Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பின் கூத்துக்களை அம்பலப்படுத்துகிறார் பியசேன எம்.பி!

Featured Replies

கூட்டமைப்பின் கூத்துக்களை அம்பலப்படுத்துகிறார் பியசேன எம்.பி!

வெள்ளி, 10 செப்டம்பர் 2010 21:19 . .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூத்துக்களை வெளிப்படுத்துகின்றார் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன.

அரசமைப்புத் திருத்தம் மீதான வாக்கெடுப்பின்போது அரசை ஆதரித்த அவர் தான் அரசை ஏன் ஆதரிக்க வேண்டிய நிலை வந்தது என்பதை விளக்குகிறார்.

அவர் தனது தற்போதைய நிலைப்பாடு குறித்து தமிழ் சி.என்.என் செய்திப் பிரிவுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இருந்து முக்கிய விடயங்களை வாசகர்களுக்காக தொகுத்து தருகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக அவர் கொட்டித் தீர்த்த ஆதங்கங்கள் இதோ,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பாரம்பரியமான கட்சி ஆனால் அக்கட்சி தற்போது மக்களை ஏமாற்றி வருகின்றது. இன்றைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மக்களை வழிநடாத்திச் செல்வதற்கு ஒழுங்கான தலைமை ஒன்று இல்லை.

தமிழினத்தைப் புதை குழியில் தள்ளக் கூடிய ஒரு பயங்கரவாதக் கட்சி இருக்குமென்றால் அது தமிழ்த் தேசியக் கூடடமைப்பாய்த் தானிருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு முக்கிய பதவியில் நான் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் இடம்பெற முன்னரேயே ஜனாதிபதியின் காலில் விழுந்தாவது வன்னி மக்களையும் பிரபாகரனையும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களையும் காப்பாற்றியிருப்பேன்.

ஆனால் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களோ தங்களது சுயநலத்திற்காக மக்களையும் போராளிகளையும் அநியாயமாக கொன்று விட்டார்கள்.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய என்னை இவர்கள் ஒருமுறை கூட நாடாளுமன்றில் பேச அனுமதித்தது கிடையாது. எனது மக்களின் பிரச்சினைகளைச் சொல்ல என்னுடைய உரிமை கூட்டமைப்பால் மறுக்கப்பட்டது.

இன்று அம்பாறை மாவட்டத்தில் ஏராளமான விதவைகள், வறியவர்கள் இருக்கிறார்கள். இவர்களை எந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வந்து பார்க்கவில்லை. முதிர்கன்னிகள் மலிந்து போய் விட்டார்கள். வேலை வாய்ப்புக்கள் எதுவும் இங்கு இல்லை.

சில வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் மத மாற்றம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதை தட்டிக் கேட்க யாருமில்லை. ஆனால் அவர்களோ வெளிநாடுகளில் விழாக்களில் கலந்து கொண்டும் அறிக்கைகளை விட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.

அவர்களின் பெயர் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆனால் அவர்கள் கூடிப் பேசும் போது ஆங்கிலத்தில் தான் கதைப்பார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளையும் பிழையாக வழி நடாத்தி அவர்களின் அழிவுக்கு காரணமானவர்களும் இந்தக் கூட்டமைப்பினரே. சிந்தித்து வாக்களிக்க கூடிய வாக்காளர்கள் இல்லாததால் தொடர்ந்தும் பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

கொழும்பிலிருந்து வெளியாகும் சில பத்திரிகைகள் தான் இவர்களை பெரியவர்கள் ஆக்குகின்றது. எத்தனை காலம் தான் அறிக்கை மட்டும் விட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களால் ஒரு குண்டூசி கூட என் தமிழ் மக்களுக்கு கொடுக்க முடியாது.

இன்னமும் இந்த மக்கள் இவர்களை ஒரு தலைவராக எண்ணிக் கொண்டிருப்பது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது. எனது மக்களின் நிலை கண்டு தினமும் தூக்கமில்லாமல் தவிக்கிறேன். அவர்களைப் பார்த்து அழுகின்றேன்.

அவர்களுக்கு எப்படியாவது உதவுகின்ற நோக்கோடு தான் அரசில் இணைந்தேன். நிச்சயமாக அரசின் அனைத்துத் துறைகளில் உள்ள அமைச்சர்களையும் சந்தித்து எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தொடர்ந்தும் பாடுபடுவேன்.(original news from TAMILCNN)

Edited by BLUE BIRD

அவர்களின் பெயர் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆனால் அவர்கள் கூடிப் பேசும் போது ஆங்கிலத்தில் தான் கதைப்பார்கள்.

ஏற்கனவே 22எம்பிக்களாக இருந்து 14சீட்டுகளுக்கு வந்தாயிற்று. அடுத்த தேர்தலில் இதுவம் குறைவதற்கான வாய்ப்புக்கள்தான் அதிகம். உருப்படியாக மக்களுக்கு எதையாவது செய்யப்பார்க்க வேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.