Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாராஜா நிறுவனத்தின் தலைமையகம் இன்று இனம்தெரியாத குண்டர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது

Featured Replies

மகாராஜா தனியார் நிறுவனத்தின் தலைமையகம் இன்று இனம்தெரியாத குண்டர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இலங்கையின் சிரச சக்தி அலைவரிசைகளுக்கான எம்.டி.வி மற்றும் எம்.பி.சி ஊடகவலையமைப்புக்களைக் கொண்டுள்ள மகாராஜா நிறுவனம் இன்று மாலை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 02 இல் உள்ள சிரச மற்றும் சக்தி அலைவரிசையின் தலைமையகத்தின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் மற்றும் குண்டர்களினால் இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 20 ற்கும் மேற்பட்ட காடையர்கள் குழுவொன்று மகாராஜா நிறுவனத்தின் தலைமையகத்தை முற்றுகையிட்டதுடன் தக்குதல்களையும் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தினால் மகாராஜ நிறுவனத்தின் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சுற்றிவளைப்பைத் தொடர்ந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மிகவும் பயத்துடனும் பீதியுடனும் காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் குறித்த காடையர் குழுவை கைது செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடரும் சுதந்திர ஊடகங்களிற்கு எதிரான தாக்குதல்.

கொழும்பு, கொம்பனித் தெரு பிறேபுரூக் பிளேசிலுள்ள மகாராஜா நிறுவனத்தின் சிரச வலையமைப்பு (சக்தி தொலைக்காட்சி) தலைமை அலுவலகம் மீது சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கங்காராமை பக்கமிருந்து வந்த 100 பேர் கொண்ட பிரதி அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் கற்களை வீசி இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஓர் கட்சி ஆதரவாளர்கள் எனப்படும் குண்டர்களால் வீசப்பட்ட கற்களால் அலுவலகக் கண்ணாடிகள், சொத்துக்கள் மட்டுமன்றி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளதுடன், சக்தி நிறுவன ஊழியர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

அதேநேரம் தற்பாதுகாப்புக் கருதி சக்தி நிறுவன பாதுகாப்பு ஊழியர்கள் அதே கற்களினால் பதில் தாக்குதலொன்றை குண்டர்களை நோக்கி நடத்தியுள்ளனர்.

தாக்குதலை நடத்தியோரின் பின்னணியில் சண்டித்தனத்துக்குப்பெயர்போன பிரதி அமைச்சர் ஒருவர் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தற்போது அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரை 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலீஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிரச தொலைக்கட்சி அலுவலகத்தில் சம்பவம் நடைபெற்ற சமயம் 250 பேர்வரை கடமையில் ஈடுபட்டிருந்ததாக அவ்வலையமைப்பு மேலும் தெரிவித்தது.

மகாராஜா நிறுவனம் 3 வானொலி நிலையங்களையும், 3 டெலிவிஷன் நிலையங்களையும் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கடந்த ஆண்டு ஜனவரி மாதமும் இவர்களின் ஓர் ஒலிபரப்பு நிலையம் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் இதுவரை ஒருவரும் கைது செய்யப்ப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடத்தியவர்கள் இந்நிறுவனத்தார் கடந்த வருடம் அரசாங்கத்தினால் முடக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற கோஷத்துடனேயே தாக்குதல் நடத்தியதாக அறியப்படும் நிலையில், இத் தாக்குதல் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நடைபெற்ற நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் ஊடகவியலாளர்கள் காணமல் போனமை, ஊடகங்க தடை செய்யப்படமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: globaltamilnews

Edited by நிழலி

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள் .....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.