Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேபிக்கு பெருமடல் எழுதிய அண்ணோய் சேரமானுக்கு சிறுமடல்!

Featured Replies

கேபிக்கு பெருமடல் எழுதிய அண்ணோய் சேரமானுக்கு சிறுமடல்!

அண்ணோய் சேரமான்! ... கேபி, கேபி, கேபி! சரி அவன் துரோகி! இன்று சிங்களத்துடன் சேர்ந்து ஆடுகிறான்/ஆட்டப்படுகிறான் ...

ஏறக்குறைய 10 வருடங்கள் எட்டவல்லவா வைத்திருந்தனீங்கள், இந்த கேபியை! ஏன் பின்பு கிட்ட கொண்டு வந்தது மட்டுமல்லாமல் கேபியை சர்வதேச பிரதிநிதியாக அறிவித்தீர்கள்???

சரி அறிவிக்க முதலாவது, அவனுடைய இன்றைய முகம் கூட, உங்களால் அறிய முடியாத அளவிற்கு அற்புதமான போராட்டம் நடத்தினீர்களா???

இன்று மண்டையை போட்டுடைத்து கொய்யோ, முறையோ என ஒப்பாரி வைக்கிறீர்கள்!! ... புரியவில்லை, அறியவில்லை, தெரியவில்லை, ... இல்லை, இல்லை, இல்லை, ... என்றால் என்ன கோமணத்திலை போராட்டம் நடைபெற்றது????

அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன், அப்படிக் கதைக்கிறேன், இப்படிக் கதைக்கிறேன், ... என்றெல்லாம் அவன் சற்றலைட் தொலைபேசி ஊடாக விட்டபடி, தலைமையின் இருப்பிடங்களை எதிரிக்கு காட்டியபடி இருக்க, அதை புரியாமல், நிகழ்கால தொழில்நுடபங்களை அறியாமல் எங்கள் தலைமை வாய்பார்த்தப்படி நின்றது என்பதை சொல்லாமல் சொல்கிறீரா????

அண்ணோய் சேரமான், நாலெழுத்து தமிழில் எழுதலாம் என்ற நிலையில் உள்ள உம் போன்றோர் இங்கு லண்டனிலிருந்து புலிச்சாயம் பூசிய படி இதுவரை செய்தது ... அவனவனுக்கு துரோகிப்பட்டங்கள் கொடுத்ததும், சனங்களை குழப்பியதும் மட்டுமே!

கடந்த காலங்களில் விட்ட பிழைகளை ஆராய்ந்து, அவற்றுக்கான மாற்றீடுகளை காணத்தவறிய, எம் புலத்து காஸ்ரோக்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் நோக்கில் உங்கள் போன்றவர்கள் தொடர்ந்து மற்றவர்களை நோக்கி சுட்டு விரலை காட்டுவதிலேயே குறியாக நிற்கிறீர்கள்.

புலத்தில் உங்கள் போன்றோரின் குழப்பி அடிக்கும் செயற்பாடுகள்தான் இன்று சிங்களம் வேண்டி நிற்பதும், அதனை உங்கள் போன்ற அதிஅறிவுஜீவிகள் சிறப்பாக செய்தும் வருகிறீர்கள்! ... தொடரட்டும் உங்கள் போன்றோரின் சேவைகள்!

.... இது ஈழத்தமிழர்களின் சாபம்!

வணக்கம்

நெல்லயான்.

கஸ்ரோக்கள் என ஒரு அடை மொழி பாவித்து தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவருகின்றீர்கள்.

என்ன காரணத்திற்காக நீங்கள் குறிப்பிடும் கஸ்ரோக்கள் பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டது?

புலத்தில் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிர்வாகச் சிக்கல்களை சிக்கெடுக்க முடியாது சிக்குப்பட்டு போனவர்களை தொடர்ந்தும் குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாதுள்ளது.

உண்மைகள் வெளிவரும் போது உங்கள் நிலைப்பாடு நிச்சயம் மாறும்.

நெல்லையன்... KP வெளிவிவகார பொறுப்பு எண்டு சொல்லப்பட்டது இந்தியாவுடனான பேச்சுக்களில் KP தனக்கு இருந்த தொடர்புகளை கொண்டு பேசப்போவதாக தன்னை அழைக்கிறார்கள் எண்டு கேட்டதுக்கு இணங்கவே....! KP யினால் தமிழ் நாட்டு தமிழர்கள் சிலரும் பாதிரியாரும் பேச்சில் ஈடுப்படனர்... அவர்களுடன் பேசியது தலைவர் இல்லை... நடேசன் அண்ணை யுடன் தான் பேசினர்...

அதுவும் அனுராத புரம் தாக்குதலின் பின் இந்தியா அதிர்ப்தியை வெளியிட்டு இலங்கைக்கு நேரடியாக உதவிகளை வழங்கியதால் தான் KP ஏற்கனவே இருந்த தொடர்புகள் தன்னுடன் பேச அழைக்கிறார்கள் எண்றும் அனுமதி வாங்கி தருமாறு KP க்கு பிறகு அந்த பொறுப்பில் இருந்தவர் ஊடாக கடிதம் வாங்கிக்கொண்டார்...

மேற்க்கு நாடுகளுடனும் , எரிக் சொல்கைம் உடனும் ( ஊடாகவும்) நேரடியாக நாடேசன் அண்ணாவே பேசிக்கொண்டார்...

நடந்தது இதுதான்...

Edited by தயா

உந்த சோரமான்தான் 2009 மே 18க்கு முதல் தமிழ்நெற்றிலை கேவியை தலையில தூக்கி வைச்சு ஆடினவர். தமிழ்நெற்தான் கே.பி சர்வதேச பொறுப்பாளர் எண்டும் அவரின்னர அறிக்கைகளை பக்கம் பக்கமாக வெளியிட்டு வந்தவை.

  • தொடங்கியவர்

வணக்கம்

நெல்லயான்.

கஸ்ரோக்கள் என ஒரு அடை மொழி பாவித்து தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவருகின்றீர்கள்.

என்ன காரணத்திற்காக நீங்கள் குறிப்பிடும் கஸ்ரோக்கள் பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டது?

புலத்தில் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருந்த நிர்வாகச் சிக்கல்களை சிக்கெடுக்க முடியாது சிக்குப்பட்டு போனவர்களை தொடர்ந்தும் குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாதுள்ளது.

உண்மைகள் வெளிவரும் போது உங்கள் நிலைப்பாடு நிச்சயம் மாறும்.

ஆதிரை, .... நானும் 10 வருடங்களுக்கு மேலாக 40p பத்திரிகைகளை வீடு வீடாக அலைந்தவன் தான்! வீட்டுக்குள் பத்திரிகைகளை போட்டால் ... 40pகளா வரப்போகிரது ... சொந்தப்பணத்தை உண்டியலில் போட்டு கணக்கை கொண்டுபோய் முடிப்பதுதான் .. புரியும் கீழ் மட்ட தொட்டர்களின் வலி!

கீழ்மட்டம் வீடு வீடாக தட்ட ... மேல்மட்டங்களில் கதிரைப் போட்டி!! ... விளைவு சாவண்ணாவுக்கு தானா துரோகி, தானாவுக்கு சாவண்ணா ... சாவண்ணாவிற்கு கேஸ், சிசா, ஜெயதே ... எல்லோரும் துரோகிகள்! ஆளுக்கு ஆள் ஒவ்வொரு குறுப்புகள்!! சாவண்ணாவிற்கு முதலிருந்த சேகண்ணாவை சாவண்னா இதே கூட்டை வைத்துத்தான் குழி பறித்தவர்!! ... இவைகள் காஸ்ரோவுக்கு பின் நின்றனவா??? ... பல மடங்காக பெருக்கெடுத்தது!!! ... முடிபு பலர் ஒதுக்கப்பட்டார்கள் ... சிலர் துரோகிகளாக்கப்பட்டார்கள்! அந்த துரோகிகளாக்கப்பட்டவர்கள் எழும்பி நிண்டு ஆடுகையில் இந்த சாவண்ணாக்களும், தனாக்களும் ஒழித்து விட்டார்கள்!! ... மேலும் சாவண்ணாவும், தானாவும் தலைக்கு முன்னுக்கே பிடுக்குப்பாடு வருமளவிற்கு சென்றார்களாம்!!! ... யுத்த நிறுத்தம் வந்தவுடன் பலர் யோசித்தார்களாம் இக்காலத்தில் இப்புலம்பெயர் பிரட்சனைகள் தீர்க்கப்படுமென்று!!! அங்கும் போய்ச் சொன்னார்களாம் இந்த கோஸ்டி மோதல்களை நிறுத்துங்கள் என்றும் ... ஆனால் கோஸ்டிகள் தூண்டி விடப்பட்டன ... அதுதான் ஒவ்வொரு நாட்டிலும்!!!!

யுத்த நிறுத்தம் அறிவித்து ... பேச்சுவார்த்தை தொடங்கேலை ... புலத்தில் இந்தக் காஸ்ரோக்கள் .. இறுதியுத்தம் ... என்ற பல்லவியுடன் ... 2008 மணிபக் கரண்டி கொடுத்து ... பணவேட்டை!! இந்தக்காலத்தில் சிங்களவன் பேசாமல் இருந்து மெல்லமாக இருந்து காஸ்ரோக்களின் நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள்/புலனாய்வுத்துறைகள்/பொலிஸாருக்கு போட்டுக் கொண்டிருக்கவும் ... இந்தக் காஸ்ரோக்கள் மிரட்டி பணவேட்டையில்!! ... என்ன இந்த மேற்குலக அரசுகள்/புலனாய்வுத்துறைகள்/பொலிஸார் எல்லாம் கேணையர்கள் என்பதுதான் இந்த காஸ்ரோக்கள் போட்ட கணக்கு!!

... அடுக்கிக் கொண்டு போகலாம் ...

இப்படியாக இப்போராட்டம் அழிவுறதற்கு மிகப்பாரிய பங்கை இக்காஸ்ரோக்கள் வகித்திருக்கிறார்கள் ... என்பதே உண்மை! :)

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

.. நேற்றைய தினம் .. என் போன்று பன்னாடைத்தனமாக எழுதும் அதிபுத்திசாலியான அதியமானின் கட்டுரையை, கலைவாணி, வழமைபோல் இணைத்திருந்தார் ... சகிக்க முடியவில்லை ... நல்லவேளை நிர்வாகம் தூக்கிவிட்டது! ... அதனை பார்த்தால் உங்களுக்கு புரியும் அதிபுத்தாலியின் அவுட்புட்டுக்களை!!! ... இப்படியான கட்டுரைகள் நிச்சயமாக அதே அலவு புத்திசாலிகளான காஸ்ரோக்களையும், அவர்களால் இயக்கப்படும் பதிவு/சங்கதிகளையும் சந்தோசப்படுத்துமேயொழிய ... பொதுசனம் காறி உமிழ்ந்து துப்பும்!

நல்லது நெல்லையன் ஓ, நீங்கள் 96-97 க்குப் பிற்பட்ட காலத்துத் தோழர் போல இருக்கு..

நுனியை விட்டு விட்டு வாலைப்பிடிப்பதாக தெரிகிறது.

நன்றி வாருங்கள்.

வணக்கம் நெல்லையான், எனக்கும் 20 வருடங்களாக பட்டுணர்ந்த மதிப்பீடு உண்டு.

விளைவு சாவண்ணாவுக்கு தானா துரோகி,

இந்தப் பெரியவர் யார்,

நீங்கள் பிரித்தானியாவின் இடை நிலை வரலாற்றைக் குறிப்பிடுவதாக தெரிகின்றது.

இருட்டுக்குள் கறுத்தப் புனையைத்தேடிப்பிடிப்பது பெரும் சிரமம்.

நாள் எடுக்கும்.

Edited by aathirai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிரை, .... நானும் 10 வருடங்களுக்கு மேலாக 40p பத்திரிகைகளை வீடு வீடாக அலைந்தவன் தான்! வீட்டுக்குள் பத்திரிகைகளை போட்டால் ... 40pகளா வரப்போகிரது ... சொந்தப்பணத்தை உண்டியலில் போட்டு கணக்கை கொண்டுபோய் முடிப்பதுதான் .. புரியும் கீழ் மட்ட தொட்டர்களின் வலி!

கீழ்மட்டம் வீடு வீடாக தட்ட ... மேல்மட்டங்களில் கதிரைப் போட்டி!! ... விளைவு சாவண்ணாவுக்கு தானா துரோகி, தானாவுக்கு சாவண்ணா ... சாவண்ணாவிற்கு கேஸ், சிசா, ஜெயதே ... எல்லோரும் துரோகிகள்! ஆளுக்கு ஆள் ஒவ்வொரு குறுப்புகள்!! சாவண்ணாவிற்கு முதலிருந்த சேகண்ணாவை சாவண்னா இதே கூட்டை வைத்துத்தான் குழி பறித்தவர்!! ... இவைகள் காஸ்ரோவுக்கு பின் நின்றனவா??? ... பல மடங்காக பெருக்கெடுத்தது!!! ... முடிபு பலர் ஒதுக்கப்பட்டார்கள் ... சிலர் துரோகிகளாக்கப்பட்டார்கள்! அந்த துரோகிகளாக்கப்பட்டவர்கள் எழும்பி நிண்டு ஆடுகையில் இந்த சாவண்ணாக்களும், தனாக்களும் ஒழித்து விட்டார்கள்!! ... மேலும் சாவண்ணாவும், தானாவும் தலைக்கு முன்னுக்கே பிடுக்குப்பாடு வருமளவிற்கு சென்றார்களாம்!!! ... யுத்த நிறுத்தம் வந்தவுடன் பலர் யோசித்தார்களாம் இக்காலத்தில் இப்புலம்பெயர் பிரட்சனைகள் தீர்க்கப்படுமென்று!!! அங்கும் போய்ச் சொன்னார்களாம் இந்த கோஸ்டி மோதல்களை நிறுத்துங்கள் என்றும் ... ஆனால் கோஸ்டிகள் தூண்டி விடப்பட்டன ... அதுதான் ஒவ்வொரு நாட்டிலும்!!!!

யுத்த நிறுத்தம் அறிவித்து ... பேச்சுவார்த்தை தொடங்கேலை ... புலத்தில் இந்தக் காஸ்ரோக்கள் .. இறுதியுத்தம் ... என்ற பல்லவியுடன் ... 2008 மணிபக் கரண்டி கொடுத்து ... பணவேட்டை!! இந்தக்காலத்தில் சிங்களவன் பேசாமல் இருந்து மெல்லமாக இருந்து காஸ்ரோக்களின் நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசுகள்/புலனாய்வுத்துறைகள்/பொலிஸாருக்கு போட்டுக் கொண்டிருக்கவும் ... இந்தக் காஸ்ரோக்கள் மிரட்டி பணவேட்டையில்!! ... என்ன இந்த மேற்குலக அரசுகள்/புலனாய்வுத்துறைகள்/பொலிஸார் எல்லாம் கேணையர்கள் என்பதுதான் இந்த காஸ்ரோக்கள் போட்ட கணக்கு!!

... அடுக்கிக் கொண்டு போகலாம் ...

இப்படியாக இப்போராட்டம் அழிவுறதற்கு மிகப்பாரிய பங்கை இக்காஸ்ரோக்கள் வகித்திருக்கிறார்கள் ... என்பதே உண்மை! <_<

என்னதான் இருந்தாலும் கஸ்ரோ என்பவர் வீரச்சாவடைந்த ஒரு மாவீரர்.

இங்கே சகட்டு மேனிக்கு ஒரு மாவீரரின் பெயரைப் பயன்படுத்தி வசைபாடுவது பொருத்தமற்றது. உயிரோடு இருப்பவர்களை என்னவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.

இப்போது கே.பி.க்குத் திறந்த மடலெழுதும் சேரமானும் அவரது பரிவாரங்களும் தாம் யாரென்பதை யோசித்தால் நன்று. இப்போது இவர்கள் கே.பி.க்கு எதிராகச் சொல்லும் அதே காரணங்களைக் கொண்டே இவர்களையும் விமர்சிக்க முடியுமென்பதை வசதியாக மறந்துவிட்டு எழுதித் தள்ளுகிறார்கள். எதிரியின் பிடியிலிருக்கும் ஒருவரைத் தோண்டித் துருவி விமர்சிப்பதில் என்ன பலன்? தேவையில்லாமல் இவர்கள்தான் அவரை நாயகனாக்குகிறார்கள். ஆனால் எதிரியிடம் பிடிபட்டு பின் வெளியே வந்துநின்றுகொண்டு கே.பி.யைப் பற்றி விமர்சிப்பவர்களைக் குறித்து மக்களே ஒருநாளில் தீர்ப்பளிப்பார்கள். அப்போது இவர்களுக்கு விளங்கும் தமது வண்டவாளங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.