Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசரகால சட்டம் எனும் பித்தலாட்டம்; புலம்பெயர் மக்கள் என்ன செய்யவேண்டும்.

Featured Replies

அவசரகால சட்டம் எனும் பித்தலாட்டம்; புலம்பெயர் மக்கள் என்ன செய்யவேண்டும்.

மலேசிய நிருபர்

புதன்கிழமை, மே 5, 2010

இலங்கை அரசாங்கம் தனது புதிய சிங்கள பாராளுமன்றத்தினை நேற்று கூட்டி அவசரகால சட்டம் தொடர்வதனை நியாயப்படுத்தியது. அதற்கு இலங்கை பிரதமர் கூறிய காரணம் ஒன்று புலிகளின் இராணுவ பிரிவு ஒன்று இன்னமும் இயங்குவதாக கூறியமை. அடுத்ததாக வெளி நாட்மைச்சர் கூறிய காரணம் புனர்வாழ்வுக்கழகம் போன்ற அமைப்புக்கள் இயங்குவது என்பதே ஆகும்.

இந்த இரண்டு நொண்டி சாட்டுக்களை கூறினால் சர்வதேசம் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் என்பதனாலா அல்லது எதிரணிகள் இந்த கருத்திற்கு எதிராக பேசமாட்டார்கள் என்பதனாலா?

அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தினை ஓர் இன ஒடுக்கல் கருவியாகவே பாவிக்கின்றது என்பதனை யாராலும் மறக்க முடியாது. தமிழர்களை ஒடுக்க அவசரகால சட்டம் எனும் ஆயுதமே சிங்களத்திற்கு உதவுகின்றது. நிரூபிக்கமுடியாத, மறைமுகமாக செய்யப்படும் அனைத்து தமிழ் விரோத செயற்பாடுகளிற்கும் ஆதாரம் இந்த அவசரகால சட்டமே.

இதனை சர்வதேசம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியன ஏற்றுக்கொண்டுதான் வெளி நாடுகளுக்கு தப்பி வரும் தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுகின்றது. இதனை புலம்பெயர் சட்டவாளர் ஒருவரே கூறியுள்ளார். தவிர அவசரகால சட்டத்தினை நீக்கவேண்டும் என பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் வாதாடிவருகின்றன. ஏன் போரை முடிவுக்கு கொண்டுவந்தவர் என கூறும் சிங்கள படைத்தளபதியே அவசரகால சட்டம் நீக்கப்படவேண்டும்; நாட்டிற்கு ஆபத்து இல்லை என கூறியுள்ளார்.

ஆகவே அவசரகால சட்டத்தினை நீக்காது வைத்திருப்பதற்கு காரணம் தமிழ் இனத்தை முற்றாக இலங்கை தீவில் இல்லாது செய்வதற்கே ஆகும்.

ஆனால் சர்வதேசத்தை மீண்டும் ஏமாற்ற புலிசாயம் பூசும் சிங்கள அரசின் கோணங்கி தனத்தை சர்வதேசம் புரியவேண்டும். புலம்பெயர் மக்கள் உறுதியாக அதற்காக வேலைகளைச் செய்யவேண்டும்.

அவசரகால சட்டத்தின் சில சரத்துக்கள் நீக்கப்பட்டமையினை இலங்கை அரசு பெரும் பறைசாற்றலுடன் செய்கின்றது. இந்த சரத்துக்கள் நீக்கப்பட்ட செயற்பாடுகள் வெளி நாட்டு அரசுகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும், சிங்களவர்களுக்கு மட்டுமே அன்றி அங்கு இருக்கும் தமிழ் மக்களுக்காக அல்ல என்பதனை எம்மவர் சார்பாக எடுத்துக்கூறவேண்டும்.

முற்று முழுதாக அவசரகால சட்ட நீக்கப்பட்டு, உயர் பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்பட்டு,அனைத்து தமிழ் மக்களும் மீழ் குடியேற்றம் செய்யப்பட்டு ஓர் சகச வாழ்வு வரும்வரை இலங்கைக்காகன் பொருளாதார ஆதரவுகளை வழங்க கூடாது என்பதனை புலம்பெயர் மக்கள் அந்தந்த நாடுகளுக்கு வலியுறுத்தி போராடவேண்டும். புலம்பெயர்மக்களிடன் அதற்காக சக்தியும் வலுவும் இன்னமும் உள்ளது.

குறிப்பு:- இதனை எழுதும் போது பக்கத்தில் இருந்தவர் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பியோடிவந்த ஓர் வயதான நாட்டு பற்றாளர். அவர் கூறினார் அவசரகால சட்டத்தினை நீக்கினால் நம்மள அனுப்பிவிடுவாங்கையா என்றார். ஆனால் நான் கேட்டேன் சட்டத்தை நீக்கினால் உங்கட மகனை வெளியில் எடுக்கலாம் இல்லையா என்றேன். அவர் சொன்னார் உதெல்லாம் சரிவராதையா பிள்ளைய விடமாட்டாங்கள் என்றார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

Edited by தயா

சிங்கள பயங்கரவாதிகளின் கண் துடைப்பு அவசரகால சரத்து நீங்க நடவடிக்கைகளை ஐரோப்பிய, அமெரிக்க அரசியல் வாதிகள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதில் நா. ப. த. தே. அரச உறுப்பினர்களும், புலம்பெயர் மக்களும் ஈடுபட்டு வெற்றி பெறவேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தை உறுதி செய்யும் எந்த சரத்துக்களும் நீக்கப்படவில்லை. விசாரணைகள் இல்லாமல் அடைத்து வைத்திருக்கும் அப்பாவித் தமிழர்களை விடுவிக்கும், தமிழ் மக்களை வகை தொகை தெரியாமல் கைது செய்வதை தடுக்கும், தமிழ் மக்களின் சொத்துக்களை ஆக்கிரமித்து அழிப்பதை தடுக்கும், எந்த சரத்துக்களும் நீக்கப்படவில்லை.

சிங்கள பயங்கரவாதிகளின் ஏமாற்றும் நடவடிக்கையை பாராட்டியதிலிருந்து அமெரிக்காவின் கையாலாகாத தன்மை, அல்லது அமெரிக்க வெளியுறவுத்துறையின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது. இதையும் அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.