Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: மீன்களை பறித்து இலங்கை கடற்படை அட்டகாசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 9, பிப்ரவரி 2010 (11:55 IST)

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: மீன்களை பறித்து இலங்கை கடற்படை அட்டகாசம்

நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதால் நாகை மீனவர்கள் ஆவேசமடைந்தனர்.

நாகை அக்கரை பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு 2 விசைபடகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சில கி.மீ தூரம் அவர்கள் சென்ற போது திடீரென இலங்கை கடற்படையினர் 2 படகுகளையும் சுற்றி வளைத்தனர்.

இலங்கைடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 3 முறை சுட்டனர். மேலும் தண்ணீரிலும் சுட்டனர். மேலும் மீனவர்கள் பிடித்த மீன்களை பறிமுதல் செய்து படகையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அக்கரைபேட்டை மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மீனவர்களை எச்சரித்து இலங்கை கடற்படையினர் அனுப்பினர்.

இன்று காலை கரைக்கு திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூடு குறித்து மற்ற மீனவர்களிடம் தெரிவித்தனர்.

நக்கீரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெட்கம் மானம்கெட்ட இந்திஅரசும் அதன் மாக்களும். ஒன்று இந்திஅரசு சிங்களத்தை தண்டிக்கவேண்டும்.

அட,அதுதான் வேண்டாமய்யா...இந்த தமிழ்நாட்டுமக்கள் இந்த அட்டகாசத்துக்கு எதிராக பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் செய்யவில்லை.இனிச் செய்யப்போவதும் இல்லை. புதிதாக வந்த அஜித் படம்பார்த்து பரவசப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எது அடாவடி? தீவுத்திடல்போல் நூற்றுக்கணக்கில் விசைப்படகுகளுடன் இலங்கைத்தீவின் கடற்பிரதேசத்திற்குள் வந்து வந்து மீன்பிடிப்பது மட்டுமல்லாது, எமது மீனவர்களது வலைகளையும் தங்களது விசைப்படகுகளினால் குறுக்கமறுக்க ஓடி அறுத்துப்போட்டுப்போவினம் அவர்களைச் சும்மா பாத்துக்கொண்டிருங்கோ எனக்கூற வருகிறீர்களா? நாட்டுக்குப்போய்ப் பாருங்கோ அங்கு எமது மீனவர்கள் படும் அவலத்தை, அதன்பின்பு கருத்துக்களை எழுதுங்கோ. எல்லாவிடையங்களையும் ஒரே நிறத்துடன்கூடிய கண்ணாடியுடன் பார்க்கவேண்டாம். இலங்கை தொடக்கம் அந்தமான் தீவுவரைக்குமான கடற்பிரதேசம் முழுமையுமே இலங்கைத்தீவின் இறைமையுள்ள பிரதேசம். அப்பிரதேசத்தில் அந்நியர் எவர் வரினும் தடைசெய்யப்பட்டே ஆகுதல்வேண்டும். தொப்புள்கொடி உறவு அது இது எனக்கூறிக்கொண்டு எமது முதலுக்கே மோசம் பண்ண இடமளிக்க முடியாது. இவர்களது தொப்புள் கொடி உறவு முள்ளிவாய்க்காலில் தெரிந்ததுதானே? துடிக்கத்துடிக்கத் தீயினில் வெந்தானே முத்துக்குமாரன் அவன் தன்னைத் தீயிடக்காரணம் சிங்களவணோ அன்றேல் இந்தியநடுவன் அரசோ இனஅழிப்பினை நிறுத்தும் என்பதற்காகவல்ல, தமிழ்நாட்டத்தமிழர்களை விழிப்படையச் செய்யவே அவனது சாவினாலேயே முடியாத காரியம் எவரால் முடியும். ஆயிரம் ரூபாயும், புரியாணிப்பொட்டலமும் போதும் தமிழ்நாட்டுக்காரன் உணர்வுகளைக் கட்டிப்போட. அதுக்கும் மசியவில்லையெனில் மானாட மயிலாட, மெகாத்தொடர்கள், தமிழகத்தில் எதிர்காலங்களின் திரைப்படங்கள் இவைகளால் மசிந்துவிடுவான் தமிழன்.

எது அடாவடி? தீவுத்திடல்போல் நூற்றுக்கணக்கில் விசைப்படகுகளுடன் இலங்கைத்தீவின் கடற்பிரதேசத்திற்குள் வந்து வந்து மீன்பிடிப்பது மட்டுமல்லாது, எமது மீனவர்களது வலைகளையும் தங்களது விசைப்படகுகளினால் குறுக்கமறுக்க ஓடி அறுத்துப்போட்டுப்போவினம் அவர்களைச் சும்மா பாத்துக்கொண்டிருங்கோ எனக்கூற வருகிறீர்களா? நாட்டுக்குப்போய்ப் பாருங்கோ அங்கு எமது மீனவர்கள் படும் அவலத்தை, அதன்பின்பு கருத்துக்களை எழுதுங்கோ.

இந்த உண்மையை இரு நாட்டு தமிழர்களும் உணரவேண்டும்.

கபட கொலைஞர் கருணாநிதி வட இந்திய பயங்கரவாதிகளின் கைப்பொம்மையாகி, தமிழக மீனவர்களுக்கு அவர்களது எல்லைகளை தெளிவாக சொல்லாமல், ஈழ - தமிழ்நாட்டு தமிழர்களை சிங்களவன் கைகளால் அழித்து, மகிழ்ந்து வருகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.