Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகத்தில் எண்ணெய் வள தேடுதல் வேட்டை ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் தாயகத்தில் எண்ணெய் வள தேடுதல் வேட்டை ஆரம்பம்

cairn.jpg

சிறிலங்காவில் எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்டுள்ள கெய்ர்ன் இந்தியா [Cairn India] நிறுவனம் அடுத்த மாதம் துவங்க இருக்கும் சோதனை துளையிடல் திட்டத்தின் ஒரு பகுதியாக பெருங்கடலின் நீரோட்டம், காற்று வீச்சு தொடர்பான விபரங்களை சேகரிக்கும் மற்றும் கண்காணிக்கும் பணியைத் தொடக்கியது.

மன்னார் வளைகுடாவின் கடல் வளம், நீரோட்டம் மற்றும் காற்று வீச்சு தொடர்பான இந்த வளிமண்டல ஆய்வுகளின் துணை ஒப்பந்தம் சிறிலங்காவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என ஆய்வை பார்வையிட்ட சிறிலங்க பெட்ரோலிய வளம் மற்றும் மேம்பாட்டு செயலக தலைவர் நெயில் டி சில்வா [Neil de Silva] தெரிவித்தார்.

துளையிடப்படும் இடங்களில் அலை வீச்சின் அளவு மற்றும் பெருங்கடலின் தற்போதைய திடத்தன்மை ஆகியவற்றை கண்டறிய ஆய்வுக் கப்பல் ஒன்று தேவையான உபகரணங்களுடன் அடுத்த மாதம் கடலுக்கு அனுப்பப்படும் என்று மேலும் தெரிவித்தார்.

கெய்ர்ன் இந்தியா [Cairn India] வேலைத் திட்டப்படி அக்டோபர் 1, 2011க்கு முன்னால், இந்நிறுவனம் மூன்று சோதனை கிணறுகளை துளையிடும்.

இந்நிறுவனம் மன்னார் வளைகுடாவில் பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வு மதிப்பீடுகளை முடித்து விட்டதாகவும் அந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் எந்த இடங்களில் தோண்டலாம் என்பதை கண்டறியும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டுள்ளது.

கெய்ர்ன் இந்தியா(Cairn India) நிறுவனம் சமீபத்தில் விடுத்துள்ள அறிக்கையில் டிசம்பரில் முடிக்கப்பட்ட பூகம்பம் பற்றிய முப்பரிமாண ஆய்வு மதிப்பீடுகளின் படி குறைந்தபட்ச வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட 1450 சதுர கிலோமீட்டர்களை விட 20 சதவிகிதம் அதிகமாக தேவைப்படும் என தெரிவித்துள்ளது.

இந்த முப்பரிமாண பூகம்ப ஆய்வு மதிப்பீடுகள் சர்வதேச அளவில் மிகப்பெரிய பூகம்பவியல் ஒப்பந்தகார நிறுவனமான Compagnie General de Geophysique Veritas [CGGV] மூலமே செய்யப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீடுகள் மூலம் மண்ணியல் துறை தொடர்பான தகவல்களை புரிந்து கொள்ளவும் அத்தகவலின் படி எண்ணெய் மற்றும் வாயு இருக்கும் இடங்களை கண்டறியும் வாய்ப்புக்கள் ஏற்படும் என்றும் கெய்ர்ன் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் முப்பரிமாண மதிப்பீடுகள் தொடர்பான மீள் ஆய்வுகள் அனைத்தும் முடிந்த பின் துளை தோண்டுவதற்கான ஒப்பந்தத்தை டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனம் தொடக்கும்.

முதல் சோதனை கிணறை 2011 முதல் அரையாண்டுக்குள் அதாவது ஏப்ரல் மாதத்தில் தோண்டுவதன் மூலம் காவேரி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சோதனைகள் மற்றும் ஆய்வின் மூலம் ஹைட்ரோ கார்பன் இருப்பதை உறுதி செய்யும் தன் திட்டத்தை கெய்ர்ன் இந்தியா முடிக்கும்.

நீருக்கடியில் 3000 சதுர கிலோமீட்டர் பகுதியில் 400 மீட்டர்கள் கிழக்கிலும் 1900 மீட்டர்கள் வரை மேற்கிலும் இருக்கும் எண்ணெய் வளங்களை கண்டறியும்.

VANNI ONLINE

  • கருத்துக்கள உறவுகள்

பூகம்பம் பற்றிய முப்பரிமாண ஆய்வு "geological 3D survey" என்பதற்கு புவிவள முப்பரிமாண ஆய்வு அல்லது மண்ணியல் ஆய்வு என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு.

ஏனைய இரு பகுதிகளில் கிணறு தோண்ட சீனாவும் நோர்வேயும் தயாராகி வருகின்றனராம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.