Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாண நூலகத்திற்கு போதுமான வாசகர்கள் வருவதில்லை; விடுப்பு பார்க்க வருவோரே அதிகம் - நூலகர் கவலை

Featured Replies

ஏராளமான சுற்றுலா பயணிகள் நூலகத்தை விடுப்பு பார்க்கும் ஆர்வத்துடன் அங்கு வருவதாகவும், நூலகத்திற்கு தேவை வாசகர்களே அன்றி பார்வையாளர்கள் அல்ல என்ற தன் வருத்தத்தையும் தலைமை நூலகர் தெரிவித்துள்ளார்.

யாழ்பாண நூலகத்தின் தலைமை நூலகர் தனபாலசிங்கம் தன்னைச் சந்தித்த The Christian Science Monitor என்னும் ஊடகத்தின் செய்தியாளரிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்பாணத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த நூலகம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா..? என்னும் கேள்வியுடன் அச்செய்தியாளர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

தமிழ் மக்கள் வாழும் முக்கிய பகுதியான யாழ்ப்பாணத்தில் குண்டுகளால் தகர்த்தெறியப்பட்ட பல கட்டிடங்களை அழியாத நினைவு சின்னங்களாக விட்டுச் சென்றுள்ளது பல வருடங்களுக்கு பின் முடிவுக்கு வந்த குரூரமான உள்நாட்டுப் போர்.

1981 ஆம் ஆண்டு தமிழர் விரோத தீய சக்திகளால் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகம் இந்த அடையாள சின்னங்களில் முக்கியமான ஒன்று.

சுமார் 100,000 புத்தகங்கள் மட்டுமின்றி ஏராளமான கையெழுத்துப் பிரதிகள் மற்றும் ஈடு செய்ய முடியாத தமிழ் ஓலைச் சுவடிகளும் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், தமிழ் மக்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத துயரையும் கலாச்சார வெற்றிடத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் எதிர்ப்பு இயக்கங்கள் வலுப்பெறவும் காரணமாய் அமைந்தது.

இறுதியாக சிறிலங்கா அரசால் 2003 ஆம் ஆண்டு மீண்டும் இந்த நூலகம் கட்டியெழுப்பப்பட்டு ஏராளமான தமிழ் மற்றும் ஆங்கில நூல்களுடன் திறந்து வைக்கப்பட்டிருப்பினும் கூட மீண்டும் இந்த நூலகத்தை உயிர்பிப்பதென்பது மிகப்பெரிய சவால் என தலைமை நூலகர் தனபாலசிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்

போருக்குப்பின் ஏற்பட்ட அமைதி சில நிவாரணங்களை கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.

இராணுவ சோதனை மையங்களால் தடை செய்யப்பட்ட நூலகத்திற்கு செல்லும் சாலைகள் திறக்கப்பட்டிருப்பது மீண்டும் மக்கள் அங்கு செல்வதற்கான சுலபமான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

சிறிலங்காவின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நூலகத்தை பற்றி விடுப்பு பார்க்கும் ஆர்வத்துடன் அங்கு வருவதாகவும் கூறியதோடு நூலகத்திற்கு தேவை வாசகர்களேயன்றி பார்வையாளர்கள் அல்ல என்ற தன் வருத்தத்தையும் தெரிவித்தார்.

நூலகத்திற்கு போதுமான அளவிற்கு வாசகர்கள் இல்லை என்று தனபாலசிங்கம் மேலும் குறிப்பிட்டார்.

போருக்கு முந்திய காலகட்டத்தின் போது இந்த நூலகம் யாழ்ப்பாணத்தில் உள்ள ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தகவல் களஞ்சியமாக இருந்ததை நினைவு கூர்ந்தார்.

கற்று கொள்ள விரும்புபவர்களின் மைய பகுதியாக யாழ்ப்பாணமும், யாழ்ப்பாணத்தின் மதிப்பு மிக்க இடமாக இந்த நூலகமும் செயலாற்றியதாக குறிப்பிட்டார்.

ஆனால் சமீப காலமாக மிகக் குறைந்த அளவிலேயே வாசகர்கள் இங்கு வருவதாகவும் நிறைய பேர் வர வேண்டும் என்பதை தான் விரும்புவதாகவும் தனபாலசிங்கம் தெரிவித்தார்.

போரின் போது கலைந்து சென்று விட்ட யாழ்ப்பாண வாசிகளில் சிலர் மீண்டும் திரும்பி வருவதாகவும் ஆனால் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நீடித்து கொண்டிருக்கும் அரசியல் அசாதாரண சூழ்நிலைகளால் மீண்டும் அவர்கள் பிரிட்டன், இந்தியா அல்லது கொழும்புவுக்கு செல்வதே வசதியாக இருக்கும் என கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1934 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக சிறந்த நூலகம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20100225100573

இன்ர நெற் வசதிகள் அதிகரித்து வரும்போது நூலகங்களின் வாசகர்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்படத்தான் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்ர நெற் வசதிகள் அதிகரித்து வரும்போது நூலகங்களின் வாசகர்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்படத்தான் செய்யும்.

ஓமோம்....... யாழ்ப்பாணத்திலை உள்ள எல்லா வீட்டிலையும் தானே....., இன்ர நெற் இருக்குது. :rolleyes:

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.