Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பிரித்தானியா உதவியளிக்கும்: பீட்டர் ரிக்கட்ஸ்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இடம்பெயர்ந்தோருக்கு முழுமையான நடமாடும் சுதந்திரம் வழங்கப்படும் போது அதற்கு உதவியளிக்கவும், அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவவும், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தவும் தமது நாடு தயாராக உள்ளதாக இலங்கை வந்திருக்கும் பிரித்தானிய நிரந்தர உதவிச் செயலாளர் பீட்டர் ரிக்கட்ஸ் தெரிவித்துள்ளார் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணங்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இடமளிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்திருக்கும் பிரித்தானிய நிரந்தர உதவிச்செயலாளர் பீட்டர் ரிக்கட்ஸ், இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகமவை இன்று சந்தித்த போதே அவர் இந்தக்கோரிக்கையை முன்வைத்தார். இலங்கையில் இடம்பெயர்ந்தோருக்கு முழுமையான நடமாடும் சுதந்திரம் வழங்கப்படும் போது அதற்கு உதவியளிக்கவும், அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவவும் தமது நாடு தயாராக உள்ளதாக பீட்டர் ரிக்கட்ஸ் இந்த சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இடம்பெயர்ந்தோரை முகாம்களில் இருந்து விடுவித்து அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளை அவர் வரவேற்றார்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வை காணும் நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது பீட்டர் ரிக்கட்ஸும் ரோஹித்த போகல்லாகமவும் கலந்துரையாடினர்.

அரசியல் தீர்வைப் பொறுத்தவரை எதிர்வரும் பொதுத்தேர்தல் முக்கியமானதொன்று எனக்குறிப்பிட்ட பீட்டர், சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடத்த பிரித்தானியா தமது ஆதரவை தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

லண்டனில் கடந்த மாதம் இடம்பெற்ற உலக தமிழ் மாநாட்டில், பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் பங்கேற்று உரையாற்றியமை தொடர்பாக தமது விளக்கத்தை அளித்த, பீட்டர் ரிக்கட்ஸ்,

பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த அனைத்து இன மக்களுக்கும் ஆதரவளிப்பதும், இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதுமே டேவிட் மிலிபான்ட்டின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

http://www.varudal.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பிரித்தானியா உதவியளிக்கும்

சமாதானம் என்ன சமாதானம்........கண்டறியாத சமாதானம்....உதுக்கே உங்கள அனுப்பினது?

உலகத்தமிழர்பேரவை செல்லிவிட்டதுகள மறந்துபோநீரே?

தாயகம் தேசியம் தன்னாச்சி உரிமையெண்டு எவ்வளவு இருக்கு.... :)

Edited by Mathivathanang

நீங்கள் சமாதானத்துக்கு எவ்வளவு ஆதரவு என்று, சமாதான பேச்சு வார்த்தை மும்முரமாக இருக்கும் போது தடையை கொண்டுவந்து சீரழிச்ச விதம் எல்லாம் தெரியும். இந்தியன் எவ்வளவு நரித்தனமாக சோனியாவின் சொல்லை தட்டாத எரிக் சொல்கெயும்... இப்படியே மீதி தமிழரும் (தமிழர் என்று சொல்லி காக்க பிடிக்கும் கும்ம்பலி தவிர) அழியும் வரை உங்கள் பணிகள் தொடரும்.

எல்லாம் இந்த 2012 வரையா என்று ஒரு கேள்வி?

சமாதானம் என்ன சமாதானம்........கண்டறியாத சமாதானம்....உதுக்கே உங்கள அனுப்பினது?

உலகத்தமிழர்பேரவை செல்லிவிட்டதுகள மறந்துபோநீரே?

தாயகம் தேசியம் தன்னாச்சி உரிமையெண்டு எவ்வளவு இருக்கு.... :lol:

சமாதானம் எண்டா அதுக்கு அமைதி எண்டு இன்னும் ஒரு பெயரும் இருக்கு... சலங்கையோ இலங்கையோ உடைஞ்சால் தான் அமைதி வரும் எண்டால் அதுவும் சமாதானம் தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.