Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சல்மான், அசின் - இன உணர்விலும் சினிமாத்தனம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சல்மான், அசின் - இன உணர்விலும் சினிமாத்தனம்?

img1100916029_1_1.jpg

இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த DABANGG என்ற படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப் படம் சென்னையில் மட்டும் நான்குக்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவே வேறு மாநிலமாக இருந்தால் இந்தப் படம் எந்த தடங்கலுமின்றி ஓடுமா என்பது மிகப் பெ‌ரிய கேள்விக்குறி.

ஈழப் படுகொலையை மறைப்பதற்காக பாசிஸ ராஜகப்சே அரசு வலிந்து நடத்திய ஐஃபா திரைப்பட விழாவில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என திரைப்பட கூட்டமைப்பு அறிவித்தது. மே 17 இய‌க்க‌ம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. தமிழர்களின் உணர்வை பு‌ரிந்து கொண்ட அமிதாப்பச்சன் திரைப்பட விழாவின் தூதர் பொறுப்பிலிருந்து விலகியதோடு விழாவையும் புறக்கணித்தார்.

அதேநேரம் சல்மான்கான், விவேக் ஓபராய் இருவரும் ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழலாக செயல்பட்டு தமிழர்களின் உணர்வை கொச்சைப்படுத்தினர். திரைப்பட கூட்டமைப்பின‌ரின் கோ‌ரி‌க்கையையும் நிராக‌ரித்தனர். இதனைத் தொடர்ந்து அசினின் அன்னை தெரசா நாடகமும் இனவெறி இலங்கை அரசால் வெற்றிகரமாக அரங்கேறியது. தமிழர்களின் இன உணர்வை கொச்சைப்படுத்திய இவர்களின் படங்களை தமிழகத்தில் மட்டுமல்லாது நான்கு தென்னிந்திய மாநிலங்களில் புறக்கணிப்பது என்றொரு தீர்மானமும் திரைப்பட கூட்டமைப்பால் நிறைவெற்றப்பட்டது. நாம் தமிழர் அமைப்பின‌ரின் முயற்சியால் ஐஃபா விழாவில் கலந்து கொண்ட ஹிருத்திக் ரோஷனின் கைட்ஸ் திரைப்படம் உடனடியாக சென்னையிலுள்ள திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டது. இத்தனைக்கும் ஹிருத்திக் ரோஷன் விழாவில் கலந்து கொள்ள மட்டுமே செய்தார். சல்மான், ஓபராய் போல ஊதுகுழலாக செயல்படவில்லை.

ஹிருத்திக் ரோஷனின் படத்தையே தமிழகத்தில் ஓடவிடாமல் செய்தவர்கள் சல்மான்கானின் படத்துக்கு எந்த எதிர்ப்பும் தெ‌ரிவிக்காதது ஏன்?. திரைப்பட கூட்டமைப்பு நான்கு மாநிலங்களில் தடை என்ற உத்தரவை வாபஸ் வாங்கிக் கொண்டதா? நாம் தமிழர் போன்ற அரசியல் கட்சிகளுக்கு இது தேவையில்லாத பிரச்சனையாகிவிட்டதா?

அசின் பிரச்சனையை எடுத்துக் கொண்டால் தனது திமிர்தனத்தில் சிறிதுகூட குறைத்துக் கொள்ளாமல்தான் இன்று வரை அவர் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை என்று சொன்னாலே பாய்ந்து வருகிறார் நடிகர் சங்க‌த் தலைவர் சரத்குமார். அசின் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரையுலகமே திரண்டு நிற்கும் போது தனியாளாக சரத்குமார் எழுப்பும் அசின் ஆதரவு யாருக்காக? நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி அசின் மீது நடவடிக்கை உறுதி என்று பேட்டியளிப்பதும், அசின் மீது எந்த தவறும் இல்லை என்று சரத்குமார் அறிக்கை விடுவதுமாக பல மாதங்களாக ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது. இந்த அக்கப்போருக்கு நடுவில் அசின் தெனாவட்டாக தமிழ் திரையுலகில் உலா வருவது திரைப்பட கூட்டமைப்பின் கையாலாகாத்தனமோ என பலரையும் எண்ண வைத்துள்ளது.

img1100916029_1_2.jpg

அசின் மீதான வெறுப்பு உலகத் தமிழர்களிடையே மண்டிக் கிடக்கிறது. அவர் நடித்தப் படத்தை புறக்கணிப்பது என்ற முடிவில் உலகத் தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் பிரபல தமிழ் ஹீரோவுடன் நடித்தப் படத்தை வாங்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில் தமிழில் கலாச்சார சீரழிவு படங்களை எடுத்துவரும் தயா‌ரிப்பாளர் கம் இயக்குனர் ஒருவர் அசின் நடித்தப் படத்தை மிகப் பெ‌ரிய தொகைக்கு வாங்கியிருப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. இந்த தயா‌ரிப்பாளர் கம் இயக்குனர் சில லட்சங்கள் நஷ்டத்தையே தாங்க முடியாமல் கஷ்டப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெ‌ரியும். அப்படிப்பட்டவர் எப்படி குறுகிய காலத்தில் பல கோடி ரூபாய் - ஏறக்குறைய நாற்பது கோடி - கொடுத்து அசின் நடித்த படத்தை வாங்க முடியும்? இவர் தான் கடைசியாக இயக்கிய படத்தில் தேவையே இல்லாமல் ஒரு புலியை காண்பித்து இது பல் பிடுங்கப்பட்ட புலி, புல் திங்கிற புலி, இந்தப் புலிக்கு சுகர் இருக்கிறது என கிண்டல் செய்தவர் என்பது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

விவேக் ஓபராய் நடித்த ரத்த ச‌ரித்திரம் படத்தை எதிர்க்கப் போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைவர் பொது மன்னிப்பு வழங்கியிருக்கிறார். அதில் தம்பி சூர்யாவும் நடித்திருக்கிறார் என்று பொது மன்னிப்புக்கு காரணமும் சொல்லியிருக்கிறார். தங்கச்சி அசினுக்காக ராஜபக்சேவையும் மன்னித்துவிட்டால் பிரச்சனையே இல்லையே, சிறைக்குப் போக வேண்டிய அவசியமும் இருக்காது.

ரத்த ச‌ரித்திரம் படம் வரும் 22 ஆம் தேதி இந்தியில் வெளியாகிறது. இந்திப் பதிப்பு சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களிலும் வெளியாகும். DABANGG படத்தைப் போல இதையும் யாரும் எதிர்க்கப் போவதில்லை. சல்மான்கான், அசினைப் போல விவேக் ஓபராயும் சுவரொட்டிகளில் நம்மைப் பார்த்து சி‌ரிக்கத்தான் போகிறார்கள்.

நமது கேள்வியெல்லாம் ஏன் ஹீரோவைப் போல தொடை தட்ட வேண்டும் என்பதே. ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாக தி‌ரிந்து கடைசியில் காமெடியனாக பலரும் சி‌ரிக்க இடமளித்துவிட்டதே நமது திரைப்பட சங்கங்கள் என்பதே நமது வருத்தம்.

http://tamil.webdunia.com/entertainment/film/article/1009/16/1100916029_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.