Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதுதான் சிங்களம்! ஒரே குட்டியில் ஊறிய ....!

Featured Replies

யுத்தக் குற்ற விசாரணை: ஐ.தே.க. எதிர்க்கிறது

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை பெறு வதற்கு சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாய கத்தால் அமைக்கப்பட்டுகின்றமையை பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கின்றது என்று அக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஆனால், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஏன் இவ்வாறானதொரு நிபு ணர்கள் குழுவை நியமிக்க முயற்சி எடுத்துள்ளார் என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அவதானம் செலுத்தியுள் ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்து மேலும் அவர் கூறியவை வருமாறு

ஐக்கிய நாடுகள் சபை எமது உள் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்றது. அவர் இவ்வாறு நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கான காரணம் என்ன? அதா வது இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசு சிறந்த முறை யில் விளக்கம் அளிக்கவில்லையா? அந்த விடயத்தில் அரசு பலவீன மாக இருந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

அரசு இந்த விடயத்தில் என்ன செய்கின்றது என்று நாம் வினவுகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்து அரசு எதிர்ப்பு வெளியிட்டு வந்தபோதிலும் ஐ.நா. அந்த விடயத்தை கைவிடவில்லை. ஆனால் இவ்வாறு உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்க முடியாது.

இப்படி ரவி கருணாநாயக்க கூறினார்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3336&Uthayan1275478493

திருமதி மகேஸ்வரன் ஐக்கிய தேச கட்சியில் இருந்து என்ன செயகிறா?\

தமிழின படுகொலையாளர்களுடன் திருமதி மகேஸ்வரன் இருந்து கொண்டு எதிர்த்து பேசாமல் இருப்பது தமிழர்களின் சாபக் கேடு. அவருக்கு வாக்களித்த மக்கள் தவறு செய்துள்ளனர்.

யுத்தக் குற்ற விசாரணை: ஐ.தே.க. எதிர்க்கிறது

இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆலோசனை பெறு வதற்கு சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாய கத்தால் அமைக்கப்பட்டுகின்றமையை பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கின்றது என்று அக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஆனால், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஏன் இவ்வாறானதொரு நிபு ணர்கள் குழுவை நியமிக்க முயற்சி எடுத்துள்ளார் என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி அவதானம் செலுத்தியுள் ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயம் குறித்து மேலும் அவர் கூறியவை வருமாறு

ஐக்கிய நாடுகள் சபை எமது உள் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கின்றது. அவர் இவ்வாறு நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கான காரணம் என்ன? அதா வது இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசு சிறந்த முறை யில் விளக்கம் அளிக்கவில்லையா? அந்த விடயத்தில் அரசு பலவீன மாக இருந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

அரசு இந்த விடயத்தில் என்ன செய்கின்றது என்று நாம் வினவுகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிக்கு ஆரம்பத்திலிருந்து அரசு எதிர்ப்பு வெளியிட்டு வந்தபோதிலும் ஐ.நா. அந்த விடயத்தை கைவிடவில்லை. ஆனால் இவ்வாறு உள்விவகாரங்களில் தலையிட இடமளிக்க முடியாது.

இப்படி ரவி கருணாநாயக்க கூறினார்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3336&Uthayan1275478493

நுணிப்புல் மேயாது நிதானமாக வாசிக்க ஒரு கட்டுரை!

இலங்கை அரச படைகள் மனித உரிமைகளை மீறவில்லை, இந்த யுத்தத்தில் பொது மக்களின் ஒரு சொட்டு இரத்தமும் சிந்தவில்லை போன்ற உண்மைக்கு முற்றிலும் முரணான விடாப்பிடியான இலங்கை அரசின் கருத்துக்கள் இவ்வரசு உண்மையை அறியவோ ஏற்றுக்கொள்ளவோ தயாரில்லை என்பதனையே காட்டுகின்றது. தவறுகளை ஏற்றுக்கொள்ளாத எவரும் அத்தவறுகளில் இருந்து தம்மைத் திருத்திக்கொள்ள முடியாது. அதற்கு இலங்கை அரசும் விதிவிலக்கல்ல. இலங்கை அரசு தென்னாபிரிக்காவின் பாடங்களைக் கற்றுக்கொண்டு உண்மையை அறியவும் அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். இங்கு உண்மையை அறிவது தண்டனை வழங்குவதற்காக அல்ல அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு புதிய பாதையில் மீளுறவை ஏற்படுத்தி பயணிப்பதற்காகவே.

இலங்கை அரசு மனித உரிமைகள் பற்றிய உண்மையை அறியவோ ஏற்றுக்கொள்ளவோ மறுக்கின்றதன் அடிப்படைக் காரணம் அது வெற்றி பெற்ற தனது இராணுவத்தை தண்டனையை நோக்கித் தள்ளிவடும் என்பதும் அதனால் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் தனது செல்வாக்கு சரிந்துவிடும் என்ற அச்சமும். மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளங்களில் இருந்து எழுகின்ற மனித உரிமைக் கோசங்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு எப்படியாவது இலங்கை அரசைப் பழிவாங்கி விடவேண்டும் என்கின்ற ஆவல். இந்த கோல்போஸ்ட்டுகளுக்கு இடையே மனித உரிமைகள் என்கின்ற பந்து உதைபடுகின்றது.

இவற்றில் இருந்து விடுவித்துக் கொண்டு முரண்பட்டு, பிளவுண்டுள்ள சமூகங்களிடையே எதிர்காலத்தில் இவ்வாறான துயர் மிகு அவலங்கள் நிகழாது என்ற அச்சத்தைப் போக்கும் வகையிலும் சமூகங்களிடையே நம்பிக்கையையும் மீளுறவையும் ஏற்படுத்தும் வகையில் இதுவரை இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பான பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் உண்மைகளை அறியவும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஈடுசெய்ய முடியாதவையானாலும் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக நட்ட ஈட்டை வழங்கி அவர்களுடைய புனர்வாழ்வுக்கு வழியமைக்க வேண்டும். இங்கு கேட்கப்படுகின்ற நீதி தண்டனை வழங்குவதற்கான பழிவாங்குகின்ற நீதியல்ல மாறாக சமூகத்தின் மீளுருவாக்கத்திற்கான நீதி.

Edited by Bond007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.