Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ஆண்டவர்'களின் தாக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவர்களின் தாக்கம்.

இந்தியாவை கிட்டத்தட்ட 350 ஆண்டுகள், ஆங்கிலேயர்கள் ஆண்டனர். அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி 60 ஆண்டுகள் கடந்தபின்னரும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் இந்தியர்களைவிட்டு அகலாத நிலை தான்.

ஆங்கிலேயர்களுக்கு இசைவான, அவர்களுக்கு சேவகம் செய்ய பயன்படக்கூடிய கல்விமுறையைத்தான் இந்தியர்களுக்கு அவர்கள் உருவாக்கி கொடுத்தார்கள். அந்த "மெக்காலே" கல்விமுறைதான் இந்தியர்களை இன்னமும் பிடித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கல்விமுறையே இந்திய அரசுஊழியர்களை உருவாக்க அமைக்கப்பட்டதுதான்.

அரசு அலுவலர்கள், ஆள்பவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்துகொண்டு, இந்தியர்களை அடிமை நினைவிலிருந்து விழித்தெழாத வண்ணம் வைத்திருந்து மக்களை அடக்கியாளவும், மீறி விழித்தெழும் மக்களை வன்முறையால் அடக்குவதற்கு காவல்துறையையும் தயார்படுத்தி வைத்திருந்தனர்.

ஆங்கிலேயர்கள் இந்தியர்களை விட்டுச்சென்றுவிட்டனர். ஆனால் அவர்கள் ஏற்படுத்திய மனத்தாக்கம் இன்னும் இந்தியர்களை விட்டுச்செல்லவில்லை.

அரசுஅலுவலர்கள் தங்களை இன்னமும் ஆளப்பிறந்த அதிகாரவர்க்கமாகவே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்திய மக்களும் அவர்களின் நினைப்பை உறுதிசெய்யும் வண்ணமே தங்களது உரிமையை உணராமல் இருக்கின்றனர். எந்தவித பின் புலமும் அற்ற ஒரு இந்தியக்குடிமகன், ஒரு அலுவலகத்துக்கு சென்று அவனுக்கு தேவையான ஒரு விவரத்தை வாங்கிடச்சொல்லுங்கள், பார்ப்போம்!

இவர் அலுவலகம் சென்று சம்பந்தப்பட்ட எழுத்தரை அணுகி பவ்யமாக நின்றுகொண்டு இருப்பார். அந்த எழுத்தரோ அப்படியே கொஞ்ச நேரம் பொறுத்து அலட்சியமாக தலையைத் திருப்பி என்னவென்று கேட்பார்.

இவர் விவரம் சொன்னவுடனே " அது என் சீட் இல்லையே..! எதற்கும் அவரைப்போய் பார்" என்று வேறொரு நபரைக் காண்பித்துவிடுவார். பெரும்பான்மை அரசு அலுவலகங்களில் இதுதான் இன்று நடக்கிறது.

மக்களின் வரிப்பணத்தில்தான் தனக்கு ஊதியம் அளிக்கப்படுகிறது என்பதை அரசு அலுவலர்களும் எண்ணுவதில்லை. மக்களுக்கு ஒழுங்கான பதில் சொல்லவேண்டிய கடமை அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது என்பது மக்களுக்கும் புரிவதில்லை.

ஏனென்றால், இந்தியர்களின் உரிமைகள் என்னென்னவென்று அம்மக்கள் தெரிந்துகொள்ளாத அளவிலேயே அவர்களை ஆண்டவர்கள், பழக்கி வைத்திருக்கிறார்கள்.அதிலிருந்து இன்னும் மக்களில் பெரும்பானமையோர் மீண்டு வரவில்லை.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தும், எண்ணங்களுக்கு விடுதலை இல்லை. ஆண்டான் அடிமை காலத்தின் மனப்பாங்கு இன்றுவரையில் மாறாமல் இருப்பது 350 ஆண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியின் பாதிப்பு.

இந்தியாவை ஆண்டவர்கள் அகன்றுவிட்டாலும், அவர்களின் தாக்கம் இன்னும் மாறவில்லை.

இலங்கையில் எப்படி? இதே கதைதானா?

:D

இலங்கையில் எப்படி? இதே கதைதானா?

ஆண்டவர்கள் நல்லாய் மாறிட்டாங்கள்,ஆனால் என்களுடையதுகள் இன்னும் மாறவில்லை,மாறவும் மாற்றார்கள்....

இலங்கையிலும் அப்படித்தான்......அமைச்சர் ஊழியரை கட்டிவைத்த செய்தி யாழில் படித்திருப்பீர்கள்.....

எதோ வெள்ளைத்தோல் வர முதலும் இந்தியா இலன்கையில அந்தமாதிரித்தானே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.