Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியக் கனவு கலைந்து சீனாவை நோக்கி..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியக் கனவு கலைந்து சீனாவை நோக்கி..அரசியல் சமூக ஆய்வு:

china-SL.jpg

தென்னாசியப் பிராந்தியத்தில், இந்தியாவே தமது உண்மையான நட்புச்சக்தியாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலான ஈழத்தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பானது இதுவரை இருதரப்பு உறவாக பரிணமிக்கவில்லை. இருப்பினும் இரண்டு தரப்பு நலனும் ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒரு சூழலில் இது சாத்தியப்படும் எனச் சிலர் கூறி வருகையில், இன்னும் சிலர் இது குளம் வற்றக் காத்திருந்து குடல் வற்றி செத்த கொக்கின் நிலைக்குத்தான் ஈழத்தமிழர்களை இட்டுச் செல்லும் என்று வாதிடுகிறார்கள்.

இவ்விடயம் தொடர்பான முழுமையான விவாதம் எதுவும் இடம்பெறாத நிலையில், இந்தியாவை விடுத்து பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடனான உறவுகளை ஈழத்தமிழர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துப்பட கொழும்பிலிருந்து வெளிவரும் The Island பத்திரிகையில் எஸ். சிவதாசன் எழுதிய ஒரு கட்டுரையின் முக்கிய பகுதி

indo_cina_21010.jpg

ஆசியப் பிராந்தியத்தில், ஈழத்தமிழர்களுக்கு தமிழ் நாட்டு மக்களுடனும், அதன் தொடர்ச்சியாக இந்தியாவுடனும் உள்ள உளப்பூர்வமான நெருக்கத்தினை வேறெங்கும் காணமுடியாது.

இனரீதியான இணக்கம், மொழி ரீதியான ஒற்றுமை, ஒருமித்த கலாச்சார அடையாளம், நிலப்பரப்பால் அண்மித்திருப்பது போன்ற காரணிகளால், ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவுடன் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையிலான நெருக்கமும், அந்நாட்டின் மீதான ஆதரவும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்று இந்த உறவில் எஞ்சியிருப்பது அழிவுகள் மாத்திரமே. நண்பர்கள் எதிரிகளாகிவிட்டனர். அவர்கள் வடக்கிடமிருந்து (இந்தியா) எதிர்பார்ப்பதை விடுத்து கிழக்கின் (சீனா) பக்கம் கவனத்தை திருப்ப வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு, தமது இளவயதிலிருந்தே, தமிழ் இலக்கியம் வாயிலாகவே அறிவு ஊட்டம் ஏற்படுகின்றது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ்ப் புலவர்களே அவர்களுக்கு அறிவூட்டியுள்ளார்கள். திருவள்ளுவர், பாரதி போன்றோரை இங்கு குறிப்பிடலாம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தொகுதியான உன்னதமான மனிதர்களும் தமிழர்களை ஈர்த்துக் கொண்டனர்.

காந்தி, நேரு, சுபாஸ் சந்திரபோஸ், வல்லபாய் பட்டேல், இலக்கிய கர்த்தா தாகூர், அரவிந்தர் என்போர் மீது அவர்களுக்கு மிகுந்த பற்று ஏற்பட்டது. உணர்வு ரீதியான இந்த ஈடுபாட்டினால், இந்தியாவுடனான நெருக்கம் உணரப்பட்டது. அதனால் இலங்கை தீவின் இனப்பிரச்சனைக்கான தீர்விற்கு அந்நாடு உதவும் என ஈழத்தமிழர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்த போதும் கிடைத்தது என்னவோ, 1987 நடைபெற்ற இராணுவ ஆக்கிரமிப்புத்தான். சிறிலங்கா அரசின் அழைப்பின் பேரில் அவர்கள் வந்திருந்த போதும், அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை நிச்சயமாக பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியது. 1987 லிருந்து 1990 வரையான காலப்பகுதியில், வடக்கு கிழக்கு பகுதிகளை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவம் தமிழர்கள் மீது பல்வேறு வகையான கொடுமைகளைப் புரிந்தது.

அன்றிலிருந்து இந்தியாவிடமிருந்தான எதிர்பார்ப்புகள் அகன்று, தமிழர்களது உணர்வுகளிலிருந்து இந்தியா விலகிச் சென்று விட்டது. இந்த வெற்றிடத்தினுள் உலகின் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து வரும் சீனா உள்நுளைய முடியும்.

தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்களே முன்னைய நம்பிக்கைகளை சிதறடித்து, இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் அறிவுத்துறையினர் இதுபற்றி உணர்ந்து, தம்மிடையே பேசி, விவாதித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு, கடந்த இருபத்தியைந்து வருட காலம் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது.

உண்மையான விபரங்கள் அறிந்து கொள்ளப்பட வேண்டும். நிரந்தரமான நண்பர்கள் அல்லது நிரந்தரமான எதிரிகள் பற்றிப் பேசுவது வெறுமையானது என்ற நடைமுறை யதார்த்தமே தமிழர்களை இந்தியாவிலிருந்து விலகிச் செல்ல வைக்கிறது.

2008-2009 ம் ஆண்டு காலப்பகுதியில் போர் உச்சநிலையிலிருந்தபோது இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் ஒரு செய்தியுடன் சிறிலங்காவிற்கு விசேட பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். சிறிலங்கா, சீனாவிடமிருந்தோ, பாகிஸ்தானிடமிருந்தோ ஒருபோதும் ஆயுதங்களை வாங்கக்கூடாது எனவும் தனித்து இந்தியாவிடமிருந்தே ஆயுதங்கனை வாங்கவேண்டும் என்பதே அந்த ஒற்றைச் செய்தி.

இந்தியாவின் சன்னங்களை மட்டும் உபயோகித்தே தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்பதாகவே இச்செய்தியை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவால் இதைவிட மோசமானதொரு கோரிக்கையை முன்வைத்திருக்க முடியுமா? அப்படியானால் எண்பதுகளிலிருந்து இந்தியா நடாத்தி வரும் நாடகம்தான் என்ன? ஒரு காலத்தில் சிறிலங்காவில் இலை அசைந்தாலே அது இந்தியாவில் பெரிதாக எதிரொலித்தது. .

ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இனம் ஒரு கற்பனையான ஆதரவாளரிடம் ஆதரவினை எதிர்பார்த்து நின்றது. பதிலாக, அந்த வெளிநாட்டு அரசாங்கம் தம்மீது எதுவித சந்தேகமும் கொண்டிராத இனத்தினரின் மீது தனது இராணுவ மேலாதிக்கத்தை காட்டியது. “உன்னுடைய நண்பர்களை அறி, உன்னுடைய எதிரிகளை அறிவாய்” என்ற மா சேதுங் வெளிப்படுத்தியிருந்த இராணுவ, அரசியல் மூலோபாயத்தை தமிழர்கள் பற்றிக் கொள்ளத் தவறிவிட்டார்கள்.

நண்பர்கள் போல் நடித்துக் கொண்டு எதிரிகள் தமது ஒவ்வொரு அடியையும் தெளிவாக கணிப்பிட்டு வைத்தார்கள். ஆனால் தமிழர்கள் 1983 லிருந்து இந்த போலிகளுக்கு ஏற்ப நடந்து கொண்டார்கள். 2009இல், இந்த வஞ்சிக்கும் சக்திகள் மாறிவிட்டார்கள் என எதிர்பார்த்தார்கள். இந்நிலையில் வேறென்ன நடந்திருக்க முடியும்?

அவர்களது நோக்கம் தெளிவானது. உள்நாட்டில் ஒடுக்கப்பட்டுவரும் இனத்தை கண்டு பிடித்து, அதனைக்கொண்டு சிறிலங்காவின் உறுதிப்பாட்டை உடைப்பது. இதனடிப்படையிலேயே விடயங்கள் நடந்தேறின. ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவு செய்து, தீவிரவாதிகளாக்கி அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்குவது. அவர்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து, தேவைக்கேற்ப பயன்படுத்துவது,. ஆதிக்கமுடைய குழு தமது சொற்படி நடக்காதவிடத்து, வேறு குழுக்களை உருவாக்குதல்.

தமிழர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் போன்று, போலியான பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டன. பின்னர் சிறிலங்கா அரசுடன் சமாதான உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டது. ஆனால் போராளிகளை அழிப்பதற்காக இந்திய இராணுவம் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஆக்கிரமிப்பு இராணுவம் மக்கள் மீது எவ்வித கழிவிரக்கமும் காட்டாது கொலைகளையும் அழிவுகளையும் செய்தது.

நாசிகளினால் யூத மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளுக்கு, பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெர்மன் அரசாங்கம் நட்டஈடு வழங்கியது. இந்நடவடிக்கை அவர்களது கொடூரமான நடவடிக்கைக்கான பொறுப்பை ஏற்பதாக அமைந்தது. பாதிக்கப்பட்ட மக்களும், அந்த இனத்தைச் சேர்ந்தவர்களும் தமது வாழ்க்கையை மீளக்கட்டியமைப்பதற்காகவும், அவர்களது அபிவிருத்திக்காகவும் தொடர்ந்து ஜெர்மன் அரசு உதவி புரிந்தது.

இதனுடன் ஒப்பிடும் போது, தனது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவுவதற்கு இந்தியா எதுவுமே செய்யவில்லை. யாராவது குரல் எழுப்பவேண்டுமென அது காத்திருக்கின்றதா? நியாயம் அதனையே வேண்டுகிறது. இவ்விடயத்தில் மேன்மையான செயல் வரவேற்கப்படும். பாதகங்கள் இழைத்தமைக்கு பொறுப்பானவர்கள் தமது செயல் எத்தகைய குரூரமானது என்பதனை அறிவார்கள். ஆகவே அவர்களது நன்மையான செயற்பாடு இதனை முன்நோக்கி நகர்த்துவதாக அமையும்.

இலங்கைத் தீவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டால், இந்தியா படையெடுத்து வந்து அவர்களை காப்பாற்றி உடனடியாக தீர்வு ஒன்று அமுல்படுத்திய பின்னரே. தமது படைகளை விலக்கிக்கொள்ளும் என முன்பு ஒரு கருத்து நிலவியது.

இந்தியா ஏன் தலையிட வேண்டும்? அதற்கு அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்களின் பதில்: இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கைத்தீவின் உறுதித்தன்மை அவசியமானது. ஆகவே இந்தியா தனது பாதுகாப்பினை கருத்தில்கொண்டு இலங்கை விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கும்.

இலங்கைத்தீவில் 75 விழுக்காடு சிங்களவர்களும் 13 விழுக்காடு தமிழர்களும் இருக்கும் போது சிங்களவர்களை விடுத்து இந்தியா ஏன் தமிழர்களுக்கு உதவவேண்டும்?

ஈழத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் இடையில் தொப்புள் கொடி உறவு இருந்து வருகிறது என்பது பதிலாக வருகிறது. ஈழத்தமிழர்களின் அவலம் தாங்காமல் தமிழ் நாட்டு தமிழர்கள் தீக்குளிப்பார்கள், போராடுவார்கள். தமிழ் நாட்டின் அழுத்தம் தாங்காமல், சர்வதேச உறவுகளில் உள்ள நியமங்களை பொருட்படுத்தாது, இந்தியா இலங்கை விவகாரங்களில் தலையிடும்.

இவையெல்லாம் நடைமுறைக்கு பொருந்தாத எதிர்பார்ப்புகள் என்பதனை உணர்ந்தாகி விட்டது.

இந்த இருபத்தைந்து வருடகாலத்தில் இந்தியா எந்தளவுக்கு தமிழர்களுக்கு உதவியிருக்கிறது? இதற்கு அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள் எனக் கருதி செயற்படுபவர்களின் முட்டாள்தனமான பதில், 13வது திருத்தச் சட்டமூலம்.

இந்தியாவில் ஒரு முழுமையற்ற சமஸ்டி அமைப்பே காணப்படுகின்றது. இது ஈழத்தமிழர்கள் விடயத்தில் மிகவும் பொருத்தமற்ற அமைப்பாக இருக்கும். ஆகவே தீர்வு விடயத்தில் இந்தியாவின் தொடக்கப்புள்ளி தமது நாட்டிலிருக்கும் அரைகுறை சமஸ்டியமைப்பாகவே இருக்கும். கூடுதலானதாக இருக்காது. இவ்வாறான ஆரம்ப நிலையிலிருந்து, நடைமுறைச் சாத்தியமில்லாத வரையறைகளுடன், தீர்வு பற்றி விவாதிப்பதில் எதுவித பயனும் ஏற்படாது.

ஈழத்தமிழர்கள் புதுடில்லியிலிருந்து அல்லது சென்னையிலிருந்து தீர்வு வரும் என்ற சிந்தனைகளுக்கு விடைகொடுக்க வேண்டும். கடந்த முப்பது வருட அனுபவங்கள் இதனையே உணர்த்தி நிற்கின்றன. தோல்விகளையும், ஏமாற்றுதல்களையும் மாத்திரமே அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்

இப்போது புதிய மாற்றீடான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கடலாக விரிந்திருக்கும் பொருளாதார நடவடிக்கைகளிலும், சமூக அபிவிருத்திக்குள்ளும், தேவைகள் புதைந்திருக்கின்றன. ஆசியாவின் முன்னணி வல்லாதிக்கமாக உருவெடுத்துவரும் சீனா, சிறிலங்காவிற்கு வழங்கி வரும் தொழில் நுட்ப உதவிகளை ஒரு ஆரம்பமாக எடுத்துக் கொள்ளலாம். தனித்து துறைமுக அபிவிருத்தி பயனுடையதாக உள்ளபோதும், அது மேலும் பல நன்மைகளை பெற்றுக் கொடுக்கும். சீனாவின் சென்சுன் துறைமுகத்திற்கு நிகராக அம்பாந்தோட்டை துறைமுகம் அமையவிருக்கிறது.

வடக்கிற்கான புகையிரதப்பாதை அமைத்தலில் சீனா ஈடுபடவிருக்கிறது. இது சீனா – தமிழர்களுக்கிடையிலான உறவுகளை ஏற்படுத்தும். பொருளாதார விடயத்தில் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டினால், பல்வேறு திட்டங்களுடன், சீனாவின் பிரசன்னம் அங்கு அதிகரிக்கும். சிறப்பு பொருளாதார வலயங்களை வடக்கு-கிழக்கில் அமையப்படுவதும் தமிழ்மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக அமையும்.

ஒரு விரலை காட்டி சுட்டி நிற்கும்போது, முட்டாள் விரலைப் பார்ப்பான், புத்திசாலியோ காட்டப்படும் திசையைப் பார்ப்பான். மாற்றத்திற்கான தேவை தெளிவாகத் தெரிகிறது.

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=new_post&f=40

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டு தமிழர் சீனாவுக்கு இடக்கையை கொடுப்பது எமக்கு நல்ல உதவியாக இருக்கும்.தமிழ் நாட்டு இந்தியாவை விட்டு பிரிந்தால் எமக்கு மிகவும் நன்மை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69494 இந்த இணைப்பில் தெரிவ்க்கப்பட்ட கருத்துக்களையும் பார்க்கவும்.

மொழிபெயர்ப்பு பதிவுக்கு நன்றி சாம்ஸ்!

கடைசிக்கு முதல் பந்தியில், கடைசி வரியை மொழிபெயர்த்தவர் மறந்துவிட்டார் போல. அதன் தொனி:

குறைந்தது அடுத்த ஒரு நூற்றாண்டுக்காவது சீனாவின் நண்பர்களாக இருப்பது தான் நாட்டுக்கும், தமிழர்க்கும் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.