Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பார்திபனின் புதியபாதைக் காதல்,சதீஷுடன் மலர்ந்திருக்கும் புதிய நட்பு"- மனம் திறக்கிறார் நடிகை சீதா

Featured Replies

மௌனம் கலைகிறார் சீதா. மறுமணம் செய்துகொள்ளப் போகிறார் என செய்திகள் பரபரப்பாக வந்தபின்னும் ஆழ்கடலைப் போன்று அமைதியாக இருந்தவரின் உள் மனதில் இருப்பவற்றை இன்று நம்மிடம் கொட்டினார்.

அதெப்படி அன்று பார்த்த மாதிரியே இன்றும் அதே அழகுடன், அப்படியே இருக்கிறீர்கள்? அதன் ரகசியம் என்ன?

”முதல்ல அழகு என்பதே அப்பா, அம்மா கொடுக்கிறதுதான். நான் எப்பவுமே மனசை நல்லா வைச்சுக்கணும்னு நினைப்பேன். மனசு நல்லா இருந்தால்தான் அது முகத்திலும் பிரதிபலிக்கும்.ஒரு அழகைக் கொடுக்கும்.முகத்துக்கு ப்ளீச் பண்றதோ,ஃபேஸ் பேக் போடுறதோ உண்மையான அழகைக் கொடுக்கிறது இல்ல. மனசை ஒருமுகப்படுத்தி தியானம் பண்ணினா வசீகரம் தானாகவே வரும். இது ஒரு ரகசியமான்னு தெரியல.(சிரிக்கிறார்)’’

திடீரென உங்களுக்கும்,சதீஷுக்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்றதாக கிசுகிசுக்கள் கிளம்பியிருக்கிறதே...

”இப்படி ஏற்கெனவே பலமுறை எனக்கு திருமணத்தை நடத்தி வைச்சிட்டாங்க.(மனம் விட்டு சிரிக்கிறார்).இனி நான் திருமணம் பண்ணினா கூட அதைச் சொல்லலாமா வேண்டாமான்னு தெரியல. புலி வருது.. புலி வருதுன்னு ஒரு கதை சொல்வாங்களே அதை மாதிரி நான் இனி திருமணம் செஞ்சுகிட்டா கூட அதை நம்புவாங்களான்னு தெரியல. அதை எப்படி ஏத்துப்பாங்கன்னும் தெரியல. நான் இப்ப மனசு உடைஞ்சு போய் இருக்கேன். சீதாவை நீங்க ஒரு நடிகையாக பார்த்தாலும், நானும் உங்க வீட்டுல இருக்கிற பொண்ணுங்க மாதிரி ஒரு சராசரி பெண்தானே. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.’’

ஆனால் நீங்கள் சதீஷுடன் இணைந்துதான் விழாக்களுக்கு வருகிறீர்கள். அப்படியானால் உங்கள் இருவருக்கும் இடையில் அப்படி என்னதான் இருக்கிறது?

”நட்புங்க... நம்புங்க. சதீஷுடன் இருக்கும் தோழமை மிகவும் மெச்சூர்டானது.எங்களுக்குள்ளே ஒரு நல்ல புரிதல் இருக்கு.நான் ஆசைப்பட்ட வாழ்க்கை நிறைவேறாத கனவாகிப் போனப்ப,என்னைச் சுற்றிலும் பிரச்னைகள். அதன் வலிகள் மட்டுமே என்னைச் சுத்தி நின்னு கைகொட்டிச் சிரிச்சது.. நான் ஆசைப்பட்ட எதுவும் இப்போது என்கிட்ட இல்லை. மனமுடைந்து வெறுங்கையோடு நான் நின்ன போது சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவைப்பட்டுச்சு. என் வலிகளை, வேதனைகளை, ஏமாற்றங்களைப் பகிர்ந்துக்க ஒரு நல்ல மனசு தேவைப்பட்டது.

ஒருபக்கம் என்னோட அப்பாவுக்கு பக்கவாதம். அம்மாவுக்கு உடல்நிலை சரியில்ல. இன்னொரு பக்கம் அன்பு, பாசம் எதுவுமில்லாமல் போன நான்.. (கண்ணீர் தளும்புகிறது). எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனைன்னு துடிச்ச அந்த சமயத்தில்தான் நான் சதீஷைச் சந்திச்சேன்.ஒரு புது நம்பிக்கை பிறந்தது. அவ்வளவு ஃப்ரெண்ட்லியான மனிதர். நல்ல மனசு அவருக்கு. எனக்கும், என் குழந்தை அபிநயாவுக்கும் ஆறுதலாக, அக்கறை எடுத்துக்கிற நல்ல நண்பராக என் வாழ்க்கையில் வந்தார். இன்றும் கூட பணமோ அல்லது ‘மற்ற’ எந்த எதிர்பார்புகளோ இல்லாத ஒரு தூய நட்பு அது.’’

’புதிய பாதையில்’ பார்த்திபனுக்கும், உங்களுக்கும் இடையே மலர்ந்த காதல்,இன்று நீங்கள் வாழ்க்கையின் வேறு பாதையில் பயணிக்க ஆரம்பித்த பிறகும் இருக்கிறதா அல்லது அது முடிந்து போன துயரமா?

”இன்னிக்கு நான் அவங்களை விட்டு பிரிஞ்சு வந்துட்டேன். அதனால அவங்க மேல இருந்த காதல் இன்னிக்கு இல்ல. அந்தப் பிரிவால எந்த வலியும் இல்லன்னு நான் சொன்னால் அது அப்பட்டமான பொய். நான் கொண்ட காதல் புனிதமானது.உண்மையான காதல் எப்படீங்க ஒரு பிரிவால பொய்யாக மாற முடியும்? அவங்களோடு நான் கொண்ட காதல் என்னோட ரத்த நாளங்கள்ல இன்னமும் ஓடிக்கிட்டு இருக்கிற ஒரு அற்புதமான விஷயம். (கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது). என் கடைசி மூச்சு இருக்கிற வரை அந்த உண்மைக் காதல் என்னுள்ளேயே இருக்கும். எங்களோட பிரிவுக்குப் பிறகு நான் இதுவரைக்கும் எதையுமே மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டது இல்ல.மைனஸான விஷயங்களையும் வெளியே சொன்னது இல்ல. இதுதான் என் காதலுக்கு நான் கொடுக்கிற மரியாதை. அவங்களோடு நான் கொண்ட உண்மையான காதலுக்கு என் மௌனம்தான் அர்த்தம் சொல்லும்.’’

அவ்வளவு காதலைக் கொடுத்த நீங்கள் அந்த உறவு முறியாமல் இருக்க கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடித்திருக்கலாமே. கடைசியில் ஏன் விட்டுக் கொடுத்துவிட்டீர்கள்?

”பொறுமைக்கு எல்லையே இல்லன்னு சொல்வாங்க. எவ்வளவு வேண்டுமானாலும் பொறுமையாக இருக்கலாம்னுதான் நானும் நினைச்சேன். கடைசியில நானே உணர்ந்த விஷயம், பொறுமைக்கும் எல்லை இருக்குதுங்க.. தாங்கிக்கவே முடியாத ஏமாற்றங்களால என்னால் ஒரு அளவுக்குப் பின்னாடி பொறுமையாக இருக்க முடியல.இனி இதுதான் என் வாழ்க்கை. வேற வாழ்க்கையே இல்லைன்னு மனசு முழுக்க நினைச்சேன்.சினிமாவை விட்டுட்டு திருமண வாழ்க்கையில நல்ல மனைவியாக, நல்ல காதலியாக, நல்ல அம்மாவாக இருக்கணும்னு முழுமனசா ஆசைப்பட்டேன்.அப்படிப்பட்ட நான் இதுக்கு முற்றிலும் எதிரான பிரிவைத் தேடவேண்டியதாயிடுச்சு என்றால், அதுல அவ்வளவு சங்கடங்கள், வேதனைகள் இருந்துச்சு. நல்லா இருக்கிற ஒரு ஆள் திடீர் விபத்துல ஊனமுற்றால், கொஞ்ச நாட்கள்ல அந்த வலியோடும், ஊனக் குறைபாட்டோடும் சந்தோஷத்தை வரவழைச்சிகிட்டு வாழுறது இல்லையா? அதே போல தான் நானும் இன்னிக்கு வாழுறேன். இதுக்கும் மேலயும் எனக்கு வார்த்தைகளால் சொல்லத் தெரியல.(குரல் உடைகிறது) நான் சந்தோஷமாக இருக்கேன்னு பொய் சொல்ல விரும்பல.(விசும்புகிறார்) இன்று நான் சதீஷுடன் எல்லாவற்றையும் கலந்து பேசியிருக்கேன். அவர் நல்ல நண்பர். என்னைப் புரிஞ்சிகிட்டார். புரிஞ்சுக்குவார்.’’

இன்றைக்கு ஒரு தாயாக உங்களுக்குத் தேவை உங்களது மகள்களின் அரவணைப்பும், புரிதலும்தான். அது உங்களுக்கு கிடைத்திருக்கிறதா?

”அபிநயா, கீர்த்தனா, ராதா கிருஷ்ணன் இந்த மூணு பேருமே என்னோட கண்கள் சார். என்னோட மூத்த மகள் அபிநயாவை என் பொண்ணுன்னு சொல்றதைவிட என்னோட அம்மான்னுதான் சொல்வேன்..என்னோட மனக்கவலைகள், பாரத்தை இறக்கி வைக்க கடவுள் எனக்காக அனுப்பி வைச்ச தேவதை அவள்.. பத்தொன்பது வயசுதான். ஆனாலும் அம்மாவைப் போல தாயன்போடு என் கையைப் பிடிச்சுப்பா.அவள் சொல்கிற ஆறுதலான வார்த்தைகள்தான் எனக்கு மூச்சுக் காத்து மாதிரி.அவள் என்னைப் புரிஞ்சுகிட்டதாலதான் என்னோடு இருக்கிறாள். என்னைப் பற்றி தவறாக கிசுகிசுக்கள் வந்தா ரெண்டு மூணு நாள் என்னோட முகத்தையே பார்த்துகிட்டு இருப்பாள். ‘அம்மா ஃபீல் பண்ணாதேம்மா.. ப்ளீஸ்... எல்லாம் சரியா போயிடும்..ஃபீல் பண்ணாதேம்மா...நீ எதுவுமே பேட்டி கொடுக்காதேம்மா.நீ எதைச் சொன்னாலும் தவறாகத்தான் பேசுவாங்கம்மா... உனக்கு நான் இருக்கேம்மா.. உன்னை எனக்குத் தெரியும்மா..’ன்னு என்னோட வாஞ்சையோடு என் கைகளைப் பிடிச்சுக்குவா. இதைவிட வேறென்ன வேணுங்க ஒரு அம்மாவுக்கு.’’

இனி வாய்ப்பு அமைந்தால் எல்லாவற்றையும் மறந்து விட்டு பார்த்திபனுடன் இணைந்து நடிப்பீர்களா?

“நிச்சயமாக நடிக்க மாட்டேன். இன்னொரு ‘புதிய பாதை’ வேண்டாம். வேண்டவே வேண்டாம். (கண்களில் கண்ணீர் வெள்ளமாய் பெருகுகிறது

படங்கள் பார்வையிட...

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4838.

Edited by easyjobs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.