Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் கோரிக்கையை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர் – சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைகளை தமிழ் மக்கள் நிராகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது தடவையாக ஆட்சி பீடமேறுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ற வகையில் தமிழ் முஸ்லிம் மக்கள் செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை மக்களே கூடுதல் ஆதரவு வழங்கியதாகவும், இம்முறையும் அதே நிலைமையே தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் புதிய பதவிக் காலத்தில் ஆட்சி முறையில் ஜனாதிபதி மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அரச சொத்துக்கள் மற்றும் அரச ஊடகங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், இவை தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு பகுதி மக்களுக்கு பல்வேறு வழிகளில் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் மதுபானம், தையல் இயந்திரம் என பல்வேறு லஞ்சப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், மக்களின் நிலைப்பாட்டை இவ்வாறான லஞ்சங்ளின் மூலம் மாற்ற முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டமொன்று தொடர்பில் யதார்த்தபூர்வமான முற்சி மேற்கொள்ளப்பட்டால் அதற்கு தமது கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: ஜி.ரி.என்

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாளுக்கு வேற வேலையில்லையே. சும்மா எதுக்கு மகிந்தவோட போய்ச் சொறிஞ்சு கொண்டு நிக்கிறார். உவர் சொன்னமாதிரி மொத்தத் தமிழரும் சரத்துக்கு வோட்டுப் போட்டிருந்தாலும் மகிந்தவுக்குக் கிடைச்ச மஜோரிட்டியைக் கூடத் njhl;bUf;f முடியாது.

வரிஞ்சு கட்டிக்கொண்டு எங்களுக்குத் தமிழீழம்தான் வேணும் அதுக்காக நாங்க தொடர்ந்து போராடுவமெண்டு குரல் கொடுத்தால் அது வேற விசயம்.

இலங்கையிர ஒற்றையாட்சியமைப்பை ஏற்றுக்கொள்ளுறதாகச் சத்தியப்பிரமாணமெடுத்துப்போட்டு, பாராளுமன்ற ஜனநாயகத்தில நம்பிக்கைவைத்து சரியான கணிப்பீடு இல்லாமல் சரத்தை ஆதரிச்சி மூக்குடைபட்டுப் போட்டு தொடர்ந்தும் ஆளும் தரப்பின் எரிச்சலைக் கிளறுறது மூலம் உவர் தமிழனுக்குப் படுகுழியைத்தான தொடர்ந்து வெட்டமுடியும்

Edited by karu

எது எப்படியோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரத்தை ஆதரித்தது சரி பிழையா என்று வாதாட வரவில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் முக்கியமாக கிழக்கில் (கடந்த 3 , 4 வருடமாக கருணா , பிள்ளையான், மற்றும் மகிந்த வின் செல்வாக்கு அதிகமாக காணப்பட்டது அதற்கு உதாரணம் அங்கு நடந்த உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் தெரிந்தது. யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலிலும் கள்ளவொட்டுப்போட்டோ என்னவொ அரச சார்பாளர்கள்தான் முன்னிலைவகித்தார்கள். ஆனால் இம்முறை எந்தப் பிரச்சாரமும் இல்லாமல் தமிழ்தேசியக்கூட்டமைப்பு சரத்தை ஆதரிக்கிறார்கள் என்ற காரணத்தக்காக தமிழர் தாயகத்தில் மட்டும் சரத்தை வெற்றியீட்டவைத்துள்ளார்கள் தமிழர்கள். ஆனால் ஒரு விடயம் வெளிநாடுகளில் இருந்து கொண்டு கதைப்பது போல் இங்கு நிலமை இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிடைத்தை வைத்து கரைசேர்வதே புத்திசாலியின் செயல் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

னைநா!தலைப்பை மாத்து!!!!!!!ததேகூ கோரிக்கையைத் தமிழ்மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்று.ததேகூட்டமைப்பு சரத்துடன் சேர்ந்து நின்றதால் சரத்திற்கு நியாயமாகக் கிடைக்கக் கூடிய சிங்கள வாக்குகளையும் கிடைக்காமல் செய்தது தான் மிச்சம்.மொத்தத்தில் தானும் கெட்டு தன்னோடு சேர்ந்தவர்களையும் கெடுத்தது தான் கண்ட மிச்சம்.இந்தத் தேர்தலில் அமைதியாக இருந்திருந்தால் தமிழ் மக்கள் தீர்மானித்திருப்பார்கள்.இந்தியாவின் கதையைக் கேட்காமல் அரசியல் செய்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது.தேவையில்லாமல் புலிகள் 2005 இல் தவறு செய்து விட்டார்கள் என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு வேணும் என்றும் கதைக்கப் போய் மானமிழந்ததுதான் மிச்சம்.தமிழ் மக்கள்(வடக்கு கிழக்கு கொழும்பு மலையகம் உட்பட) ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் தமிழ் அரசியல் வாதிகள் தான் பிரிந்து நிற்கிறார்கள் என்பதை பறை சாற்றி இருக்கிறது இந்தத் தேர்தல்.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.