Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்காவில் பிரதேசம் இராணுவமயப்படுத்தப்படுகிறது – சுரேஸ் பிரேமசந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொக்காவில் பிரதேசம் இராணுவமயப்படுத்தப்படுகிறது – சுரேஸ் பிரேமசந்திரன்:‐

கொக்காவில் பிரதேசம் இராணுவமயப்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

கிரமமான முறையில் கொக்காவில் பிரதேசம் இராணுவ மயப்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகத் தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாரியளவிலான ஒளிபரப்புத் தூபியொன்று கொக்காவில் நகரில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண குடாநாட்டில் மட்டும் சுமார் 40000 படைத்தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகளவிலான படைவீரர்கள் ஏன், வடக்கில் நிலைநிறுத்தப்பட வேண்டுமென அவர் கேள்பி எழுப்பியுள்ளார்.

இராணுவத்தினரை குறைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இராணுவத்தில் பெரும்பான்மையாக சிங்களவர்கள் கடமையாற்றுவதாகவும், கடந்த கால கசப்பான நிகழ்வுகளுடன் எவ்வாறு இவர்களின் பிரசன்னத்தை ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்று இரண்டு இடங்களில் இராணுவ முகாம்களை அமைப்பதில் தவறில்லை, எனினும், சகல இடங்களிலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு முனைப்பு காட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை இராணுவம் முற்று முழுதாக நிராகரித்துள்ளது.

கொக்காவில் பகுதியில் ஏற்கனவே இருந்த இராணுவ முகாமொன்றே தற்போது புனரமைக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, பூணகரி, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களிலும் ஏற்கனவே இராணுவ முகாம்கள் காணப்பட்டதாகவும், அவை தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஏற்கனவே முகாம்கள் காணப்பட்ட பிரதேசங்களில் மீண்டும் முகாம்கள் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக 147 இராணுவ முகாம்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இதன் பிரதான நோக்கம் அந்தப் பிரதேசங்களைச் சூழ சிங்களக் குடியேற்றங்களை அமைப்பதே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்ட பின்னர் அந்த முகாமை அண்டிய பகுதிகளில் இராணுவத்தினரின் குடும்பங்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னர் தெற்கிலுள்ள சிங்களவர்களை அங்கு குடியமர்த்தும் குடியேற்றத் திட்டங்களை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்தவுடன் வேறு நாடுகள் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது வழக்கம். எனினும், தற்போதைய அரசாங்கம் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்துவருவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் அமைக்கப்படவுள்ள சிங்களக் கிராமங்களில் வீடமைப்புத் திட்டத்திற்காக சீன அரசாங்கம் நிதியுதவி வழங்க இலங்கை அரசாங்கத்திம் உறுதியளித்திருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: globaltamilnews

ஏன் இந்தியாவுக்கு கொக்காவில் பிரதேசம் தேவையோ?

ஏனைய பல இராணுவ முகாம்கள் பற்றி சுரேஷுக்கு தகவல் கிடைக்காதது ஆச்சரியம் தான்!!!

ஏன் இந்தியாவுக்கு கொக்காவில் பிரதேசம் தேவையோ?

ஏனைய பல இராணுவ முகாம்கள் பற்றி சுரேஷுக்கு தகவல் கிடைக்காதது ஆச்சரியம் தான்!!!

கொக்காவில் தான் வடபகுதியில் உயரமான பகுதி... அதிலை தொலைத்தொடர்பு கோபுரம் வைச்சால் எல்லா இடத்துக்கும் ஒலி ஒளி பரப்பலாம் , ஒட்டும் கேக்கலாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.