Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன?--தேர்தலின் பின் எழுந்துள்ள கேள்வி

Featured Replies

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் அபிலாஷையும் அவர்களின் அரசியலும் எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பில் கேள்வியெழுந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது;

தேர்தலுக்கு பின்னரான சூழ்நிலையில் தமிழர் அபிலாஷைகள் தொடர்பான கேள்விகள் எம்முன் எழுந்துள்ளன. வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சி அபிலாஷை சுதந்திரத்துக்கு முன்னரிருந்தே இருந்த வருகின்றது. சம உரிமையுள்ள இதற்கப்பால் உள்ள அபிலாஷை இத்தேர்தலின் பின்னர் எந்தளவு சாத்தியம் என்பதே கேள்வியாகவுள்ளது.

ஜெனரல் சரத்பொன்சேகா வெற்றியடைந்தாலும் தமிழர்கள் தமது அபிலாஷைகளை நிறைவேற்றியிருக்க முடியுமோ என்ற சந்தேகம் உள்ள போதும் இந்த நிலைமை பின்னோக்கி செல்லாது வைத்திருந்து எதிர்காலத்தில் அடையக் கூடிய சாத்தியம் இருந்தது. வடக்கு, கிழக்கு இணைப்பானது எமது அரசியலமைப்பில் உள்ள விடயம். இது புதிய விடயமல்ல. வடக்கு,கிழக்கு இணைப்பை சாதாரண சட்டத்தின் பிரகாரம் ஒன்றையாட்சியின் கீழே வைத்திருந்து தமிழ் மக்கள் தமது மொழி, கலாசாரம், பண்பாடு என்பனவற்றைப் பாதுகாக்க முடியும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சந்திரிகா பண்டாரநாயக்கா ஆட்சியிலும் அதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலும் வடக்கு, கிழக்கு இணைப்பு நீடித்து வந்தது. தேர்தலுக்கு பின் இந்த நிலைமை பின்னோக்கி நகருமென்பதுடன் நிரந்தரமாக மறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ் தலைமைத்துவங்கள் தேர்தலின் பின் பெரிதாக சாதித்து விடுமென கூறமுடியாது.

சரியான அரசியல் வழி நடத்தலின்றியே வடக்கு மக்களின் அதிக தொகையினர் வாக்களிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ளோர் ஒவ்வொருவரும் தமக்கென தனியான கொள்கையை முன்னெடுத்ததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் தமிழர் அரசியல் அநாதைகளாகியுள்ளனர். எந்த இலக்கை நோக்கிச் செல்கின்றனர் என்பதை மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்க வேண்டும். இத்தேர்தல் மூலம் தமிழர் அரசியல் எவ்வாறு அமையப்போகின்றது என்பதும் கேள்விக் குறியாகவுள்ளது.

மா.சக்திவேல்

இது குறித்து அங்கிலிக்கன் திருச்சபையின் மத குரு வணக்கத்துக்குரிய மா.சக்திவேல் தெரிவிக்கையில்;

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தலைவர்களை வட பகுதி மக்கள் புறக்கணித்துள்ளரென்பது காட்டியுள்ளது. இதற்கு காரணம் இவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் அரசியலை உரிய முறையில் கொண்டு செல்லாததாக இருக்கலாம். அல்லது இவர்களை மக்கள் புரிந்து கொள்ளாமலிருக்கலாம்.

மூன்றாவதாக மக்கள் சிந்தனையை இவர்கள் புரிந்து கொள்ளாமலிருக்கலாம். இவர்கள் தமது அரசியலை ஒரு பக்கம் சார்ந்தே முன்னெடுத்த நிலையில் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை. கிளிநொச்சி முதல் பருத்தித்துறை வரையான பகுதி மக்களிடம் இது குறித்த கேட்டபோது நிலைப்பாடு குறித்து விளக்கவில்லையென தெரிவித்தனர்.

இத்தேர்தலை மக்கள் நிராகரித்ததாக இல்லை.நடந்து முடிந்த துன்பத்திலிருந்து மக்கள் மீட்சியடையவில்லையென்பதும் தேர்தலில் தெளிவாகின்றது

http://www.thinamurasam.com/ http://www.thinamurasam.com/ http://www.thinamurasam.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரிண்ட அடுத்த கட்டம் முந்தின கட்டம் எண்டு ஒண்டும் இல்லை. எப்பவும் ஒரே கட்டம் தான். அது தான் சிங்களவனை உலகத்திடம் போட்டு குடுப்பது. ஸ்ரீ லண்காவிண்ட ஜெனோசைட் பற்றி எல்லோருக்கும் கூறுவது தான் நாம் செய்யகூடிய முக்கிய விடயம்.

தமிழரிண்ட அடுத்த கட்டம் முந்தின கட்டம் எண்டு ஒண்டும் இல்லை. எப்பவும் ஒரே கட்டம் தான். அது தான் சிங்களவனை உலகத்திடம் போட்டு குடுப்பது. ஸ்ரீ லண்காவிண்ட ஜெனோசைட் பற்றி எல்லோருக்கும் கூறுவது தான் நாம் செய்யகூடிய முக்கிய விடயம்.

சிறி லங்காவின் இன அழிப்புக்கு காரணமாக/உதவியாக இருந்த பலர்

1. பான் கி மூன்

2. மன்மோகன் சிங்

3. சோனியா கந்தி

4. நம்பியார்

5.கருணா நிதி

..

..

..

இலங்கையின் இந்த தேர்தல் முடிவுகளால் நிம்மதியடைந்துள்ளனர்

இலங்கையின் தேர்தல் இந்திய தலையீடு அதிகம் காணப்பட்டதாக கருதப்படுகிறது

  • கருத்துக்கள உறவுகள்

சரியான முன் நோக்கிய பார்வையில்லாமல் மீண்டும் மீண்டும் தமிழ் மக்கள் மீது ஆளுந்தரப்பினரை வெறுப்படைய வைக்கும் அரசியற்போக்கை தமிழர் கூட்டணித் தலைமை கைவிடுவது இந்தச் சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமானது. ஏதோ ஆதரவு கொடுத்து விட்டோமென்பதற்காக அரசியல் எதிர்காலமேயில்லாத சரத்திற்கு வக்கலாத்து வாங்கிக் கொண்டிருக்காமல் அவரை இனிமேலாவது கைகழுவி விட்டுவிட்டு ஆகவேண்டியதைக் கவனிப்பதே சாலச்சிறந்தது.

அரசியல் தொடர்புகளற்று வெறும் இராணுவ அதிகாரியாகத் தனது காலத்தைக் கழித்துவிட்ட சரத்திற்கு எங்காவது ஓடித்தப்புவதைவிட வேறு மாற்றுவழியேதும் இருக்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அவர் தேர்தலில் பங்கெடுத்திருந்தாலும் இனிமேல் எந்தவொரு கட்சியும் அவரைத் தமது தலைவராக ஏற்று அரசியலில் ஈடுபடுத்தப்போவதில்லை. அப்படிச் செய்தால் இவ்வளவுகாலமும் தங்களது கட்சிகளைக் கட்டிவளர்த்த தலைவர்களின் கதியென்னாவது.

சிங்களமக்கள் சரத் தமிழர்களுக்குச் செய்த அனியாயங்களை நெடுங்காலம் மனத்தில் வைத்திருக்கப்போவதில்லை. இந்தத் தேர்தலுடன் அவரின் வீரதீர சாகசங்களின் அத்தியாயம் முடிந்துவிட்டது.

இனிமேல் அரசியல் வானில் அவர்பிரகாசிக்கப் போவதில்லை.

இந்த நிலையில் சரத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு அவரை நம்பித் தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் படுகுழியில் வீழ்த்தாமல் சம்பந்தர் ஐயாவும் கூட்டணியும் தங்களைச் சுதாரித்துக்கொண்டு அரசியற் சாணக்கியத்துடன் ஆளும் தரப்பினரின் சினத்தைக்கிளறிவிடாமல் செயற்படுவதே சாலச்சிறந்தது,

  • கருத்துக்கள உறவுகள்

சரத்திற்கு விழுந்த வோட்டுக்கள் அவரின் தனிப்பட்ட செல்வாக்கிற்கு விழுந்தவைபோலத் தெரியவில்லை. எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு விழுந்த வோட்டுக்களாகவே தென்படுகின்றன. சிங்கள மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் தங்கள் செல்வாக்கை இந்தத் தேர்தல் மூலம் இழந்து நிற்கும் நிலையே காணப்படுகின்றது. இதற்குக் காரணமானவராக சரத் காணப்படுகின்றார். இருந்த மயிரும் இழந்தாய் போற்றி என்றதைப் போல எதிர்க்கட்சிகள் சரத்தென்னும் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கிவிட்ட அவல நிலையே காணப்படுகின்றது.

அமெரிக்கப் பிரஜையான அவர் எல்லோரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு ஆளைவிட்டால் போதுமென்று ஓடித்தப்பும் முயற்சியில் வேறு இறங்கிவிட்டார்.

பெரும்பான்மைச் சிங்களவர்களைக் கொண்ட எதிர்க்கட்சிகளே மூக்குடைபட்டுத் தடுமாறி நிற்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மாத்திரம். அதனால் மெதுவாக யு ரேண் எடுத்து மகிந்தவுடன் ஒத்துழைக்க முற்படுவதே சரியான வழியாகத் தென்படுகின்றது.

(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகளையிட்டு இங்கு ஆய்வு செய்யப்படவில்லை. அதற்குரிய தகுதியும் திறனும் அரசியல் சாணக்கியமும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத்திற்கு விழுந்த வோட்டுக்கள் அவரின் தனிப்பட்ட செல்வாக்கிற்கு விழுந்தவைபோலத் தெரியவில்லை. எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு விழுந்த வோட்டுக்களாகவே தென்படுகின்றன. சிங்கள மக்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் தங்கள் செல்வாக்கை இந்தத் தேர்தல் மூலம் இழந்து நிற்கும் நிலையே காணப்படுகின்றது. இதற்குக் காரணமானவராக சரத் காணப்படுகின்றார். இருந்த மயிரும் இழந்தாய் போற்றி என்றதைப் போல எதிர்க்கட்சிகள் சரத்தென்னும் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கிவிட்ட அவல நிலையே காணப்படுகின்றது.

அமெரிக்கப் பிரஜையான அவர் எல்லோரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு ஆளைவிட்டால் போதுமென்று ஓடித்தப்பும் முயற்சியில் வேறு இறங்கிவிட்டார்.

பெரும்பான்மைச் சிங்களவர்களைக் கொண்ட எதிர்க்கட்சிகளே மூக்குடைபட்டுத் தடுமாறி நிற்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்மாத்திரம். அதனால் மெதுவாக யு ரேண் எடுத்து மகிந்தவுடன் ஒத்துழைக்க முற்படுவதே சரியான வழியாகத் தென்படுகின்றது.

(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய பணிகளையிட்டு இங்கு ஆய்வு செய்யப்படவில்லை. அதற்குரிய தகுதியும் திறனும் அரசியல் சாணக்கியமும் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை).

மானம் கெட்டு போய் மகிந்தாவை நக்க வேண்டிய தேள்வை இல்லை, மகிந்தாவை நக்கினாலும் அவன் அவர்களுக்கு எழும்புதுண்டுதான் போடுவானே ஒழிய, ஒரு பருக்கை தன்னும் தமிழனுக்கு தரப்போவதில்லை, இந்த கொடுமை எட்டு வருடத்துக்கு இன்னமும் தொடரப்போகிறது.

பாரளு மண்றத்தில் தனித்து போட்டி யிட்டு வெண்றாலும் அதை வைத்து இப்போது மாதிரி ஊளயிடத்தான் முடியும் ஒரு பிரயோசனமும் இல்லை , இதற்க்காகத்தானே இங்கே இருக்கும் பலர் மகிந்தா வரவேண்டும் என்று ஆசை பட்டார்கள், அத்தோடு சர்வதேசம் வந்து வாய்ப்பன் தீத்தும் என்று வாய்பார்த்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்க வேண்டியதுதான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது மட்டும் என்ன? மானம் கெடாமலா போய்விட்டது. இராணுவத்தை வழிநடத்தி எம் இனத்தை ஈவிரக்கமின்றிக் கொன்றவனின் காலை நக்குவதற்குப் பெயர் என்ன? தன்மானத்தோடு நக்குகிறார்கள் என்பதா?

இங்கே நாம் இருப்பதற்குள் என்ன தெரிவு என்பதை எமது இனத்தின் எதிர்கால சுபீட்சம் கருதித் தேர்வுசெய்ய வேண்டுமோயொழிய மானம் அவமானமெல்லாம் பார்க்க முடியாது. நமது இன்றைய நிலை: நாம் சிங்களதேசத்தில் எதுவித உரிமையுமற்ற அரசியல் அனாதைகள், எமது தயவு, அதரவு சிங்களத் தலைவர்களுக்கு வேண்டிதேயில்லை என்பதே. அதைப் புரிந்து கொண்டு செயற்படுவதே முக்கியம்.

(எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை இதற்குள் நான் உள்ளடக்கவில்லையென்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானம் கெட்டு போய் மகிந்தாவை நக்க வேண்டிய தேள்வை இல்லை, மகிந்தாவை நக்கினாலும் அவன் அவர்களுக்கு எழும்புதுண்டுதான் போடுவானே ஒழிய, ஒரு பருக்கை தன்னும் தமிழனுக்கு தரப்போவதில்லை, இந்த கொடுமை எட்டு வருடத்துக்கு இன்னமும் தொடரப்போகிறது.

பாரளு மண்றத்தில் தனித்து போட்டி யிட்டு வெண்றாலும் அதை வைத்து இப்போது மாதிரி ஊளயிடத்தான் முடியும் ஒரு பிரயோசனமும் இல்லை , இதற்க்காகத்தானே இங்கே இருக்கும் பலர் மகிந்தா வரவேண்டும் என்று ஆசை பட்டார்கள், அத்தோடு சர்வதேசம் வந்து வாய்ப்பன் தீத்தும் என்று வாய்பார்த்து கொண்டு இருக்கிறார்கள், அவர்கள் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்க வேண்டியதுதான். :wub:

மஹிந்த வந்தாலென்ன,பொன்சேகா வந்தாலென்ன இல்லை எந்த சிங்களவன் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ‌ருக்கு ஒரு தீர்வும் கிடைக்காது என்பது அரிவரிக்குழந்தைக்கும் தெரியும்.

தமிழர் எமது உரிமைகளை பிடுங்கி எடுக்கவேண்டும்(அது தான் முள்ளிவாய்க்காலுடன் முடியாமல் போயிட்டுதே)

இல்லை யாராவது பிடுங்கி எடுத்து தரணும்(ம்...நடக்கிற காரியமா)...

இல்லை என்றால் எட்டு வருடம் என்ன எண்பது வருடம் என்றாலும் சிங்களவன் சொல்லுறதை தான் கேட்க வேண்டிய பரிதாப நிலை

நாங்கள் இங்கை இருந்து கொண்டு மஹிந்த வந்தாலென்ன,சரத் வந்தாலென்ன விசிலடிச்சு பழகிட்டம்..ஆனால் அங்கை இருக்கிறதுகள் கூழோ,கஞ்சியோ குடிக்க வேணும் என்றால் மஹிந்த கூட சேருவதிலை எந்த தப்பும் இல்லை.(இது என் தனிப்பட்ட கருத்து)

அதுக்காக நான் தமிழர் எல்லாரும் சும்மா இருக்கணும் சிங்களவன் தருவான் என்று சொல்ல வரவில்லை...எமது சுயநிர்ணய உரிமையை பெற தமிழர் தம்மால் இயன்ற அத்தனை வழிகளினூடும் போராடிக்கொண்டு..அங்கிருக்கிற மக்கள் கோபுரத்தில் வாழாவிட்டாலும் ஆகக் குறைந்தது ஒரு குடிசையிலையாவது வாழ்வதற்கு ஆட்சியிலிருக்கும் சிங்களவனுடன் ஒத்துப் போறது தான் சிறந்தது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.