Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள் சிறிலங்காவின் சனனாயகமும் தமிழீழ தேவையும்!

Featured Replies

பத்திரிகை தர்மம்

ஜனவரி 8, 2009 அன்று காரில் சென்று கொண்டிருந்தபோது, சுட்டுக் கொல்லப்பட்டார் லசந்தா.

சமூகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் தரும் செய்திகளின் ஊடாகவே உலகத்தை அறிந்து கொள்ளும் அளவு ஆற்றல் படைத்தது மீடியா எனப்படும் ஊடகத்துறையாகும். ஊடகங்கள்தாம் உலகத்தைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன என்றால் அது மிகையல்ல. ஒரு செய்தி, அது பெற வேண்டிய முக்கியத்துவத்தையும் அது மக்களைச் சென்றடைய வேண்டுமா என்பதை முடிவு செய்வதும் ஊடகங்கள்தாம்.

தமது மரணம் எவ்வாறு நிகழும் என்பதை மாத்திரம்தான் லசந்தாவால் யூகிக்க முடியவில்லை. மற்றபடி, அவர் தன் மரணத்தை எதிர்பார்த்திருந்தார். நிச்சயம் அரசாங்கம்தான் பொறுப்பாளி என்று எழுதியும் வைத்திருந்தார். ராஜபக்சேவை மகிந்த என்று அழைக்கும் வெகு சிலரில் ஒருவர் லசந்த விக்கிரமதுங்க. ராஜபக்சேவின் ஆட்சியை தீவிரமாக விமர்சனம் செய்து, அவர் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களுள் முதன்மையானவரும் அவரேதான். பெரும்பான்மையினரின் பார்வையை பதிவு செய்கிறோம் என்னும் பெயரில் இனப்படுகொலைகளை லசந்த விக்கிரமதுங்கே நியாயப்படுத்தவில்லை. நம் நண்பர்தானே என்பதற்காக கண்டும் காணாமலும் இருந்து விடவில்லை.

புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமான போரில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தான் என்பதை அழுத்தமாகப் பலமுறை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ராஜபக்சேவை கடுமையாகக் கண்டித்தும் இருக்கிறார். மிரட்டல்கள், அடிதடிகள், தாக்குதல்கள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. எனவே கொல்லப்பட்டார். லசந்த விக்கிரமதுங்க விடுதலைப் புலிகள் எதிர்ப்பாளர். ராஜபக்சேவை விமர்சனம் செய்ததைப் போலவே புலிகளையும் அவர் விமர்சனம் செய்திருக்கிறார். நான் எடிட்டர், நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று தன்னுடன் பணிபுரிபவர்களை லசந்த என்றும் அடக்கி ஆட்கொண்டது கிடையாது. பத்திரிகையாளர்கள் உண்மையை பயமின்றி எடுத்துக் கூறவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. சண்டே லீடர் செய்தியாளர்களுக்கு அளவற்ற சுதந்திரத்தை அவர் அளித்திருந்தார்.

லசந்த விக்கிரமதுங்கவைப் போலவே என்.ராமும் ஒரு எடிட்டர். இந்தியாவின் தேசியப் பத்திரிகையாகத் தன்னை பிரகடனம் செய்துகொள்ளும் தி ஹிந்துவின் எடிட்டர். இன் சீஃப் என்.ராமும் புலிகள் எதிர்ப்பாளர். ஆனால் என்றாவது லசந்தாவைப் போல் நாணயத்தின் இரு பக்கங்களை அவர் பார்த்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை அரசாங்க சார்பு செய்திகள் தவிர்த்து வேறொன்றை அவர் பதிப்பித்திருக்கிறாரா? இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து இரு சிறிய பெட்டிச் செய்தியையாவது தி ஹிந்துவில் யாரேனும் கண்டதுண்டா?இது தேசிய அவமானம் என்பதாக மங்களூர் பப் விவகாரம் பற்றி நீட்டியும், முடக்கியும் தலையங்கம் எழுதிய தி ஹிந்து, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா அளிக்கும் தார்மீக ஆதரவை என்றாவது சுட்டிக்காட்டி சாடியிருக்கிறதா?

லெட்டர்ஸ் டூ தி எடிட்டர் பகுதியிலும் கடுமையான தணிக்கை. இருபது கடிதங்கள் வெளியானால் அதில் பத்தொன்பது தி ஹிந்துவை ஆதரித்து வந்திருக்கும்.

கேள்வி : உண்மையான பத்திரிகை தர்மம் என்றால் என்ன?

பதில் : நடைபெறும் அதர்மத்தை சுட்டிக்காட்டுவது.

என்.ராமின் பத்திரிகை தர்மத்துக்கும் லசந்த விக்கிரமதுங்கவின் பத்திரிகை தர்மத்துக்கும் ஏன் இத்தனை பெரிய வித்தியாசம்? அதற்கான காரணத்தை லசந்தவே சொல்லியிருக்கிறார்.

‘உயர்பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்திற்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனசாட்சி.’

லசந்த தன் மனசாட்சியின் அழைப்பை இறுதிவரை நிராகரிக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.