Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களை மழுங்கடிக்கும் அறிக்கைப் போர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை மழுங்கடிக்கும் அறிக்கைப் போர்!

தமிழக முதல்வர் கருணாநிதியும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் தவறாமல் ஒவ்வொரு நாளும் அறிக்கை விடுத்து நடத்தும் போர், தமிழ்நாட்டு மக்களை திட்டமிட்டு மழுங்கடிக்கும் அக்கப்போராகவே தெரிகிறது.

img1100827051_1_1.jpg

இந்த இரு தலைவர்களும் வெளியே வந்த பொது மேடைகளில் பேசினாலும் சரி, தங்களது இல்லம் அல்லது அலுவலகங்களில் இருந்துகொண்டு 3,4 பக்கங்களுக்கு குறையாமல் தட்டச்சு செய்து கையெழுத்திட்டு அறிக்கையாக வெளியிட்டாலும் சரி, அதில் ஏதாவது ஒரு பிரச்சனையைப் பற்றிக்கொண்டு, அதில் தங்களுக்கு இருக்கும் ‘அக்கறை’யைக் காட்டிக்கொள்வதோடு நிற்காமல், அதில் தங்களின் பங்கை சாதனையாக எடுத்துக் கூறிவிட்டு, அதற்கு எதிராக செயல்பட்டவரே இன்றைய முதல்வர் என்று ஜெயலலிதாவும், தனது முயற்சிகளுக்கெல்லாம் அன்று எதிர்ப்புக் காட்டியவர்தான் ஜெயலலிதா என்று கருணாநிதியும் எழுதி விடுவார்கள்.

இவர்கள் அளிக்கும் இந்த அறிக்கையே அன்றையே தமிழ் தொலைக்காட்சிகள் அனைத்திலும் முக்கியச் செய்தியாக இருக்கும். அவர்களின் தொலைக்காட்சிகளில் 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை படிக்கப்படும். அவர்களுக்குச் சொந்தமான தொலைக்காட்சிகளிலும், இவர்களின் அறிக்கைகள் மாலை, காலை நாளிதழ்களிலும் ஒரு பக்கத்தை அடைத்துக் கொண்டு செய்தியாகிறது. இதுதான் தமிழ்நாட்டின் சகிக்க முடியாத வழமையாகத் தொடர்கிறது.

தமிழரும், தமிழ்நாடும் சந்தித்துவரும் கேடுகளுக்கெல்லாம் அடுத்தவரே காரணம் என்று இருவரும் மாறி மாறி விடுக்கும் அறிக்கைகள் பல நேரங்களில் அர்த்தமற்றதாகவும், சில நேரங்களில் உலகமறியா நகைச்சுவையாகவும் இருக்கிறது.

உதாரணத்திற்கு, நீண்ட காலத்திற்கு சட்டப் பேரவைப் பக்கமே வராத எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, ஒரு நாள் பேரவைக்கு வந்து பேசியதற்குப் பதிலளித்த தமிழக முதல்வர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தான் நடித்த ஒரு படத்தில் பாடிய பாடலில் வரும், “ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே” என்று பாடியது தன்னைக் குறிப்பிட்டுத்தான் அவ்வாறு பாடினார் என்று கூற, மறுநாள் ஒரு அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, “திருமணச் செல்வியோ, நான் தேடிய தலைவியோ” என்று மற்றொரு படத்தில் எம்.ஜி.ஆர். பாடியது தன்னை குறிப்பிட்டுத்தான் என்று கூறி அறிக்கை வெளியிட்டார். இந்தச் செய்திகளைப் படிக்கும் எவருக்கும் சகிக்க முடியாத வெறுப்புணர்வு ஏற்படுமே என்று இந்த இரு தலைவர்களும் கொஞ்சமாவது சிந்திந்திருப்பார்களா என்று தெரியவில்லை.

தமிழகத்தின் அரசியல் பாரம்பரியம்!

தமிழக அரசியல் அரங்கில்தான் ஒரு காலத்தில் சட்டப் பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் நாட்டின் பிரச்சனைகள் மிக ஆழமாக பேசப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை, மாநிலங்களையில் பேசிய பேச்சுகள் அப்போதிருந்த பெரும் தலைவர்களால் பாராட்டப்பட்டன.

img1100827051_1_2.jpg

கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து இரா.செழியன், நாஞ்சில் மனோகரன், மூக்கையாத் தேவர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் முன் வைத்த வாதத்திற்கு பதில் கூற முடியாமல் அன்றைய மத்திய அமைச்சர்கள் திணறினர். தமிழ்நாட்டின் பிரச்சனைகள் மட்டுமின்றி, தமிழன் சற்றும் சம்மந்தப்படாத காஷ்மீர் பிரச்சனையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கைகளை விமர்சித்து இரா.செழியன் பேசிய பேச்சு நாடாளுமன்றத்தை மட்டுமல்ல, இந்திரா காந்தியையும் அசைத்தது. அதற்காக ஷேக் அப்துல்லா நாடாளுமன்றத்திற்கு வந்து செழியனை பாராட்டிய வரலாறு உண்டு.

1975ஆம் ஆண்டு, தனது பதவிக்கு வந்த ஆபத்தை நாட்டிற்கு வந்த ஆபத்தாகக் கூறி, நாட்டின் அவசர நிலையை பிரகடனம் செய்த அன்றையப் பிரதமர் இந்திரா காந்தியின் முடிவைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து பெருந்தலைவர் காமராசர் பேசினார். கிராமம் கிராமமாக சென்று அவர் பேசிய பேச்சுகள் நவசக்தி நாளிதழில் முழுமையாக வெளிவரும். அதனைப் படித்துதான் நமது ஜனநாயகத்திற்கு வந்த ஆபத்து எப்படிப்பட்டது என்பதை மக்கள் உணர்ந்தனர். நாட்டின் ஜனநாயகத்திற்கு வந்த ஆபத்தை தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாக கருதினார் காமராசர். அவர் தேர்வு செய்து பிரதமராக அமர்த்தியவர் அல்லவா இந்திரா காந்தி? அவருக்குத் துடித்தது. அந்த வேதனையே அவருடைய உயிரையும் குடித்தது.

எமர்ஜென்சியை முடித்த ஜெயப்பிரகாஷ் நாராய‌ண்!

இதே காலகட்டத்தில் வாழ்ந்த மற்றொரு பெரும் தலைவரான லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண், அவசர கால நிலை அறிவிக்கப்பட்டதும் கைது செய்யப்பட்டு சண்டிகரில் சிறைப்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 75 வயது. நாளுக்கு நாள் அவரது உடல் நிலைக் கெட்டுக்கொண்டே வந்தது. 1976ஆம் ஆண்டின் இறுதியில் விடுதலை செய்யப்பட்டார் ஜெ.பி.

img1100827051_2_1.jpg

“எனக்கு இரண்டு மாத அவகாசம் கொடுங்கள். எனது உடல் நிலையைத் தேற்றிக்கொள்கிறேன். அதன் பிறகு இந்திய நாட்டை இந்திராவின் சர்வாதிகாரத்தில் இருந்து மீட்டே தீருவேன்” என்று சபதமேற்று அதனை நிறைவேற்றியும் காட்டினார். பழைய காங்கிரஸ், ஜன் சங், பாரதிய லோக் தள், ஜனநாயக காங்கிரஸ், சோசிலிஸ்ட் என்று அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனதா என்ற கட்சியை உருவாக்கி, காங்கிரஸை தோற்கடித்து, இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சியை அகற்றினார்.

தன்னை சிறையில் அடைத்த இந்திரா காந்திக்கு எதிராக அவர் செய்த பரப்புரையில் இப்படி தனி நபர் விமர்சனம் இல்லை. போராடிப் பெற்ற சுதந்திரத்திற்கு அத்தாட்சியாகத் திகழும் ஜனநாயக உரிமைகளை அவசரச் சட்டத்தை பிரகடனம் செய்து முடக்கியதைக் கண்டித்து கங்கை பள்ளதாக்கு முழுவதும் பிரச்சாரம் செய்தார். பல இடங்களில் அவருடை ஒலி நாடாக்கள்தான் பேசின. காங்கிரஸ் வீழ்த்தப்பட்டது.

அவரும் ஆளும் கட்சிக்கு எதிராக அறிக்கை விடுத்துப் பேசியிருக்கிறார். ஆனால் அவையாவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. பெரியாரும், ராஜாஜியும், முத்துராமலிங்கத் தேவரும், ஜீவாவும், அண்ணாவும் தாங்கள் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் செலுத்தினார்கள். அதனால்தான் இன்றுவரை அவர்கள் மக்களால் வழிகாட்டிகளாக போற்றப்படுகிறார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட அடிப்படை அரசியல் நாகரீகம் எதுவும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் விடுக்கும் அறிக்கையில் இல்லை. என்னை பெயர் சொல்லி அழைக்கிறார் என்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைக் கூட்டி கருணாநிதி புலம்புகிறார். இதற்கு மேல் தீயசக்தி என்ற பெயருடன் கருணாநிதியை அழைப்போம் என்று தன் பங்கிற்கு பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைக் கூட்டி ஜெயலலிதா கத்துகிறார். இந்தப் பேச்சுக்களுக்கும் இந்த நாட்டின் பிரச்சனைகளுக்கும் என்ன சம்மந்தம்? நல்லது நடந்தால் அது என்னால்தான் என்பது, ஏதாவது ஒரு விடயம் தவறாகப் போய்விட்டால் அதற்குக் காரணம் என்று அடுத்தவர் மீது பழிபோட்டு அறிக்கை வெளியிடுவது. இதுவே இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் செய்துவரும் அரசியல்.

இதுவும் இராஜதந்திரமோ?

இந்த இரு தலைவர்களும் இப்படி ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி அறிக்கை வெளியிட்டுக் கொள்வது கூட ஒரு அரசியல் ‘இராஜதந்திரம்’ என்று சிலர் கூறுகின்றனர். அதாவது தங்களைத் தாண்டி மக்கள் வேறு எவரையும் பற்றிச் சிந்திக்காமல் தடுக்கவே, இவர்கள் மிகச் சாதுரியமாக ஒருவரைத் தாக்கி மற்றவர் அறிக்கை விடுவதும், பேசுவதும் என்றும், அதன் மூலம் ‘கருணாநிதியை விட்டால் ஜெயலலிதா, ஜெயலலிதாவை விட்டால் கருணாநிதி, வேறு யார் இருக்கிறார்கள்’ மக்களை பேச வைத்து, அரசியலில் வேறு மாற்று ஏற்படாமல் தடுக்கின்றனர் என்றும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு சிந்திக்கத் திறனற்றவர்களா தமிழ்நாட்டு மக்கள்?

ஆமாம் என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள். இவர்கள் இருவரின் தலைமையில் அமையும் கூட்டணியில் ஒன்றிற்குத்தான் வாக்களித்து ஆட்சிக்குத் தேர்வு செய்கிறார்கள், அதனால்தான் மூன்றாவது அணி ஒரு பெரிய தாக்கத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தவில்லையென்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.

கொள்கையல்ல, கூட்டணியே அரசியல்!

சமீப காலங்களில் இந்த இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்ச்சித்து அறிக்கை கொடுத்துக் கொண்டிருந்தாலும், அதில் காங்கிரஸ் கட்சியை அல்லது அக்கட்சியின் தலைமையிலான மத்திய அரசை விமர்சிப்பதை மிகச் சாதுரியமாகத் தவிர்க்கின்றனர்.

img1100827051_3_1.jpg

உதாரணத்திற்கு கச்சத் தீவு, பெரியாறு அணை, காவிரியாற்றுப் பிரச்சனை, தமிழீழ பிரச்சனைகளில் மத்திய காங்கிரஸ் அரசு தமிழர் நலனிற்கு எதிராக வெளிப்படையாகச் செயல்பட்டும் இந்த இரு தலைவர்களும் காங்கிரஸையோ அல்லது அதன் தலைவர் சோனியாவையோ விமர்ச்சிப்பதில்லை. காரணம், இவர்களின் ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் கொள்கைக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது மிக அவசியமானதென (?) கருதுகிறார்கள். எனவே, தமிழர் நலன் பற்றி உரத்த குரலில் ஒருவரை மற்றவர் சாடினாலும், அதற்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்க்காமல் தவிர்ப்பது அல்லது (விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளில்) மேம்போக்காக எதிர்ப்பு காட்டுவது என்று அடக்கி வாசிக்கிறார்கள்.

காங்கிரஸின் ஆதரவின்றி ஆட்சி நிலைக்காது என்ற அச்சம் கருணாநிதிக்கு, காங்கிரஸ் துணையின்றி ஆட்சியேது என்ற நிலை ஜெயலலிதாவிற்கு. இதில் மற்ற குட்டிக் கட்சித் தலைவர்களும் மாறுபடவில்லை. எல்லோரின் ஆட்சிக் கனவிலும் காங்கிரஸ் கன்னிதான் வந்து வாட்டுகிறாள் என்பது அவர்கள் விடும் அறிக்கையிலும் தெரிகிறது.

அதுமட்டுமல்ல, முக்கிய பிரச்சனைகளில் தங்களுடைய நிலைப்பாட்டிற்கு எதிராக அமையும்போது, அதன் மீது விவாதம் ஏதும் எழாமல் தடுக்க, மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஒரு அறிக்கையை விடுத்து, அதன் மூலம் எதிர் முகாமிலிருக்கும் கட்சிகளை நோண்டுவிடுவதும் நடக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளை நோண்டி கருணாநிதி விடுத்த அறிக்கை இந்த வகையைச் சார்ந்ததுதான் என்கிறார்கள்.

img1100827051_3_2.jpg

அமுக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டம்!

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதி, சேது சமுத்திர திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்று ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் சேது சமுத்திரப் பிரச்சனை எவ்வாறு கிடப்பில் போடப்பட்டதாக கூற முடியும்? என்ற கேள்வி எழுந்தது.

அந்தச் செய்தி மறுநாள் சில நாளேடுகளில் மட்டுமே வந்தது! அதே பேட்டியில் திருச்சியில் ஜெயலலிதாவிற்கு கூடியது கூட்டப்பட்ட கூட்டம் என்றும், அரசு கூட்டும் கூட்டங்களுக்கு ஜெயலலிதா வராதது குறித்தும் கருணாநிதி பேசியது பெரிய தலைப்புகளில் செய்தியாக இருந்தது!

ஆனால், சற்றும் எதிர்பாரா விதத்தில் எந்த ஒரு கட்சியின் தலைவரும், சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக எவ்வாறு அறிவிக்கலாம் என்று கேள்வி எழுப்பி அறிக்கை அளிக்கவில்லை. அதே நாளில், கருணாநிதியைக் கண்டித்து விஜயகாந்த வெளியிட்ட பதிலறிக்கை பெரிதாக வெளிவந்தது. ஆக முக்கியமான சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்பட்ட விடயம் கண்டுகொள்ளாமலேயே போய்விட்டது!

அரசியல் தலைவர்கள் பேச்சும் அறிக்கையும் பிரச்சாரமும் பிரச்சனைகளின் வேரை, அதன் தாக்கத்தை, அதற்கான தீர்வை மக்கள் புரிந்துகொள்வதற்கு உதவியது. ஆனால் இன்று, ஆட்சியைக் கைப்பற்றவும், அதனை காப்பாற்றிக் கொள்வதுமே தலைவர்களின் கொள்கை என்றாகிவிட்டது. தங்களுடைய இந்த இராஜதந்திரத்தை மக்கள் சற்றும் புரிந்துகொள்ளக் கூடாது என்று இந்தத் தலைவர்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் பிரச்சனையின் பேரால் ஒருவரைத் தாக்கி ஒருவர் அறிக்கை விட்டு மக்களைக் குழப்புகிறார்கள், மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளை மக்கள் புரிந்துகொள்ள விடாமல் திசை திருப்புகிறார்கள்.

நன்றி வெப்துனியா

break-up-letter.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.