Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளியக்கத்தை தடைசெய்தமைக்காக இந்தியவால் முன்வைக்கப்படும் காரணங்கள் போலியானவை, புனையப்பட்டவை - விசாரணை நீதிமன்றத்தில் வைக்கோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளியக்கத்தை தடைசெய்தமைக்காக இந்தியவால் முன்வைக்கப்படும் காரணங்கள் போலியானவை, புனையப்பட்டவை - விசாரணை நீதிமன்றத்தில் வைக்கோ

இந்திய மத்திய அரசாங்கத்தால் கடந்த மே மாதம் 14 ஆம் தேதி புலிகளியக்கத்தின் தடையை நீட்டிப்பதற்கான முடிவை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணைகள் புது தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இந்த விசாரணைக் குழுவில் தனது வாதங்களும் இடம்பெறவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ம.தி.மு.க தலைவர் திரு வை.கோபாலசாமி அவர்கள் மத்திய அரசின் தடை நீட்டிப்பை இந்த விசாரனக்குழு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தடை நீட்டிப்பிற்கான முதலாவது காரணமாக இந்திய மத்திய அரசு , புலிகள் தமிழ் நாட்டையும் சேர்த்து பரந்த தமிழீழத்தை உருவாக்கப் போராடுகிறார்கள் என்பதை முன்வைத்திருந்தது. இதற்குப் பதிலளித்த திரு. வைக்கோ அவர்கள், புலிகள் ஒருபோதுமே தமது தாயகமான தமிழ் ஈழத்துடன் தமிழ்நாடு இணைய வேண்டுமென்று கருதியதோ அல்லது போராடியதோ இல்லை என்பதால் இந்தப் பொய்க்காரனம் எந்தவித அடிப்படையுமற்றதாகிவிடுகிறது என்று வாதிட்டார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், இந்த விசாரணைக்குழுவிற்குத் தலமை தாங்கிய நீதிபதி, விக்ரம்ஜிட் சென் அவர்கள், " அவர்கள் (புலிகள்) தமிழ்நாட்டையோ அல்லது இந்தியாவின் ஒரு பகுதியையோ தமிழீழத்துடன் இணைப்பதற்காகப் போராடவில்லையா?" என்று கேட்டதுதான்.

சென்னையிலுள்ள அரசியல் ஆய்வாளர்களைப் பொறுத்தவரையிலும் இந்தத் தடை நீடிப்பானது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தி வருவதாகக் கருதுகிறார்கள். இதன் உடனடித் தாக்கமென்பது ஒரு நியாயமான அரசியல் கோரிக்கைக்கு ஜனநாயக ரீதியிலான அரசியலை முன்னெடுப்பதைத் தடுப்பதோடு நீண்டகால அடிப்படையில் சமூக அரசியல் ரீதியான கிளர்ச்சிகள் ஏற்படவும் வழிவகுத்துவிடப்போகிறது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.இந்தத் தடை நீடிப்பானது ஈழத்தமிழரின் நியாயமான கோரிக்கையை அரசியல் ரீதியாகவும் ஜனநாயக வழியிலும் ஆதரித்துவரும் எந்த அமைப்பையோ அல்லது அரசியல் கட்சியையோ பயமுறுத்துவதோடு, இவ்வாறான அமைப்புகளின் ஈழ ஆதரவென்பது புலிகளியக்கத்தினை ஆதரிப்பதென்கிற பிழையான கற்பிதத்தை ஏற்படுத்துவதோடு, தொடர்ச்சியான இனவழிப்பிற்கும், தமிழரின் நிலம் சிங்கள மயமாக்கபடுவதற்கும் இந்த நீடிப்பு மெதுவாகத் துணைபோய்க்கொண்டிருக்கிறது என்றும் அந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தடை நீடிப்பிற்கான முதலாவதாக முனவைக்கப்பட்ட காரணம் இப்படிச் சொல்கிறது, "புலிகளியக்கத்தின் குறிக்கோளான எல்லாத் தமிழருக்குமான சுதந்திரத் தமிழீழம் என்பது இந்தியாவின் இறையாண்மைக்கும், ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் நேரடியான அச்சுறுத்தலை விடுக்கிறது. இந்த கோரிக்கை இந்திய யூனியனின் ஒரு பகுதியை துண்டாடித் தம்முடன் இணைத்துக்கொள்ளும் நோக்கத்தைக் கொண்டிருப்பதால் இது சட்டத்திற்கு முறணான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது".

தமிழீழம் என்பது தமது தாயகமான இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமக்கான ஒரு சுதந்திர அரசை நிறுவும் ஈழத்தமிழரின் ஒரு நியாயமான கோரிக்கையாகும் என்று வைக்கோ விளக்கியபோது குறுக்கிட்ட நீதிபதி, "வைக்கோ அவர்களே, தமது தனிநாடான ஈழத்துடன் தமிழ்நாட்டையோ அல்லது இந்தியாவின் ஒரு பகுதியையோ இணைப்பதற்கு அவர்கள் போராடினார்களில்லையா?" என்று கேட்டார்.

அதற்கு வைக்கோ, "கணம் நீதிபதி அவர்களே, இந்தச் சந்தர்ப்பத்தில் இது தொடர்பான நியாயத்தை எடுத்தியம்புவதற்கு எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டதையிட்டு மிகவும் சந்தோசப்படுகிறேன். புலிகள் ஒருபோதுமே தமிழ்நாட்டையோ அல்லது இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தையோ தம்முடன் இணைத்துக்கொள்வதற்கு முயன்றதில்லை" என்று பதிலளித்தார்

"இந்திய மத்திய அரசு புலிகள் இதைச் செய்ய எண்னியிருந்தார்கள் என்பதை புலிகளின் ஏதாவது ஊடகங்களிலோ, அச்சீடுகளிலோ அல்லது அவர்களது பிரச்சார வெளியீடுகளிலோ வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதை நிரூபிக்க முடியுமா? அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. இந்தக்குற்றச்சாட்டானது ஈழத்தமிழர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத ஒரு கற்பனைக் கட்டுக்கதை என்பதே உண்மை. இது புலிகளை மலினப்படுத்தி அழிப்பதற்காக இந்திய மத்திய அரசினால் வேண்டுமென்றே வஞ்சகத்தனாமன முறையில் புனைந்து உருவாக்கப்பட்ட ஒரு முற்றான கட்டுக்கதை" என்றும் அவர் கூறினார்.

"உதாரணத்திற்கு வங்கதேசத்தின் விடுதலை என்பது மேற்கு வங்கத்தினை அதனுடன் இணைப்பதென்று ஆகிவிடாது" என்று வைக்கோ கூறியபோது குறுக்கிட்ட நீதிபதி புன்முறுவலுடன், " அப்படி ஒரு கதையும் அப்போதிதிருந்ததே?" என்று சொல்ல , வைக்கோ, " ஆனால் அப்படி நடைபெறவில்லை என்பதுதானே உண்மை" என்று பதிலளித்தார்.

உலகெங்கிலும் உள்ள மக்கள் சமூகங்கள் சுதந்திரப் போராட்டங்களை ஆதரிக்கும் இந்தக் காலத்தில், கொசோவோ, கிழக்குத் தீமோர், பாலஸ்த்தீனம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற, நடைபெற்று வருகின்ற மக்கள் ஆதரவுடனான போராட்டங்களை நாம் பார்க்கிறோம். அவ்வாறே ஈழத்தில் புலிகளும் இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எந்தவித பங்கமும் விளவிக்காமல் தமது தாயகமான இலங்கையின் வடக்குக் கிழக்கில் மட்டுமே சுதந்திரத் தமிழீழம் கோரிப் போரிடுவது எப்படி இந்தியாவில் சட்டத்திற்கு முரணான நடவடிக்கையாக அமையும் என்றும் கேள்வி எழுப்பினார்.

புலிகளியக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதற்கு இந்திய மத்திய அரசு புனைந்த இவ்வாறான மேலும் போலிக்காரணங்களும் அவற்றிற்கு வைக்கோ அவர்கள் முன்வைத்த எதிர்வாதமும் கீழே தரப்படுகின்றன.

இந்திய மத்திய அரசால் புனையப்பட்ட இரண்டாவது போலிக் காரணம்,

"தமிழ்நாட்டில் புலிகளியக்கத்திற்கு ஆதரவான அமைப்புக்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகளியக்கத்திற்கு ஆதரவு தேட முற்படுவதாகவும், இவ்வாறான அமைப்புக்களால் ஒழுங்குசெய்யப்படும் ஊர்வலங்கள், பேரணிகள் என்பன தமிழ்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அமைகின்றன".

வைக்கோ இதற்குப் பதிலளிக்கையில், "ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தம்மை எப்போதுமே ஆதரிக்க வேண்டுமென்று ஒரு அரசாங்கம் எதிர்பார்க்க முடியாது, அதுமட்டுமல்லாமல் இங்கே இந்தத் தடை நீடிப்பானது தமது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும், அடக்கி ஒடுக்கவும் ஆளும் கட்சிக்கு உதவிசெய்கிறது" என்றும் கூறினார்.

மூன்றாவது போலிக்காரணம்.

"புலிகளியக்கம் இலங்கையில் முற்றாக அழிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் எச்ச சொச்சங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் ஒன்றுகூடி தமது துரோகிகளையும்(இந்திய மத்திய அரசு) தமது எதிரிகளையும்(சிங்கள அரசு) பழிவாங்கத் தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றன"

" இந்தியா செய்தது துரோகம் என்பது எங்கள் எல்லோர் உள்மனதிலும் உருத்திக்கொண்டிருக்கிறது" என்று வைக்கோ சொல்லவும் குறுக்கிட்ட நீதிபதி, " யார் அப்படிச் சொல்வது?" என்று கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்த வைக்கோ அவர்கள், "கணம் நீதிபதி அவர்களே, நான் தான் இதைச் சொல்கிறேன். இந்திய மத்திய அரசானது ஈழத்தமிழருக்குத் துரோகம் இழைத்து விட்டது. இந்தத்துரோகத்தனம் பற்றி நான் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்களுக்கு பல கடிதங்களை எழுதியிருக்கிறேன். அதற்கு அவர் 2008 அக்டோபர் இரண்டாம் திகதி எனக்கனுப்பிய பதிலில் "இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடைப் பாதுகாப்பத்தற்கு இந்தியா இலங்கைக்கு ஆயுத ரீதியாக உதவிவருவதாக " ஒத்துக்கொண்டிருக்கிறார்" என்று பதிலளித்தார்.

நான்காவது போலிக் காரனம்

"புலிகளியக்கத்தில் எஞ்சியிருக்கும் போராளிகள் அகதிகள் என்கிற போர்வையில் இந்தியவினுள் குறிப்பாக தமிழ்நாட்டினுள் ஊடுருவி அதைத் தமது பின் தளமாகப் பாவிக்கலாம்"

அதற்கு வைக்கோ, " இந்தக் காரணம் இந்த விசாரனை நீதிமன்றத்தினால் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்" என்று கூறிய வைக்கோ அவர்கள், ஒரு இனவழிப்பு யுத்தத்திலிருந்து தமதுயிரைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ்நாட்டிற்குத் தப்பியோடி வரும் அப்பாவித் தமிழர்களை புலிகளியக்கப்போராளிகளாகக் காட்டுவதன் மூலம் அவர்களை மேலும் மேலும் விசாரணைகள் என்கிற பெயரில் துன்புறுத்தல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும் ஆளாக்கி இறுதியில் தடுப்பு முகாம்களுக்கோ அல்லது இலங்கைக்கே மீண்டும் நாடு கடத்தப்படுவதற்கோ ஆளாக்கிவிடுகிறது என்றும் அவர் கூறினார்.

“இந்தத் தடை நீடிப்பின் மூலம் இன்று ஈழத்தமிழர்கள் சர்வதேச அநாதைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தடை நீடிப்பைப் பயன்படுத்தி தமிழரை இந்த அரசானது மீளாக் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது" என்றும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

ஐந்தாவது போலிக்காரணம்

"புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச இணையத்தளங்களில் இந்தியாவுக்கெதிரான கருத்துக்களை எழுதிவருகிறார்கள். புலிகளியக்கம் அழிக்கப்பட்டமைக்கு இந்திய உயர் அரசியல் தலைவர்களும், உயர் அரச அதிகாரிகளுமே காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதனால் இவ்வாறான உயர் அரசியல் தலைவர்களினதும், அதிகாரிகளினதும் பாதுகாப்பிற்குப் பங்கம் ஏற்பட்டுவிடப்போகிறது"

இதற்குப் பதிலளித்த வைக்கோ, "இது இணையத் தொடர்புக் காலம்.புலம்பெயர் தமிழர்கள் மட்டுமல்லாமல், உலகளவில் இயங்கும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் போன்றவை கூட தமிழர் மீதான இனவழிப்புப் போரைக் கண்டித்திருப்பதோடு இதே குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருக்கின்றனவே?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் டப்ளின் மக்கள் நீதிமன்றில் விசாரணைகளை நடத்திய மூன்று நீதிபதிகளில் ஒருவர் கூட முன்னர் தில்லி உயர் நீதிமன்றத்தில் தலமை நீதிபதியாக இருந்தவர்தான் என்று சுட்டிக்காட்டினார். அத்துடன் கொழும்பு அமைச்சர்களில் ஒருவர் ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஒரு குழுவை நியமித்தைதைக் கண்டித்து அவரை ஒரு "சர்வதேச விலைமாதர்களின் தரகர்" என்று வசை பாடியதையும் சுட்டிக் காட்டினார்.

" தடை நீடிப்பிற்கான காரணங்களில் ஒன்றாக முன்வைக்கப்படும் புலிகளியக்கத்தின் அழிவிற்கு முழுக் காரணமானவர்கள் இந்திய அரசியல் தலைவர்களும், உயர் அதிகாரிகளும்தான் என்கிற பிரச்சாரம் என்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்படி சட்டத்திற்கு முரணானது என்று எங்கு குறிப்பிடப்படவில்லையே?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த விசாரணைகளில் தனது வாதங்களும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்என்ற வைக்கோ அவர்களின் கோரிக்கையை இந்திய மத்திய அரசின் கவுன்ஸில் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, அவர்களை புலிகளியக்கத்தின் உத்தியோகபூர்வ வழக்கறிஞராகவோ அல்லது அவ்வமைப்பின் உத்தியோகத்தவராகவோ இருக்கவில்லை என்றும் தெரிவித்தது.

அதற்குப் பதிலளித்த வைக்கோ, தாம் இந்தத் தடைச் சட்டத்தினால் தனிப்பட்டளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்மேல் இசட்டத்தினூடாக இரு வழக்குகள் இன்னும் நிலுவையிலிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

" இந்திய மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் புலிகளியக்கம் இன்று இயங்கவில்லை, அதனால் புலிகளியக்கத்தின்மேல் இவ்வாறான தடையுத்தரவினைப் பிரயோகிக்கும் தேவை எந்தப் பயனுமற்றது என்று வாதிட்டார்.

இந்தத் தடையுத்தரவிற்குப் பதிலளிக்கும் சந்தர்ப்பம் புலிகளியக்கத்திற்கு இன்றைக்கு இல்லாதிருப்பதாலும், இந்திய மத்திய அரசின் கருத்துப்படி அவ்வியக்கம் இன்றும் இயங்குவதற்கான சந்தர்ப்பம் முற்றாகவே அற்ற நிலையிலும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட நபர் என்கிற முறையில் தான் இது தொடர்பாக வழக்காட அனுமதியளிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இயற்கை நியதிப்படி நீதி வழங்கப்பட வேண்டும் என்று அவர் வேன்டினார்.

"கணம் நீதிபதி அவர்களே, பல்வேறு நீதி வழங்கும் சந்தர்ப்பங்களில் பாவிக்கப்பட்டு வெற்றியளித்த இயற்கை நீதியைப் பயன்படுத்தி, இவ்வழக்கில் நியாயமான சந்தர்ப்பமளிக்கப்பட்ட ஒருவர் தண்டிக்கப்படாது வெற்றியடைய தங்களால் ஆனதைச் செய்ய வேன்டிக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

மூலம் தமிழ்நெட்

தமிழாக்கம் ரகுனாதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.