Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாட்சிகளற்ற போரின் சாட்சிகள் உதயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாட்சிகளற்ற போரின் சாட்சிகள் உதயம்!

img1100921048_1_2.jpg

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தான் நடத்திய இனப் படுகொலைப் போரில் நடந்த அத்துமீறல்களையும், போர்க் குற்றங்களையும் மறைக்கவே ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த மனித உரிமை நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்புக் காட்டினார்.

அதே நேரத்தில், போரில் தனது படைகள் நிகழ்த்திய குற்றங்களை புதைக்கவும், தனது இனவாத முகத்தை மறைக்கவும், உலகத்தின் பார்வைக்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். அதுவே போரினால் ‘கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையம்’ ஆகும். ஆனால் அந்த ஆணையத்தின் முன் அளிக்கப்படும் பல சாட்சியங்கள் ராஜபக்ச அரசு மறைக்க நினைத்த பல அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியே கொண்டு வந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது தமிழீழத்தின் தலைநகராக இருந்த கிளிநொச்சியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இணக்கப்பாட்டு ஆணையத்தின் தலைவர் சித்தரஞ்சன் டி சில்வா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டபோது போரினால் பாதிப்பிற்குள்ளான 500க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.

அவர்களில் அரசு விவசாய அதிகாரியான நடராஜா சுந்தரமூர்த்தி அளித்த சாட்சியம் மிக முக்கியமானதாகும்.

போரின் இறுதி கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தாங்கள் புதுமாத்தளன் பகுதியில் (இது மக்கள் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டிருந்த இடமாகும்) அடைக்கலாகியிருந்தபோது நடந்த ஒரு நிகழ்வை அவர் விவரித்துள்ளார். உணவு பெறுவதற்காக நின்றுக் கொண்டிருந்த 40 முதல் 45 கர்ப்பினிப் பெண்களும், அவர்களோடு இருந்த குழந்தைகளும், சிறுவர்களும் சிறிலங்க விமானப் படையும், தரைப் படையும் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். உணவு வழங்கப்படும் இடங்கள், மருத்துவமனை செயல்படும் இடங்கள் ஆகியன தாக்குதலிற்கு உட்படுத்தக் கூடாது என்பது போரில் கடைபிடிக்கப்படும் பொதுவான விதிமுறைகளாகும். அந்த இடங்களைப் பற்றிய நில விவரங்கள் (location coordinates) இராணுவ தலைமைகளிடம் அளிக்கப்படும், அதனை அவர்கள் படைகளுக்குத் தெரியப்படுத்தி அந்த இடங்களில் தாக்குதலை நடத்தாமல் தவிர்ப்பார்கள். மீறித் தாக்குதல் நடத்தினால் அது போர்க் குற்றமாகும். எனவே உணவு வழங்குமிடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதன் மூலம் அரசப் படைகள் போர்க் குற்றம் செய்துள்ளது நடராஜா சுந்தரமூர்த்தியின் சாட்சியத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

அப்போது தனது மகளுக்கு துப்பாக்கிக் குண்டு துளைத்து தொண்டையில் காயமேற்பட்டதையும் நடராஜா சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் புலிகளிடம் சிக்கியிருந்த மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைதான் எடுத்தோம், இதில் அப்பாவி மக்கள் எவரும் கொல்லப்படவில்லை” என்று கோத்தபய ராஜபக்ச கூறியது எந்த அளவிற்கு ‘உண்மை’ என்பது இப்படிப்பட்ட சாட்சிகளால் உலகத்திற்குத் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்ல, சிங்கள இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் என்ன ஆனார்கள் என்பது கூட, போர் முடிந்த ஓராண்டிற்கு மேலாகியும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்படவில்லை. விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல் பிரிவு பொறுப்பாளர் எழிலனும், அவருடன் நூற்றுக்கணக்கான போராளிகளும் சரணடைந்தனர் என்றும், அவர்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியில்லை என்று எழிலனின் மனைவி ஆனந்தி கூறியுள்ளார்.

இதேபோல், கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் முன்னிலையில் அரச படைகளிடம் சரணடைந்த தனது மகனைப் பற்றி ஒரு தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று ஒரு தாய் கூறியுள்ளார்.

இணக்கப்பாட்டு ஆணையத்தின் முன் சாட்சியமளிக்க வந்தவர்களில் பலரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் படங்களை வைத்துக் கொண்டு அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற கேள்வியுடனேயே வந்துள்ளனர். அவர்களிடம் தனியாக ஒரு படிவத்தைக் கொடுத்து அதில் காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை எழுதித் தருமாறு கேட்டுப் பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சாட்சியம் கூறுவோர்களை தனியாக அழைத்துச் சென்று இரகசியமாக சாட்சியமளிக்குமாறு கூறுவதும் நடந்ததுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆக, உண்மையை மறைத்து உலகத்தை ஏமாற்ற நியமிக்கப்பட்ட ஆணையத்திலும் உண்மைகள் பதிவாகத் துவங்கியுள்ளது. இந்த ஆணையம் முல்லைத் தீவு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தவுள்ளது. அங்கு மேலும் பல உண்மைகள் வெளிவரும். மகிந்த ராஜபக்சவின் இனவாத முகம் அவர் நியமித்த ஆணையத்தின் விசாரணையிலேயே வெளிப்படுவதுதான் வினோதமாகும்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1009/21/1100921048_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.