Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளின் கவனத்துக்கு...

Featured Replies

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு மிகவும் நெருக்கமான பலத்தைக் கொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அரசியலமைப்புக்கு சில திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு உத்தேசித்திருக்கிறது. இரு திருத்தங்கள் முதலில் கொண்டுவரப்படுமென்று அண்மையில் செய்தியாளர் மகாநாடொன்றில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டிருந்தார். எதிரணிக் கட்சிகளின் சில உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசியலமைப்புக்கான திருத்தங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி விட முடியுமென்று அரசாங்கம் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான அரசியலமைப்புத் திருத்தத்தையே முதலில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் அக்கறை கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழ் விருப்பு வாக்குகளைப் பெறுவதற்கு வேட்பாளர்களுக்கு மத்தியில் மூளுகின்ற போட்டா போட்டி ஆரோக்கியமற்ற அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவித்திருக்கிறது என்பது உண்மையே. அத்தகைய கலாசாரத்தை இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக உற்சாகப்படுத்தி வளர்த்துவிட்டு தற்போது ஏதோ ஞானோபதேசம் பெற்று எழுந்தவர்கள் போன்று அரசாங்கத்தரப்பு அரசியல் தலைவர்கள் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னைய பாராளுமன்றத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவொன்று தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் நீண்டகாலமாக ஆராய்ந்தது. விகிதாசாரத் தேர்தல் முறையும் பழைய தொகுதி அடிப்படையிலான முறையும் கலந்ததான ஒரு தேர்தல் முறையை அந்தத் தெரிவுக்குழு அதன் அறிக்கையில் விதந்துரைத்திருந்தது. ஆனால், அதற்கு அப்பால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

விகிதாசாரத் தேர்தல் முறையில் இருக்கக்கூடிய குறைபாடுகளுக்கு அப்பால் அந்த முறையில் இருக்கக்கூடிய நன்மைகளையும் மனதிற்கொண்டே தேர்தல் சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும். தினேஷ் குணவர்தன தலைமையிலான தெரிவுக்குழுவின் விதப்புரைகளின் அடிப்படையிலான தேர்தல் முறையைக் கொண்டுவரும் உத்தேசம் எதுவும் அரசாங்கத்துக்கு இருக்கிறதோ தெரியவில்லை. அல்லது முற்று முழுவதுமாக தொகுதி அடிப்படையில் கூடுதல் வாக்குகளைப் பெறும் வேட்பாளரே வெற்றியாளராகும் முறையையே மீண்டும் கொண்டுவருவதற்கு உத்தேசிக்கப்படுகிறதோ தெரியவில்லை. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை சிறுபான்மை இனங்களினதும் சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்த விடயத்தில் ஆரோக்கியமான பங்களிப்பை அரசியல் அரங்கில் செய்திருக்கிறது. குறிப்பாக, வடக்கு,கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற தமிழ்,முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவங்களை விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை வலுப்படுத்தி வந்திருக்கிறது. இத்தகைய ஆரோக்கியமான வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய வகையில் எந்தவகையான தேர்தல் சீர்திருத்தமும் மேற்கொள்ளப்படக்கூடாது என்பதே எமது வலியுறுத்தலாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் விளைவான பாதகமான அம்சங்களை மாத்திரம் பகிரங்கமாகப் பேசிக்கொண்டு அதை மாற்றியமைக்க வேண்டுமென்று அரசாங்கத் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிசெய்த விடயத்தில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை செய்திருக்கும் ஆரோக்கியமான பங்களிப்பைப்பற்றி அரசாங்கத் தரப்பினர் கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையை மாற்றினால் மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை அபிவிருத்தி, கிராமியத் தொழிற்துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் சில தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை செய்திருக்கிறார். அவரைப்போன்று ஏனைய தமிழ்,முஸ்லிம் அரசியற் கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் நிலைவரங்களை அவதானிக்க வேண்டும்.

தங்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக் குறித்து தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சம் கொண்டவர்களாகவே காணப்படுகிறார்கள். சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக தேர்தல் முறையில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யக்கூடாது என்று அரசாங்கத்தை முன்கூட்டியே வலியுறுத்துவதற்காக தமிழ்,முஸ்லிம் அரசியற் கட்சிகள் காலந்தாழ்த்தாமல் ஐக்கியப்பட்ட அணுகுமுறையொன்றைக் கடைப்பிடிக்கவேண்டும். பிரதான அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் இது விடயத்தில் மேற்படி கட்சிகளுடன் சேர்ந்து செயற்படுவதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். சிறுபான்மை இனத்தவர்களின் பிரதிநிதித்துவங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுப்பதற்கான செயற்பாடுகள் கட்சி அரசியலுக்கு அப்பால் நேர்மையான ஒரு நோக்கத்தைக் கொண்டவை என்பதை இவர்கள் சகலரும் புரிந்து கொள்ளவேண்டும். இது விடயத்தில் தூரநோக்குடனும் விவேகத்துடனும் செயற்படத் தவறினால், அடுத்தடுத்த தேர்தல்களில் தங்களுக்கு நேரக்கூடிய கதி குறித்தாவது சிறுபான்மை இனங்கø"ளச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிந்திக்கட்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.