்முரமாக வாக்களிப்பில் ஈடுபட்டனர். சில வாக்களிப்பு நிலையங்களில் 10,15 நிமிடங்கள் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்துள்ளனர். இவ்வாறு மக்கள் என்றுமில்லாத வகையில் உணர்வுடன் வாக்களிப்பதற்கு காரணம் ஆட்சி மாற்றம் வேண்டுமென்பதற்கேயாகும்.

இந்த நிலைமையில் மக்கள் தமது தீர்ப்பை மாற்றத்துக்காக வழங்குவதையடுத்து தோல்வி உறுதியான நிலைமையில் அரசு தனது பலத்தை பாவிக்க முயற்படுகின்றது. தேரர்கள் உட்பட அரசியல் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.எனவே நான் மக்களை கேட்பது என்னவெனில், தேர்தல் சுமுகமாக இடம்பெற அமைதியாக நடந்து கொள்ளுமாறு கேட்கின்றேன்.வாக்களிப்பின் போது பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் எமக்கு அறிவிக்கப்படும் பட்சத்தில் தேர்தல் ஆணையாளரிடம் தெரியப்படுத்தி சட்டத்தின் நிமித்தம் நடவடிக்கையெடுப்போம்.

இது ஜனநாயக நாடு. மக்கள் தமது தீர்ப்பை அளிப்பதற்கு இடமளிக்க வேண்டுமெனவும் தேர்தலின் பின் சட்டத்தை ஒழுங்கை நிலைநிறுத்தி அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென ஐந்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரியது போல அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டுமென கோருகின்றேன் என்றார்.

நேற்று நண்பகல் வரை 45% மான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதுடன், 10 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெறுவேன் என்பதில் தான் உறுதியான நம்பிக்கையில் இருப்பதாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=244:2010-01-27-03-11-16&catid=34:ceylonnews&Itemid=71

கேள்வியின் நாயகனே உன் தோல்விக்குப் பதிலேதையா?

  • தொடங்கியவர்

யார் அந்த விசமி எண்டு மக்களுக்கும் தெரியும் என்ன செய்யுறது .....பொன்சேகா...???

ஐயா, தமிழருக்கு தமிழர்தான் யாழ்ப்பாணத்தில விசமிகள் இருந்தவங்கள். இப்ப உங்களுக்கேவா???

சரிவராது இனி இராசபக்சேவ கவுக்கிறதெண்டால் ஒரே வளி ஆயுதம் தூக்கிறதுதான் 88, 89, இல ஜே வி பி மாரி நீங்களும் தொடங்குங்கோ. இராணுவ விசயம் தெரிந்தவர் எண்டபடியால் பாக்கிறதுக்கு நல்லா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'யெயனனயn' னயவநஸ்ரீ'27 துயரெயசல 2010 - 09:32 யுஆ' வiஅநளவயஅpஸ்ரீ'1264584765' pழளவஸ்ரீ'563389'ஸ

ஐயாஇ தமிழருக்கு தமிழர்தான் யாழ்ப்பாணத்தில விசமிகள் இருந்தவங்கள். இப்ப உங்களுக்கேவா???

சரிவராது இனி இராசபக்சேவ கவுக்கிறதெண்டால் ஒரே வளி ஆயுதம் தூக்கிறதுதான் 88இ 89இ இல ஜே வி பி மாரி நீங்களும் தொடங்குங்கோ. இராணுவ விசயம் தெரிந்தவர் எண்டபடியால் பாக்கிறதுக்கு நல்லா இருக்கும்.

ஜஃஙரழவநஸ

இது ஒரு நல்ல ஐடியா. எப்படியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக இந்த விசயத்தைச் சரத்தின் காதில்போட்டு வைத்துப் பின்னால் நின்று முடிந்த உதவி ஒத்தாசைகளைப் புரிவது சிற்ந்த சாணக்கியம். போதாததற்கு இந்த விசயத்தில் அனுபவப்பட்ட ஜேபியினரும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இதைவிடக் குறுக்கு வழி வேறில்லை.

நமது மூக்குத்தான் போய்விட்டதே இனியென்ன? எதிரிகளுக்குச் சகுனப் பிழையை உருவாக்கவேண்டியதுதான்.

இது மட்டுமல்ல இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கெதிரான சக்திகளின் ஆதிக்கத்தை அதிகரிப்பதிலும் ஈழத்தமிழர்கள் முன் நின்று பாடுபடவேண்டும். குறிப்பாகத் திரிகோணமலையில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் சீனா போன்ற சக்திகளின் செல்வாக்கை முன் நின்று ஊக்கப்படுத்த வேண்டும். எமது இனம் அழிக்கப்பட்போது இலங்கைக்கு முண்டுகொடுத்த அனைத்துச் சக்திகளினதும் போராடுகளாமாக இலங்கையைமாற்றித் தமிழர் அதை நடுநிலையில் நின்று பார்த்து ரசிக்கவேண்டும். ஒன்றாய் நின்று எம்மை அழிக்கத் துணைபோனவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ள வழிவகுக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.