Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழந்தையை கொன்றுவிட்டு தாய் நடத்திய நாடகம் அம்பலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிதம்பரம் கொள்ளிடத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றுவிட்டு தாய் நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்களம் ஊரைச் சேர்ந்தபாபு (30)-இன்பநிலா (23) தம்பதிகளுக்கு ஆண் குழந்தை(தமிழ்ச்செல்வன்) பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் பாபு இறந்துவிட்டார்.

அதன்பிறகு சித்தாள் வேலை செய்தி பிழைப்பு நடத்திவந்தார் இன்பநிலா. அப்போது சிதம்பரம் கீழ்கொண்டாம்பாடியைச்சேர்ந்த சந்துரு என்கிற பானுசந்தர் கொத்தனாருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து வெங்களம் ஊரைவிட்டு சென்னையில் சில காலம் சந்துருவுடன் தங்கியிருந்தார் இன்பநிலா. பின்னர் பன்ருட்டியில் தனியே வீடு எடுத்து தங்கியிருந்தார். சிதம்பரத்திலிருந்து அடிக்கடி சந்துரு பன்ருட்டிக்கு வந்து போனார்.

சில நாட்களாக சந்துரு வீட்டுக்கு வராததால் அவனைத்தேடி சிதம்பரம் சென்றார் இன்பநிலா. அங்கே இருவரும் சந்தித்துக்கொண்டனர்.இரவு ஆகிவிட்டதால் இருவரும் பீர்,சிகரெட்,சாப்பாடு வாங்கிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றுவிட்டனர். கூடவே தனது 2வயது மகன் தமிழ்ச்செல்வனையும் அழைத்துச்சென்றுள்ளார் இன்பநிலா.

கொள்ளிடம் ஆற்றில் போதையில் சந்துருவும்,இன்பநிலாவும் உல்லாசமாக இருந்தபோது குழந்தை தமிழ்ச்செல்வன் ஏதோ சத்தம் போட்டிருக்கிறான்.சத்தம் கேட்டு யாராவது வந்துவிட்டால் என்ன செய்வது என்று போதையிலேயே குழந்தையின் சத்தத்தை அடக்கியிருக்கிறான். என்ன செய்து அந்தக்குழந்தையின் சத்தத்தை அடக்கினார்கள் என்று இருவருக்கும் தெரியவில்லை.

பொழுது விடிந்ததும், நான் வீட்டுக்கு போய்விட்டு பன்ருட்டி வருகிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டான் சந்துரு. தூங்குகிறது என்று குழந்தையை எழுப்பினாள் இன்பநிலா. அப்போது அது இறந்துகிடப்பது தெரியவந்தது.

உடனே கொலையை மறைக்க, ஆற்றில் இருந்து சாலைப்பக்கம் வந்து என்னை நள்ளிரவில் யாரோ இரண்டு பேர் கடத்தி வந்து கற்பழித்தனர். என் குழந்தையை கொன்றுவிட்டனர் என்று அழுதாள்.அக்கம்பக்கத்தினர் போலீசிடம் புகார் கொடுத்துவிட்டு, இன்பநிலாவையும், குழந்தையின் உடலையும் மருத்துவமனைக்கு அனுப்பினர்.போலீஸ் விசாரணையில் முன்னுக்குபின் தகவல்சொல்ல சந்தேகம் வந்துவிட்டது. மேலும், பாலியல் வல்லுறவுக்கான எந்த தடயமும் இல்லாமல் இருந்தது. சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றூ பார்த்தபோது பீர்பாட்டில்கள், தாயத்து ஒன்று கிடந்தது.

தாயத்தை வைத்து சேத்தியாத்தோப்பு பூசாரியிடம் விசாரணை செய்தபோது இது நான் செய்து கொடுத்தட் தாயத்துதான். இது சந்துரு என்பவனுக்கு செய்துகொடுத்தேன் என்று சொல்லிவிட்டார்.சந்துருவை போலீஸ் கைது செய்யவும், அவனும்-இன்பநிலாவும் உண்மையை ஒப்புக்கொண்டனர்.இதனால் இருவரும் கைது செய்யப்பட்டனர்.http://www.tharavu.com/2010/09/blog-post_9439.html

  • கருத்துக்கள உறவுகள்

இது பறுவாயில்லை..

அண்மைக் காலமாக எங்கட தாயகத்தில (இதில எல்லாம் வடக்கு கிழக்கு பிரிஞ்சில்ல.. கொக்குவிலிலையும் பிள்ளையை பெத்து ரோட்டில போடுது.. மட்டக்களப்பிலும் போடுது.. இந்தப் பெண்கள் செய்யுற கூத்து தாக்க முடியல்ல. பிள்ளையை பெத்துகுதுகள்.. பிறகு ரோட்டில போட்டிட்டு ஓடிடுதுகள்.

அடுத்தவன் வீட்டு புதினத்தில விடுப்பு கதைக்க முடியாத படிக்கு நமக்குள்ளேயே பல அசிங்கங்கள்.

இவற்றிற்கு தீர்வு தான் என்ன..

இந்த உலகம் போற போக்கைப் பார்த்தா.. நாம நம்பாட்டில நமக்கு நல்லவங்களா இருக்கிறதே சேதனையா அமையும் போல இருக்கு. தவிர வேற தேவைல்லாத விடயங்களை கதைப்பது கூட அநாவசியம் என்பது போலப் படுகுது.

ஒருத்தன்.. பிரபாகரன் என்ற ஒருத்தன்.. எதிரிக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இனத்துக்குமே ஒரு சவாலாக (நல்லதை செய்விக்க) இருந்திருக்கிறான் என்பது இப்போ தெள்ளத் தெளிவாகி இருக்கிறது.

---------------------

நான்கு நாள் சிசு மட்டு நகரில் அனதரவான நிலையில் மீட்பு

4 நாட்களைக்கொண்ட இந்த ஆண்குழந்தை மட்டக்களப்பு இருதயபுரம் பஸ் தரிப்பு நிலையத்திற்குள்ளிருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவக்கப்படுகின்றது.

நேற்று (15.09.2010) அதிகாலை 3.30 மணியளவில் இக்குழந்தை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

-------------------------

கொக்குவில் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இரு நாள் வயது குழந்தை

யாழ். கொக்குவில் கிழக்குப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பிறந்து இரண்டு நாட்கள் மாத்திரமே கழிந்த ஆண் குழந்தை தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில், குழந்தை தொடர்பான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்து இரண்டு நாட்கள் மாத்திரமே கழிந்த ஆண் குழந்தையொன்று துணியில் சுத்தப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிசாரினால் நேற்று மீட்க்கப்பட்டது. கோப்பாய் அம்மன் கோவில் வீதியும் சம்பியன் விதியும் சந்திக்கும் முகப்பில் இந்தப் குழந்தை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.