Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை விவகார நிபுணர் குழு அமைக்க ஐ,நா.செயலாளர் முடிவு

Featured Replies

-

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரிப்பு ( வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010 13:14 tamil mirror)

இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை நவநீதம்பிள்ளை நினைவுகூர வேண்டும் எனவும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க டெயிலிமிரர் இணையதளத்திற்கு கூறினார். இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நவநீதம்பிள்ளை நேற்று மீண்டும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

இலங்கை விவகார நிபுணர் குழு அமைக்க ஐ,நா.செயலாளர் முடிவு ( சனிக்கிழமை, 06 மார்ச் 2010 14:00 ta mirror)

இலங்கை விவகாரம் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழுவொன்றை தாம் நியமிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் ஐ.நா செயலாளர் நாயகம் தொலைபேசியில் தொடர்புகொண்டார். நேற்று முன் தினம் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக பான் கி மூனின் பேச்சாளரான மார்ட்டின் நெஸிர்கி தெரிவித்துள்ளார்.

-

Edited by ஜெகுமார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்காவிற்கு ஆலோசனை வழங்க நிபுணர்குழு அமைக்கப்படவில்லை :பான் கீ மூன் உறுதி

pokalagama.jpg

பான் கீ மூன் அவர்கள் சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் பிரச்சனைகள் மற்றும் போர்குற்றம் தொடர்பாக நியமிக்கவுள்ள நிபுணர்கள் குழு சிறீலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்காது எனவும் அது பான் கீ மூன் அவர்களுக்கே ஆலோசனை வழங்ககும் எனவும் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா ஐனாதிபதிக்கும் பான் கீ மூன் அவர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை காலை தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாகவும் இதில் இக்குழு தொடரடபாகவும் இலங்கை பிரச்சனை தொடர்பாக உரையாடியதாகவும் இக்குழு சிறீலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் இத்தொலைபேசி உரையாடல் வழமையானதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

pathivu.com

பான் கீ மூன் காலத்தை கடத்த முயற்சிக்கிறார் போல உள்ளது. விஜய் நம்பியார் போன்ற கயவர்களும் உண்டா எனத் தெரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

------

இலங்கை விவகார நிபுணர் குழு அமைக்க ஐ,நா.செயலாளர் முடிவு ( சனிக்கிழமை, 06 மார்ச் 2010 14:00 ta mirror)

இலங்கை விவகாரம் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழுவொன்றை தாம் நியமிக்கவுள்ளதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் ஐ.நா செயலாளர் நாயகம் தொலைபேசியில் தொடர்புகொண்டார். நேற்று முன் தினம் இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக பான் கி மூனின் பேச்சாளரான மார்ட்டின் நெஸிர்கி தெரிவித்துள்ளார்.

மனித அவலம் நடந்து, ஒரு வருடம் ஆகின்ற நிலையில்......

இப்போ தான் பான் கீ மூன் ஆலோசனைக் குழு அமைக்க முடிவு எடுத்து...., குழு நியமித்து...., விசாரணை ஆரம்பிச்சு........, smiley-sleep005.gifsmiley-sleep004.gifsmiley-sleep019.gif

  • தொடங்கியவர்

-

இலங்கை விவகாரம் குறித்து பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு

வீரகேசரி வாரவெளியீடு 7 மார்ச 2010 8:48:43 AM

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமிக்கவிருப்பதாக அவரது பேச்சாளர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை மாலை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்ட பான் கீ மூன், ஆலோசனைக் குழுவின் அடிப்படையில் செயற்பட தாம் உத்தேசித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் எனவும் மார்ட்டின் நெகிர்சி என்ற அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இலங்கை தொடர்பில் பொறுப்பான விவகாரங்கள் குறித்து அந்தக் குழு தனக்கு ஆலோசனை வழங்கும் என்று அவர் தனது உரையாடலில் விளக்கியுள்ளார் என்றார் நெகிர்சி. சிறுபான்மை தமிழ் மக்களுக்காக தனித் தாயகம் ஒன்றை உருவாக்க நோக்கம் கொண்டு 25 வருட காலம் போராடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதி மாதங்களில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளதாக இலங்கை மீது மனித உரிமைகள் அமைப்புகளும் மேற்கு நாடுகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

நீண்ட யுத்தத்தின் போது மனித உரிமைமீறல்கள் மற்றும் அக்கிரமங்கள் இரு தரப்பினாராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளனவென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிபுணர்கள் குழு, மனித உரிமைகள் அமைப்புக் குழுக்கள் விரும்பும் அளவுக்குச் செல்வார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்த அமைப்புகள் யுத்த காலத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் குற்றஞ் சாட்டியுள்ளதோடு இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரியிருந்தன. இதனை ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகள் மற்றும் சட்டவிரோத கொலைகள் தொடர்பான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வலியுறுத்தியிருந்தார்.

வேண்டுமென்றே பொது மக்கள் மீது இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டமை மற்றும் ஏனைய மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு நிராகரித்தது. தமிழ் புலிகளை தோற்கடித்து வெற்றி கொண்டதை அரசாங்கம் மே 2009 இல் பிரகடனம் செய்தது. பான் முன்னர் இலங்கைக்கு தாம் ஆலோசனைக் குழுவொன்றை ஏற்படுத்த ஆலோசிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாத்தியமான நடவடிக்கைகள் எடுப்பதில் இலங்கைக்கு உதவவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார் என நெகிர்சி கூறினார்.

""குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளியாக உதவியுடன் இலங்கை சுய விசாரணை நடத்த வேண்டுமென ஜெனிவாவில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் திருமதி நவநீதம்பிள்ளை கோரியிருந்தார்.

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையை அவரே மேற்கொள்ள வேண்டும்'' என பான் கூறியுள்ளார். ""யுத்தத்தின் போது சகல பக்கங்களாலும் பாரிய மீறல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை இலங்கை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நான் கருதுகிறேன். இந்த விடயத்தில் சர்வதேச சமூகம் உதவக் கூடியதாக இருக்கும்'' என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றுகையில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் நவதீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

நிபுணர் குழுவை நியமிப்பது நியாயமற்றது

வீரகேசரி வாரவெளியீடு - 07 மார்ச் 2010 - 8:44:45 AM

ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படுவது கோரப்படாததும் நியாயமற்றதுமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம் நேற்று விடுத்த ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான ஆலோசனைகளை வழங்குமுகமாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் விசேட நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் கடந்த பெப்ரவரி 25 இல் எழுதிய கடிதம் தொடர்பில் மார்ச் 5 ஆம் திகதி செயலாளர் நாயகத்துக்கும் ஜனாதி பதிக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கருத்தை அழுத்தமாகத் தெரிவித்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பெரும் அளவிலான யுத்தத்தின்போது பாரிய மனித உரிமைகள் மீறல்களும் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் மரணமும் சம்பவித்துள்ள ஏனைய நாடுகள் தொடர்பில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்..

உலகில் இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை 9 மாதங்களுக்கு முன் இலங்கை இராணுவ ரீதியில் தோற்கடித்துள்ளதெனவும் தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய செயற்பாட்டில் அதனை வலுப்படுத்த அரசாங்கம் முயன்றுவருகின்றது எனவும் செயலாளர் நாயகத்திற்கு கூறப்பட்டுள்ளதெனவும் கூறப்பட்டுள்ளது. நாடு பூராகவும் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் ஆலோசனைக் குழுவொன்றை செயற்படுத்தும் அத்தகைய நோக்கம் நிச்சயமாக ஒரு தலையீடாக உணரப்படும்..

அண்மையில் முடிவடைந்த ஜனாதிபதி தேர்தலின் போது இத்தகைய தலையீடு தொடர்பில் ஆர்வமுள்ள சக்திகள் எவ்வாறு ஐக்கிய நாடுகளையும் ஏனைய அங்கத்தவர்களையும் தூண்ட முயற்சித்தன என்பதை நினைவுபடுத்திய ஜனாதிபதி ராஜபக்ஷ, அந்தத் தேர்தல் சுதந்திரமானதும் நேர்மையானதுமானதென சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்..

இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினாலும் சில அரச சார்பற்ற நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்பட்ட தூண்டுதல்களினால் உருவாக்கப்பட்டதாகும். அவர்கள் இலங்கைக்கு எதிராக திட்டமிட்டு செயற்படுவது தெளிவாகத் தெரிகிறது. மேற்குலகத்தின் சில பிரிவுகள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படும் தேர்தல் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளன என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்..

இலங்கையின் சில பகுதிகளில் யுத்த சூழ்நிலை தொடர்பான விடயங்கள் குறித்த அறிக்கையை ஆராய விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் ஏற்கெனவே நல்லிணக்க நடவடிக்கை தொடர்பில் முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், செனல் 4 வீடியோ தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசேடபிரதிநிதி பிலிப் அல்ஸ்டனின் நடவடிக்கை ஆகி யவை தொடர்பாக ஆராய்வதற்கு ஏற்கனவே திறமையானவர்கள் செயலில் இறங்கியுள்ளார்கள் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்..

தீர்மானிக்கப்பட்டுள்ள அத்தகைய ஆலோசனைக்குழு சம்பந்தமான அந்த நியமனமும் அவசியமானது. பொருத்தமானதுமான நடவடிக்கையை இது தொடர்பில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை இலங்கைக்கு உருவாக்கும் என ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கு வலியுறுத்திக் கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சகல உறுப்பினர்களையும் சமமாக நடத்தும் முறையை ஐக்கிய நாடுகளின் சாசனப் படி இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அதேவேளை நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருக்கும் விதிமுறையை மதிப்பதாகவும் ஜனாதிபதி அழுத்தமாகக் கூறியுள்ளார். தொலைபேசி உரையாடல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கு தான் கடிதம் ஒன்றை விரைவில் எழுதப் போவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். .

-

Edited by ஜெகுமார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.