Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

... அரசுகளுக்கு இடையில் அதிகாரப் பகிர்வு!சர்வ கட்சிக் குழுவின் சிபாரிசு அம்பலம்

Featured Replies

ஐக்கிய இலங்கைக்குள் மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரப் பகிர்வு!சர்வ கட்சிக் குழுவின் சிபாரிசு அம்பலம்

செவ்வாய், 20 ஜூலை 2010 07:41 - www.tamilcnn.com

cover-letter-template_200_200.jpg

சர்வ கட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டிருக்கும் தீர்வுத் திட்ட அறிக்கையில் ஐக்கிய இலங்கைக்குள் அரச அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது இந்தத் தீர்வுத் திட்ட அறிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,ஐக்கிய தேசிய கட்சி ஆகியன நேற்று பகிரங்கப்படுத்தி இருந்தன.

இந்நிலையில் அந்த அறிக்கையில் முக்கியமாகச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் ஏனைய முக்கிய விடயங்கள் வருமாறு:-

*நாடாளுமன்ற ஆட்சி முறைமை

*அரச கரும மொழியாக தமிழும், சிங்களமும்.அலுவலக தேவைகளுக்க்காக ஆங்கிலப் பயன்பாடு

*புத்த சமயத்தின் மேன்மை நிலையும், ஏனைய சமயங்களின் உரிமைகள் அரசமைப்பின் மூலம் பாதுகாக்கப்படலும்

*அரசமைப்பின் உயரிய நிலையை பேணும் வகையிலான அரசமைப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை விட தனியாக அமைக்கப்படல்

*தேர்தல் முறைமை, தொகுதி வாரித் தேர்தல் முறைமை- விகிதாசாரத் தேர்தல் முறைமை இரண்டும் கலந்த முறையிலான தெரிவு

*அதிகாரப் பகிர்வு, மத்திய அரசு, மாகாண அரசு, உள்ளூராட்சி அரசு என்று மூன்று தனித்தனி அரசுகள்,மூன்றுக்கும் அரசமைப்பின் மூலம் உரிய அதிகாரங்கள்

*ஒரு செனற்சபை

*63 செனட்டர்கள்,ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் 07 செனட்டர்கள் தெரிவு.

பிகு:

இந்த அறிக்கையின் உள்ளடக்கம் என்ன? என்று தெரிந்தால் ...

  • தொடங்கியவர்

ஒற்றையாட்சிக்குள் மாகாணசபைகளுக்கு அதிகாரம்: எதிரணி சபையில் சமர்பிப்பு _

வீரகேசரி நாளேடு 7/20/2010 8:18:43 AM Share

ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். தொகுதிவாரி முறைமையையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை ஏற்படுத்தப்பட வேண்டும். மத்திய, மாகாண, உள்ளூராட்சி மட்டங்களில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியம் என்று சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை விட மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட செனட்சபை, இந்திய வம்சாவளி மக்களுக்கு சமூக சபை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய, மாகாண உயர்பதவி நியமன சபை அமைக்கப்படுதல் போன்ற யோசனைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.சர்வகட்சிக் குழுவின் அறிக்கை இன்று எதிர்க்கட்சியினரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ஆர். யோகராஜன் இதனை இன்று சமர்ப்பிக்கவுள்ளார். இதுகுறித்த செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நடைபெற்றது. இந்தச் செய்தியாளர் மாநாட்டில் சர்வகட்சிக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்களான ஆர். யோகராஜன் எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் நல்லையா குமரகுருபரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சர்வகட்சிக் குழுவின் அறிக்கை கடந்தவருடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரணவினால் கையளிக்கப்பட்டிருந்தது. இதனை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் கோரியிருந்தபோதிலும் இதுவரை அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்த நிலையிலேயே இந்த இறுதி அறிக்கையினை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமனற் உறுப்பினர் ஆர். யோகராஜன் அறிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த யோகராஜன் எம்.பி., ஜனாதிபதி சர்வக்கட்சி மாநாட்டை நடத்தி சர்வகட்சி ஆலோசனைக் குழுவும் நிறுவப்பட்டது. அந்த மாநாட்டிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தவிர ஏனைய சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சர்வக்கட்சி ஆலோசனை குழுவில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி அங்கம் வகித்தபோதிலும் ஆலோசனை குழுவிலிருந்து இடைநடுவிலேயே விலகிக்கொண்டன.

சர்வக்கட்சி ஆலோசனை குழுவிற்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் இரண்டு நிபுணர்கள் குழுவும் நியமிக்கப்பட்டது அந்த குழுவின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டே இந்த இறுதியறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை குழுவில் பங்கேற்ற சகல கட்சிகளினதும் ஆலோசனைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆலோசனை குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் 12 கட்சிகளும் எதிர்க்கட்சி தரப்பில் இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர் . இந்த குழு 128 தடவைகள் கூடியதுடன் பாராளுமன்ற ஹன்சாட் அறிக்கையாளர்களினால் ஒவ்வொரு கூட்டமும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

இறுதியறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டபோது அவர் அதனை பகிரங்கப்படுத்துவார் என்று நினைத்திருந்தோம். ஆனால் பகிரங்கப்படுத்தவில்லை ஆலோசனை குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு கூட வழங்கப்படவில்லை. யுத்தம் முன்னெடுக்கப்பட்டபோது அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்பட்டது. ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் போது அரசியல் தீர்வு தொடர்பிலும் சர்வக்கட்சி ஆலோசனை குழுத்தொடர்பில் பெரிதாக பிரஸ்தாபிப்பார். அதேபோல வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது சர்வக்கட்சி ஆலோசனை குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண சர்வக்கட்சி ஆலோசனை குழுதொடர்பில் கருத்துரைப்பார்.

13 மாதங்களாகியும் அறிக்கை வெளியிடப்படவில்லை

2009 ஜூன் 30 ஆம் திகதி சர்வக்கட்சி ஆலோசனை குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 14 மாதங்கள் கடந்து விட்டநிலையில் ஜனாதிபதியிடம் இறுதியறிக்கை கையளிக்கப்பட்டு 13 மாதங்கள் கடந்துவிட்டது இன்னுமே அறிக்கை வெளியிடப்படவில்லை. ஆலோசனை குழுவில் அங்கம் வகிக்கின்ற கட்சி பிரதிநிதிகளுக்கேனும் வழங்கப்படவில்லை. ..

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=25613

அரசியல் தீர்வு பற்றிய அழுத்தங்களை இல்லாமல் செய்ய சிங்கள பயங்கரவாதிகள் (மகிந்த, ரணில், ....) சேர்ந்து செய்யும் விசமத்தன நாடகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.