Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத்தின் நிழல் இல்லாத ஓர் சூழ்நிலையில் இலங்கை முதல் தடவையாக சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது ‐ பரக் ஒபாமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தின் நிழல் இல்லாத ஓர் சூழ்நிலையில் இலங்கை முதல் தடவையாக சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது ‐ பரக் ஒபாமா

இலங்கை அரசாங்கத்துடனான அமெரிக்காவின் உறவுகள் தொடர்ச்சியாக பேணப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சமாதானத்தையும், சுபீட்சத்தையும் கட்டியெழுப்ப அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஒபாமா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

1789ம் ஆண்டு முதல் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தின் நிழல் இல்லாத ஓர் சூழ்நிலையில் இலங்கை முதல் தடவையாக சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கதென அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை, குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், சட்டம் ஒழுங்கு, ஊடக சுதந்திரம் போன்ற விடயங்கள் தேசத்தை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கையின் போது முக்கியத்துவம் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

globaltamilnews

உங்களுடைய விசயத்தில கவனமாக இருங்க, அப்பாவி மக்கள் என்ன கேடுகெட்டாலும் பரவாயில்லை.---

பயங்கரவாதத்தின் நிழல் இல்லாத ஓர் சூழ்நிலையில் இலங்கை முதல் தடவையாக சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது ‐ பரக் ஒபாமா

மகிந்தவின் ரஷ்ய பயணம் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது - அதன் விளைவோ இது?

கீழைத்தேசத்தில் மேற்குலக நகர்வுகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவது அவர்களின் பாரிய பலவீனத்தையும், பிற்போக்குத்தனமான செயற்பாடுகளையும் வெளிப்படுத்துகிறது. புலிகளின் மீது விதிக்கப்பட்ட தடை ஓர் உதாரணம்.

ஒபாமாவின் சுதந்திரதினச் செய்தி அவரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. அத்துடன் இதை சிங்கள ராஜதந்திரத்தின் வெற்றியாகவும், அமெரிக்க தமிழர்களின் ராஜதந்திர நகர்வுகளின் பாரிய தோல்வியாகவும் கருதமுடியும்

  • கருத்துக்கள உறவுகள்

.

ஒபாமாவின் சுதந்திரதினச் செய்தி அவரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. அத்துடன் இதை சிங்கள ராஜதந்திரத்தின் வெற்றியாகவும், அமெரிக்க தமிழர்களின் ராஜதந்திர நகர்வுகளின் பாரிய தோல்வியாகவும் கருதமுடியும்

உண்மைதான்

இதை அவர் அறியும்படி செய்யவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் ரஷ்ய பயணம் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது - அதன் விளைவோ இது?

கீழைத்தேசத்தில் மேற்குலக நகர்வுகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவது அவர்களின் பாரிய பலவீனத்தையும், பிற்போக்குத்தனமான செயற்பாடுகளையும் வெளிப்படுத்துகிறது. புலிகளின் மீது விதிக்கப்பட்ட தடை ஓர் உதாரணம்.

ஒபாமாவின் சுதந்திரதினச் செய்தி அவரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. அத்துடன் இதை சிங்கள ராஜதந்திரத்தின் வெற்றியாகவும், அமெரிக்க தமிழர்களின் ராஜதந்திர நகர்வுகளின் பாரிய தோல்வியாகவும் கருதமுடியும்

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் சரியோ பிழையோ புலிகள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள்..! பயங்கரவாதத்தின் நிழலில் இருந்து விடுவிப்பு என்பதற்கும் பயங்கரவாதத்தில் இருந்து விடுவிப்பு என்பதிலும்கூட வித்தியாசங்கள் இருக்கின்றன. இது முந்தைய அமெரிக்க நிலைப்பாட்டிலிருந்து சற்று இளக்கமான போக்கு எனவே கொள்ள வேண்டும். :wub:

அதுபோக, ஒபாமா முழுச்செய்தியிலும் இருந்து சிங்களவர்கள் எடுத்துக்கொண்டது, பயங்கரவாதத்தின் நிழலில் இருந்து இலங்கை விடுபட்டுவிட்டது என்பதுவாகும். ஆகவேதான் அவர்களது செய்தித் தளங்கள் எல்லாம் அந்த வரிகளையே தலைப்பாக்கி இருக்கின்றன. அவர்களின் தளங்களில் இருந்து செய்தியை எடுத்து மொழிபெயர்த்துப் போடும் நாமும் அதையே தமிழில் தலைப்பாக்கி இருக்கிறோம். :(

வேற்று நாட்டு ஊடகங்கள் இச்செய்திக்கு என்ன தலைப்பைக் கொடுத்திருக்கின்றன என்று ஒரு தேடல் செய்ததில், இந்திய செய்தி நிறுவனமான இந்துஸ்தான் ரைம்ஸில் கூட தலைப்பு வேறுமாதிரியாக இருக்கிறது..! இனங்களிடையே நல்லுறவை மீளுருவாக்கம் செய்யுமாறு ராஜபக்சவிடம் ஒபாமா கோரிக்கை என்கிற வரிகளே அங்கே தலைப்பாக்கப் பட்டிருக்கின்றன. ^_^

ஏற்கனவே கிலியில் அரண்டுபோயிருக்கும் எங்களை சிங்களவனின் தளத்தில் இருந்து அப்படியே செய்திகளை உருவுவதன் மூலம் மேலும் கிலிகொள்ளச் செய்ய வேண்டாம் என எமது ஊடகங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்..! ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.