Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தன்வினை தன்னைச் சுடும்:திரிசங்கு நிலையில் இலங்கை

Featured Replies

வன்னியில் இறுதிக்கட்ட கொடூர யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டதும், இலங்கை பாரத நாட்டின் ஆதரவுடன் மக்களின் இழப்புக்களை மூடி மறைத்தமையும் தமிழர்கள் மனவேதனையுடன் நினைவு கூர வேண்டிய ஒன்று. அதிலும் இலங்கை இராணுவம் பொஸ்பரஸ் குண்டுகளை வீசி மூர்க்கமாக வன்னியில் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தபோது, இலங்கை அரசு கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை நிறுத்திவிட்டதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததும், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக உண்ணாவிரதம், டெல்லிக்கு பஸ் பயணம் என நாடகமாடியதும், இதனைவிட உலகத் தமிழரின் தலைவர் என தனக்குத்தானே குறிப்பிட்டுக்கொள்வதும் தமிழ் மக்கள் நொந்துகொள்ள வேண்டிய ஒன்று.

தற்போது பிரச்சினை வேறு விதமாகத் திரும்பியுள்ளது. வன்னி இறுதி யுத்தம் தொடர்பில் பல்வேறு சிக்கல்களை, முக்கியமாக மனித உரிமை மீறல் பிரச்சினைகளை இலங்கை அரசு உலக நாடுகள் தொடர்பில் எதிர்நோக்க வேண்டியிருந்தது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகளைச் சமாளிக்க ஆணைக்குழுக்களை நியமிப்பதாக இலங்கை அரசு கூறிக்கொண்டது. அதிலும் இறுதி யுத்தத்தில் அரச தரப்பின் முக்கிய தளபதியான சரத் பொன்சேகா மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையே யுத்த வெற்றி இழுபறியின் போது சரத் பொன்சேகா திடீரென்று 'அப்ரூவராக" மாறி நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட பலர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதாகப் பற்ற வைக்க அச்செய்தி உலகம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இலங்கை அரசின் இரட்டை வேடம் உலகத்துக்கு அம்பலமானது.

இதனைவிட இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்கள் சிலரை கண்களையும், கைகளையும் கட்டி தலையில் சுட்டுக்கொல்வது போன்ற வீடியோ நாடாக்கள் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் மட்டுமன்றி ஏனைய தரப்பினராலும் அவதானிக்கப்பட்டன. அத்துடன் அமெரிக்கா தன்னிடம் இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருப்பதாக அறிவித்ததும் இலங்கை அரசின் வயிற்றில் புளியைக் கரைக்க அலறியடித்துக்கொண்டு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும், நல்லிணக்க ஆணைக்குழுவை| அமைத்தது. ஆனால் இவ்வாறு ஆணைக்குழுக்களை நியமிப்பதும் அவற்றின் செயற்படு தன்மை கேள்விக்குறியாக்கப்படுவதும் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல இலங்கை மக்களுக்கும் பழகிப்போன ஒன்று. அதுவும் இனப்பிரச்சினை விடயத்தில் அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற ஒன்றை அமைத்து அது அடிக்கடி கூடிக் கலைந்து சலிப்பூட்டியதும் மிகப்பிந்திய அனுபவம்.

ஆனால், இம்முறை நிலைமையின் தீவிரம் சற்று மோசமாவதைக் கண்ட அரசு ஆணைக்குழுவை ஓரளவு சுயாதீனமாக இயங்க அனுமதித்தது. போர் நடைபெற்ற இடங்களிலுள்ள மக்கள், கல்விமான்கள் மற்றும் அரச தரப்பினர் என பல தரப்பினரின் ஆலோசனையையும் ஆணைக்குழு செவிமடுத்தது. அதிலும் ஹைலைட்டாக இறுதிப்போரின் நேரடிச் சாட்சியங்களைப் பதிவு செய்தது. மக்கள் பதறியடித்துக்கொண்டு தமிழ் மொழி புரியாத சிங்களத் தலைவர்களும் நெஞ்சுருகும்படி சாட்சியமளித்தனர். இந்த விடயம்தான் இலங்கை அரசின் புதிய தலையிடிக்குரிய விடயமாகியுள்ளது.

முன்னாள் புலிகளின் பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்டோரை இராணுவம் பஸ்களில் ஏற்றிச் சென்றதை எழிலனின் மனைவி சாட்சியமித்தமையும், சரணடைந்த போராளிகளை 16 பஸ்களில் இராணுவம் ஏற்றிச் சென்றதை தான் பார்த்ததாக தாயார் ஒருவர் சாட்சியமளித்தமையும் இலங்கை அரசு கொத்துக்குண்டுகளை வீசி நாளாந்தம் 400 முதல் 600 வரையிலான மக்களைக் கொன்று குவித்தது என பூநகரிவாசி ஒருவரும் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தமை இலங்கை அரசின் முகத்தைச் சுழிக்கவைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே இலங்கை அரசு உலக நாடுகளைச் சமாளிப்பதற்காக நியமித்த ஆணைக்குழு விபரீதமான சில முடிவுகளைத் தரத் தொடங்கியுள்ளது. ஆனால் எருமை மாட்டில் மழை பெய்தது போன்று இந்த ஆணைக்குழுவின் பரிந்துரையையும் இலங்கை அரசு தட்டிக்கழிக்க முடியும். அதிலும் இந்தியாவுக்கு வாலையும், சீனாவுக்குத் தலையையும் காட்டிப்பிழைக்கும் வழியை நன்றாகத் தெரிந்துகொண்டுள்ள இலங்கை அரசுக்கு இவ்வாணைக்குழு விடயங்கள் கால் தூசுக்குச் சமன்.

ஆனால், ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல சீனாவின் பக்கம் அதிகம் சாய்வதால் மேற்குலகின் எரிச்சலையும் கோபத்தையும் சம்பாதித்துக்கொண்டுள்ள இலங்கை சில சமயம் மேற்குலகின் எதிர்ப்பை உணர வேண்டிய சமயமும் வரலாம். அந்நிலையில் தமிழர்களின் சாபமும் சேர்ந்துகொண்டு பனையால் விழுந்தவனை மாடு எறி மிதிக்கும் ஒரு நிலையும் ஏற்படலாம். அப்போது மேலேயும் போக முடியாமல் கீழேயும் வரமுடியாமல் திரிசங்கு நிலையில் இலங்கை அரசு தவிக்கும் நிலை உருவாகும்.

பூராயத்துக்காக

யாழிலிருந்து காரை.வசந்தன்

http://www.pooraayam.com/news-analysis/1038-2010-10-02-11-13-42

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மைதான். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.