Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகாஷியின் கோணல் பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகாஷியின் கோணல் பார்வை

வன்னியில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர் என்று இங்கு வந்த ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி கருத்து வெளியிட்டுச் சென்றிருக்கிறார். அதனைக் கேட்ட தும், வன்னி அகதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் பக்கம் நின்று அதற்குச் சார்பாகக் கருத்துக் கூற வேண்டும் என்பதனை நோக்காகக் கொண்டு தான் அவரது இலங்கை விஜயம் விடேசமாக அமைந் ததோ என்று எவருக்கும் எண்ணத் தோன்றும்.

யசூசி அகாஷி ஜப்பானின் பிரபல மூத்த ராஜதந்திரி. அந்த நாட்டின் விசேட தூதுவராகப் பல நாடுகளுக்கு விஜயம் செய்யும் அளவுக்கு அந்த நாட்டின் உயர் பதவியில் உள்ளவர். இந்த வகையில், எந்தத் தேசத்து அரசாங்கமும் தம்மைக் கொண்டு ஒரு நற்சான்றிதழ் பெறவே விரும்பும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அப்போதுதான் ஜப்பானின் நிதிவளம் தங்கள் பக்கம் ஆறாக இல்லாவிடினும் குளமாகவேனும் சுவறும் என்று வசதி குறைந்த நாடுகள் நினைப்பதும் அவருக்குத் தெரியாமல் இருக்க நியாயம் இல்லை.

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களின் மீளக் குடியமர்வு நடைபெற்ற இடங்களுக்கு இலங்கை அரசாங்கம் தம்மை அழைத்துச் சென்றபோது, தம்மைக் கொண்டு ஒரு நல்ல படத்தையே, போலியாக உருவாக்கப்பட்ட பதிவையே தமக்குக் காட்டியிருக்கும் என்று அகாஷி நினைத்திருக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் தம்மைத் தக்கப்படி பாவிக்கபோகின்றது என்பதனை அவர் அறியாமல் இருக்கமுடியாது.

வன்னித் தமிழ் அகதிகள் மீளக் குடியமர்ந்த பகுதி ஒன்றை பெரும் எடுப்பில் சகலதும் தாராளமாக கிடைப்பது போன்று காட்டி அகாஷியிடம் அதிக புள்ளிகள் வாங்க அரசு தரப்புத் திட்டமிட்டுச் செயற்பட்டிருக்கிறது.

அதனை ஒரு குத்துமதிப்பீடாக வைத்துக் கொண்டு யசூசி அகாஷி, மீளக் குடியமர்ந்த தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள் என்று கருத்துக் கூறிச் சென்றிருக்கிறார்.

வன்னியில் மீளக்குடியமர்ந்த மக்களில் மிகப் பெரும்பாலான மக்கள், மேலோட்டமாகச் சொல்வதானாலும் 90 வீதமானோர் அடிப்படை வசதிகள் தானும் இல்லாது அல்லலாடுகிறார்கள் என்பதே அங்கு அரசாங்கத்தின் ஏற்பாடு செய்யப் பட்ட விஜயத்தில் அன்றி தமது சொந்தத்தில், அவர்களின் நிலையை அறியவேண்டும் என்ற ஆர்வத்துடன் நோக்குடன் சென்ற பலர் வரைந் துள்ள படங்கள்.

மீளக்குடியமர்ந்த வாழ்க்கை நிலை என்பது வெறும் உண்டி, உறைவிடம் மற்றும் அடிப்படை வசதிகள் மட்டும் கொண்டதல்ல. அவர்கள் மனதில் ஏற்பட்டுள்ள வடுக்கள், குறிப்பாகக் காணமல் போயும் தடுத்து வைக்கப்பட்டும் உள்ள தமது உறவுகளின் நிலையை நித்தம் நித்தம் எண்ணி உளநலம் நொடிந்து போயுள்ளவர்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளனர். இவற்றை அரச தரப்பு நிச்சயம் அகாஷியிடம் மறைத்திருக்கும்.

தமது உறவுகள் எங்கு தடுத்து வைக்கப்பட் டிருக்கிறார்கள், என்பதனை மீளக் குடியமர்ந்த மக்கள் அறிவதற்குத் தானும் உரிய விபரங்களை வெளியிடும் மனிதாபிமானம் அரசுக்கு இன்னமும் பிறக்கவில்லை. இப்படி ஒரு இருண்டநிலையில், மீளக் குடியமர்ந்த தமிழ் மக்கள், அல்லும் பகலும் அனவரதமும் துடியாய்த் துடித்து, பொழுதுகளை, நாள்களை கழித்துக் கொண்டிருக்கும் நிலையை அறியாத அகாஷி

மீளக் குடியமர்ந்த மக்கள் நிம்மதியாக வாழ்கின் றார்கள் என்று எவ்வாறு நற்சான்றிதழ் வழங்க முடியும்? ஜப்பானின் உயர் ராஜதந்திரி ஒருவர் இவ்வாறு கருத்துத் தெரிவிப்பது அவர் இலங்கை அரச சார்புடையவர், அதன் ஆதரவாளர் என்பதால் ஏனைய நாடுகளைத் தவறாக வழிநடத்துவதற்கான "சதி' என்று கூடக் கூறலாம்.

வன்னித் தமிழ் மக்கள் மீளக் குடியமர்ந்த மக்கள் மத்தியில் உணவுப் பற்றாக்குறையும் வேலை யில்லாப் பிரச்சினையும் இருப்பதாகக் கூறப்பட்டது உண்மையாக இருக்கலாம் என்று அவர் சிலேடையாகக் கூறியிருப்பது உண்மை நிலையை மறைப்பதற்கான அப்பட்டமான முயற்சி என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.

இலங்கையில் நடந்தவற்றைச் சர்வதேச அமைப் புக்கள் வெறுமனே கண்டிப்பதாகவோ, குறை கூறுவதாகவோ மட்டும் இருக்கக் கூடாது என்று அகாஷி கூறியிருக்கும் மந்த அறிவுரையும் இங்கு கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும்.

தம்மைப் போலவே ஏனைய நாடுகளும் இல்லா ததை உள்ளதாகக் காட்டவேண்டும் என்ற அவரது கருத்து, யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டது. உயர்தர ராஜதந்திரி ஒருவரால் அதனைப் பகுத்தாய்ந்து உணரமுடியவில்லை என்றால், அவரை எவராலும் புரிந்து கொள்ள முடியாது என்பதே மீதமாகும் தோற்றம்!

நன்றி - உதயன் இணையம்

இவற்றை ஆங்கிலத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.