Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடும்... அதன் பின் விளைவுகளும்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடும்... அதன் பின் விளைவுகளும்...

( நம்முடைய கற்பனை )

இனி நடக்க இருப்பவை:

ராஜ பக்சே சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் முழக்கம்:

Mahinda%20Rajapakse11.jpg

கொழும்பு:

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் நிறைவு நாளான இன்று இலங்கை அதிபர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.. அந்த உரையின் போது. நாட்டில் சிறுபான்மையினர் என்று ஒரு பான்மையினர் இல்லவே இல்லையென்றும் அனைவரும் சமமானவர்களே என்றும் குறிப்பிட்டார்(அதாவது கூடியவிரைவில் சிங்களரவராக மாற்றிடுவார்கள் என அர்த்தம்!!) மேலும் தமிழும் சிங்களமும் சகோதர மொழிகள் என குறிப்பிட்ட அவர்..

சிங்களவர்களை தமிழ் படிக்க தமது அரசு ஊக்குவித்துவருவதாக குறிப்பிட்டார்..

அரசியல் தீர்வு குறித்து யாரும் பேசதேவையில்லை என தெரிவித்த அவர் அது குறித்து தமது தலைமையில் அமைக்கபட்ட குழு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டார்.. எதிர்காலத்தில் 2060 இல் சிறந்ததொரு தீர்வை அக்குழு வைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.. போர்குற்ற விசாரணை குறித்து கருத்து தெரிவித்த அவர் இலங்கை ஒரு இறை ஆமை உள்ள நாடு எனவும் சர்வதேச நாடுகள் தங்கள் வேலையை பார்க்க வேண்டும் எனவும் ..

அது குறித்து தாம் அஞ்ச போவதில்லை எனவும் இலங்கையை அபிவிருத்து செய்வதே தமது உயர்ந்த லட்சியம் இந்த தமிழ்சகோதரர்கள் சூழ்ந்துள்ள இந்த மாநாட்டின் வாயிலாக தெரிவிக்க விரும்புவதாகவும் சூளுரைத்தார். முன்னதாக மாநாட்டின் தொடக்க உரையில் " என் கன்புக்கினிய தொமில் சகோதர்ர்களெ" என அவர் அழைத்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாகியது.. இலங்கையில் சிங்கள அரசியல் தலைவர் ஒரு தமிழ் பேசுவது முதன் முறை எனப்து குறிப்பிடத்தக்கது..

இனி பின் விளைவுகளை பார்ப்போம்:

கருணாநிதி: இன்று காலை அறிவாயலத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கலைஞர் கருணாநிதி வழங்கிய பதில்கள்

karunanidhi.jpg

நிருபர்: இலங்கையில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் விரைவில் 2060 இல் இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என ராஜ பக்சே சொல்லியிருக்கிறார்..அது பற்றி?

கருநா: மிக்க மகிழ்ச்சியான செய்தி.. என்னை விட மகிழ்ச்சியடைவர் யார் உளர்.. இங்கே நான் இலங்கை தமிழர்களுக்காக கழகம் செய்ததினை குறிப்பிட விரும்புகிறேன்..

1947 இல் வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே இலங்கை தமிழர்களூக்காக குரல் குடுத்த கழகம் தி.மு கழகம் எனபதை குறிப்பிடவிரும்புகிறேன்.. அன்றைய தினத்தில் சிதம்பரத்தில் நடைபெற்ற மாநாட்டில் இலங்கை தமிழர்கள் வழங்கிடு சுயாட்சி.. இல்லையேல் ஆக்கிடுவோம் காட்டாட்சி என அறிஞ்சர் குண்ணா தலைமையில் முழங்கியதை மறக்க இயலுமா? பின்னர் 1962 இல் நடை பெற்றாமாநாட்டிலும் மதுரையில் தி.முகழகத்தின் கோட்பாடுகள் எடுத்துவைத்தோம்.. அது மட்டும் பின்னர் 1967 19681969 என அனைத்து மாநாடுகளிலும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தொம் என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.. இது அந்த காலகட்டத்தில் சோபன்பாபோடு டூயட் பாடி கொண்டு இருந்தவருக்கு தெரியுமா? (ஜெவை இழுக்கல்லனன் இவருக்கு தூக்கம் வராது)

நிருபர்: எனினும் 2060 என்பது அதிக கால அளவாக தெரியவில்லையா?

ஆக்க பொருத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டும்... இவ்வ்வாறு கேள்விகள் கேட்டு ராஜ பசேவை சங்கடத்திற்கு உள்ளாக்க கூடாது.. எனினும் தங்களை போன்றவர்களின் கோரிக்கைக்காக 2060 என்பதினை குறைத்து 2059 ல் ஆக தீர்வு வரும் படி விரைவு படுத்த மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்

2.gif

அடுத்த நாள் முரசொலியில் தம்பிக்கு கடிதம்:

tblArasiyalnews_95452082158.jpg

உடன்பிறப்பே... செய்தியை கேட்டாய கழகத்தின் முயற்சியால்.. இலங்கையில் தீர்வு வர போகிறது.. உனக்கும் இது உவகையாக இருக்குமே... அன்றுநடை பெற்ற எழுத்தாளர் மாநாட்டில் செவிக்கினிய பல உரைநூல்கள் பகரப்பட்டன.. எனது தலைமையில் அவ்வாறு ஒரு விழா நடக்க தம்பி ஆவலோடு உள்ளாய் என அண்ணனுக்கு தெரியும்.. தம்பியின் ஆசைக்கு தடை சொல்ல நான் யார்?

( கருநா பாராட்டும் துறையின் மந்திரிகள் துரைமுருகன மற்றும் ஜெகத்ரட்ச்கன் ஆகியோர் தலைவரின் அடுத்த ஆசையை புரிந்து கொண்டு மாநாட்டு வேலைகளை துவக்குகின்றனர்)

குருமா வளவன்:

thirumavalavan_feb_08.jpg

இலக்கியத்தோடு அரசியலை கலக்ககூடாது.. ராஜ பக்செவுக்குபாராட்டு..

எக்காலத்திலும் இலக்கியத்தோடு அரசியல்கலக்க கூடாது தெரிவித்த அவர் தீர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டமைக்கு பாராட்டு தெரிவித்தார்... உடன் செயல்படுத்தவேண்டும் என பூந்த மல்லி அருகில் உள்ள காந்த மல்லி விளையாட்டு மைதானத்தில் மாபெரும் மாநாடு நடத்த படும் என தெரிவித்தார்

ராம்தாஸ்:

Ramdoss_PMK.jpg

பொறுத்துதான் பார்க்கவேண்டும்

அரசியல் தீர்வு என்றாலும் ...எதாக இருந்தாலும் பொறுத்துதான் பார்க்கவேண்டும்.. திமுக தலைவர் கடிதம் எழுதுவதோடு வழக்கம் போல நின்றுவிடுகிறார்.. செயல்பட வேண்டும் என்பதே அனைத்துதமிழ்மக்களின் ஆவல்( டிஸ்கி அதிக கண்டனம் எதிர்ப்பார்க்க இயலாது தேர்தல் வருதல்லோ)

நெடுமாறன்: வன்மையாக கண்டிக்கிறேன்..

P.%20nedumraman%201_0.jpg

பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து அந்த பிணக்குவியலின் மேல் மாநாடு நடத்தியதையும் அதில் தமிழர்கள் சிலர் பங்கேற்றைதையும்வன்மையாக நான் கண்டிக்கிறேன்.. இது வழக்கம் போல தமிழர்கள் மீதான பாசிச அடக்குமுறையின் விளைவு.. இதை கேட்டு உலக தமிழர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம்...

வைக்கோ: இது ஒரு மனித தன்மையற்ற செயல்

02vaiko.jpg

தமிழர்களை கொன்ற கயவன் ராஜபக்சே பூமியில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்துவதும் அதில் கலந்து கொண்ட சில எட்டப்பர்களையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்..புலி ஒன்று வீழ்ந்த போது அதை சுற்றி சிறு நரிகள் ஊளையிடும் செயல் போன்று உள்ளது இது. விரைவில் எம் தலைவன் தோன்றுவான் ..அப்போது இந்த சிறு நரிகள் கூட்டம் அத்தோடு சிதறி ஓடும்.. விரைவில் தமிழீழத்திலே என் தலைவன் தலைமையில் இதைவிடபெரிய மாநாடு ஒன்று நடைபெறும்... அதில் என் தலைவன் உரையாற்றுவார்.. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை இது உறுதி..

விழா ஏற்பாட்டார்கள் தன்னிலை விளக்கம்:

asin120710_1.jpg

முதலில் ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும் நடைபெற்றது அரசியல் மாநாடு அல்ல..இலக்கியமாநாடு.. இதில் ராஜ பசே எங்கிருந்து வந்தார் என கேள்வி எழுப்புபவர்களுக்கு.. நடைபற்றது கொழும்பு நகரத்தில்.. அவர்களே அங்கு ஆட்சியாளார்கள் ..அவர்களை வரவேண்டாம் என எங்களால் எப்படி சொல்ல முடியும்? உண்மை இதுதான்.. வேண்டுமானால் அழைப்பிதழைபார்த்து கொள்ளுங்கள் .. அவர்களாக வந்தால் என்ன நாங்கள் செய்வது?

காலையில் நாங்கள் இட்லி சாப்பிடும் போது கூட அவர் வருவது எங்களுக்கு தெரியாது..

1.gif

எது குற்றம்?

நடைபெற்ற எழுத்தாளர் சங்க மாநாட்டிலே ஏழை தமிழர்களுக்கு உதவிகள் வழங்கபட்டதே அது குற்றமா? அல்லது தமிழகத்தில் இருந்து வந்த குற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்ப்பிலே வன்னி மக்களுக்கு கமர் கட்டும் ஏழை குழந்தைகளுக்கு இஞ்சி மரபாவும் வழங்கபட்டதே அனைவரும் வாங்கி உண்டு பசி நீங்கி மனதார வாழ்த்தினார்களே அது குற்றமா? போரில் நலிவடைந்த ஏழை குடும்பத்திற்கு அவர்கள் எதிர்காலம்கருது ஆளுக்கு 5 ரூபாய் கொடுத்தமே அது குற்றமா?

குற்றம் காண்பவர்களுக்கு( அடுத்தவன் முதுக சொறியலன்ன அவன் தமிழனா)

ரெடி பட சூட்டிங்க் போது நடிகை பிசின் இவ்வாறு கலந்து கொண்டாரே.. உதவினாரே ...

அப்போது எங்கே போனார்கள் இந்த மாகனுபவார்கள்? அவர் செய்யலாம் தமிழர்களான நாங்கள் தமிழர்களுக்கு உதவ கூடாதா? அவ்வளவு ஏன் கருணாநிதி நடத்திய கனி மொழி மாநாட்டில் எம்மை குறை கூறுபவர்கள் கலந்து கொண்டார்களா இல்லையா?.. நடந்து முடிந்த போரில் காங்கிரசு தலைமையிலான அரசு பங்கேற்றதாக கூறபடும் இந்த வேளையில் அந்த அரசின் சர்ப்பாக பதவியேற்ற ப்ரிதீபா பாட்டில் கலந்து கொண்டாரே... அப்போ எங்கே வைத்து கொண்டார்கள் தங்கள் முகத்தினை?

அவர்களூக்கு ஒரு நீதியா எமக்கு ஒன்றா? பல படைப்பாளர்கள் எழுதிய நூல்கள் வெளியிடப்படனவே அது குற்றமா? தமிழ் வளர்ச்சிக்கு உதவுவது குற்றமா? குற்றம் சொல்பவர்கள் தாங்கள் என்ன சொல்கிறோம் என தங்கள் மனசாட்சியிடம் கேள்வி கேட்டு கொள்ளட்டும்

டிஸ்கி : இன்னும் எழுதலாம்.. இந்த அளவில் இது போதும் என நினைக்கிறேன்... ரைட்டு...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.