Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தாவின் பெருவெற்றியினதும் ஜெனரல் பொன்சேகாவின் தோல்வியினதும் பரிமாணங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவின் பெருவெற்றியினதும் ஜெனரல் பொன்சேகாவின் தோல்வியினதும் பரிமாணங்கள்

mahindasarath2010.jpg

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை 1994 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் பொதுஜன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க பெற்ற பெரும்பான்மை வாக்குகளுக்கு அடுத்தபடியாக கூடுதலான பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டியவராக மகிந்த ராஜபக்ஷ விளங்குகிறார்.

2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை 2 இலட்சத்துக்கும் குறைவான பெரும்பான்மை வாக்குகளினாலேயே மகிந்தாவினால் தோற்கடிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த தடவை மகிந்த ராஜபக்ஷவுக்கு அளித்த ஆதரவை விடவும் மிகவும் கூடுதலான ஆதரவை தென்னிலங்கை மக்கள் அளித்து அவருக்கு பெருவெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியாகத் தொடங்கிய சில மணி நேரத்துக்குள்ளாகவே இந்தத் தேர்தலையா இதுவரையான தேர்தல்களை விடவும் கடுமையான போட்டி கொண்ட தேர்தலென்று வர்ணித்திருந்தோமென்று அரசியல் அவதானிகள் வியப்படைந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

மகிந்தாவின் பெருவெற்றியினதும் ஜெனரல் பொன்சேகாவின் தோல்வியினதும் பரிமாணங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டியது முக்கியமானதாகும். சுமார் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னர் இலங்கையில் நடைபெற்ற முதலாவது தேசியத் தேர்தல் என்றவகையில் இதற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் சமுதாயங்கள் மத்தியில் காணப்படுகின்ற மீள் நல்லிணக்கத்துக்கான நாட்டம் மற்றும் ஜனநாயக முதிர்ச்சி ஆகியவற்றின் மட்டங்களைப் பிரதிபலிப்பதாக இத்தேர்தல் அமையுமென்று எதிர்பார்க்கப்பட்டது. வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களும் இத் தேர்தலில் வாக்களித்திருக்கும் முறைக்கும் நாட்டின் எஞ்சிய பகுதிகளில் பெரும்பான்மை சிங்கள மக்கள் வாக்களித்திருக்கும் முறைக்கும் இடையே காணப்படக்கூடியதாக இருக்கின்ற பாரிய வேறுபாடு இனங்களுக்கிடையே நல்லிணக்க உணர்வை ஏற்படுத்துவதற்கு அரசியல் சமுதாயத்தினால் செய்யப்பட வேண்டியிருக்கும் பணிகளின் கனதியை உணர்த்தி நிற்கிறது என்பதில் சந்தேகமில்லை.

2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கில் அதிகப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. விடுதலைப் புலிகளினால் விடுக்கப்பட்ட தேர்தல் பகிஷ்கரிப்பு அழைப்பே இதற்கு காரணமாகும். அந்தப் பகிஷ்கரிப்பு காரணமாக தேர்தலில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட முடிவே மாறுதலாக அமைந்தது. இத்தடவை விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு 8 மாதங்களின் பின்னர் நடைபெற்ற தேர்தலிலும் வடக்கில் தமிழ் மக்களினால் பெருமளவில் வாக்களிக்க முடியாத சூழ்நிலையே இருந்தது. போரின் முடிவுக்குப் பின்னர் வடபகுதித் தமிழ் மக்கள் ஜனநாயக செயன்முறைகளில் சுதந்திரமாகக் பங்கேற்கக் கூடிய சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் பெருமையுடன் கூறுவதை ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பில் பங்கு பற்றக்கூடியதாக இருந்த அந்தப் பகுதி மக்களின் எண்ணிக்கை நிச்சயமாகப் பரிகாசம் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

தென்னிலங்கையின் பிரதான எதிரணிக் கட்சிகளைப் பொறுத்தவரை இத்தடவை தேர்தலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு முக்கியமான பிரச்சினையாக முன்வைக்கப்பட்டது. மகிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைத்திருக்கும் பேராதரவைப் பார்க்கும் போது ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக் கோரிக்கை மக்களின் அக்கறைக்குரியதாக இல்லை என்பது மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய அரசியல் தந்திரோபாயங்களிலும் உண்மையான பிரச்சினைகளிலும் கூடுதலான அளவுக்கு அக்கறை காட்ட வேண்டிய அவசியம் எதிரணிக் கட்சிகளுக்கு இருப்பதை தேர்தல் முடிவுகள் பிரகாசமாக உணர்த்தி நிற்கின்றன. ஜெனரல் பொன்சேகாவுக்கு தென்னிலங்கையில் கிடைத்திருக்கும் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இலங்கையின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியென்று ஜனதா விமுக்கி பெரமுனை (ஜே.வி.பி.) யினர் தங்களை அழைப்பதில் அல்லது நினைப்பதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா என்று கேட்காமலிருக்க முடியவில்லை. ஜே.வி.பி.யின் தலைவர்கள் தங்கள் கொள்கைகளையும் அரசியல் அணுகுமுறைகளையும் மீள்பரிசீலனை செய்யவேண்டியது அவசியமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, நேற்றைய தினம் மாலை தேர்தல் செயலகத்தில் வைத்து தேர்தல் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க ஆற்றிய உரை இலங்கையில் ஜனநாயகச் செயற்பாடுகள் மற்றும் சட்டம், ஒழுங்கை கடைப்பிடிப்பதில் அரசியல் கட்சிகள் காட்டுகின்ற "அக்கறையின் இலட்சணத்தை உலகிற்கு புரியவைத்திருக்கும் என்று நம்புகிறோம். அந்த உரை உண்மையில் இலங்கையின் அரசியல் சமுதாயத்தின் மீதான ஒரு குற்றப்பத்திரிகை

கொழும்பிலிருந்து காண்டீபன்

நன்றி - மனிதன் இணையம்

Edited by nochchi

தேர்தல் முடிவுகள்:

(1) தமிழர் கேட்பதை வழங்கப்போவதில்லை - ஒற்றை ஆட்சிக்குள் தீர்வு - வடக்கு கிழக்கு இணைக்கப்படாது என்ற மகிந்தவின் இனவாத பேச்சுக்கு, இலங்கையை 1200 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமித்திருக்கும் - தமிழனின் சொத்தை - உரிமைகளை ஆக்கிரமித்து, அடித்துபறித்து, கடத்திபறித்து, கொள்ளையடித்து வாழ்ந்துகொண்டிருக்கும் - வந்தேறு குடிகளான சிங்களவனின் உறுதியான ஆதரவையும்,

(2) மகிந்தவின் மேற்படி இனவாத பேச்சுக்களை, ஜனநாயக விரோத செயல்களை, தமிழினப் படுகொலைகளை உறுதியாக நிராகரித்திருக்கும் இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களின் செய்தியையும்,

(3) கூட்டமைப்பு, மலையக, ஏனைய சிறு தமிழ் தலைமைகள், புத்தி ஜீவிகள் என தம்மை முன்னிறுத்தியவர்கள் தூர நோக்கின்றி எடுத்த யதார்த்தத்துக்கு முரணான முடிவுகளை பெரும்பாலான தமிழ் மக்கள் நிராகரித்திருப்பதையும்

தெளிவாக காட்டுகிறது.

பேர் தான் ஆசான் எழுத்துக்கள் சிறுவன் போல் உள்ளது. நிஜ உலகத்திற்கு வாங்கோ?

பேர் தான் ஆசான் எழுத்துக்கள் சிறுவன் போல் உள்ளது. நிஜ உலகத்திற்கு வாங்கோ?

அர்ஜுன் - சிங்கள பயங்கரவாதிகளுடன் இணக்கப்பாட்டு அரசியல் நடாத்தும் உங்கள் தலைவரின் பெயரை விட்டுவிடேன் என்ற கோபமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.