Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் சிங்களக் குடியேற்றம் – அரசியல் பேச வேண்டாம் என்கிறார் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் சிங்களக் குடியேற்றம் – அரசியல் பேச வேண்டாம் என்கிறார் டக்ளஸ்

இலங்கை அரசின் சிங்களமயமாக்கல் திட்டத்தின் கீழ் கிழக்கில் நடைபெறுவது போல் யாழ்ப்பாணத்திலும் சிங்கள மக்களைக் குடியேற்ற இலங்கை அரசு திட்டமிடுகிறது. வன்னியில் அரச படைகளால் தமது சொந்த மண்ணிலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் மர நிழலிலும், தெருவோரங்களிலும் குடியிருக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்படும் குடியேற்றம் குறித்து அரச சார்பு துணைக்குழுக்களின் கட்சித்தலைவர்களின் கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

யாழ்ப்பாணம் மேட்டுக்குடி சிந்தனையைப் பிரதிபலிக்கும் இவர்கள் கிழக்கில் நாளாந்தம் நடைபெறும் குடியேற்றங்கள் குறித்து மூச்சுக்கூட விட்டதில்லை. கோரமான பாசிச குடும்ப சர்வாதிகார அரசிற்கு மனித முகத்தை வழங்க முற்படும் இலங்கை அரச துணைக் குழுக்கள், இலங்கையில் எதிர்ப்பியக்கங்கள் தோன்றுவதற்கான மிகப்பெரும் தடையக அமைந்துள்ளன.

வடக்கில் சிங்கள மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.கையிரத நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களின் விபரங்கள் படையினரால் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களைப் பார்வையிடச் செல்லும் செய்தியாளர்கள் கூட படையினரின் அனுமதியினைப் பெற்றே செல்ல வேண்டியுள்ளது.

மீள் குடியேற விரும்பும் சிங்கள குடும்பங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கு நியாயமான தீர்வினை வழங்குமாறு அமைச்சர் தேவானந்தா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் 523 சிங்கள குடும்பங்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் அரசியல்மயப் படுத்தப்படக் கூடாதென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமது அரச விசுவாசத்தை தெரிவிப்பதற்காக சிங்களக் குடியேற்றவாசிகளின் மீது மனிதாபிமானம் காட்டும் அரச துணைப்படைகளும் அவர்களின் நாடுகடந்த அடிவருடிகளும் அரசிற்கு அழுத்தம் வழங்க முனையும் ஏனையோரை அழிப்பதில் அனைத்து வழிகளிலும் முனைப்புக்காட்டுகின்றனர்.

தமிழர்கள் பிணங்கள் நடுத்தெருவில் நாய்கள் புசிக்க வீசியெறியப்ப்பட்ட வேளைகளில் அவர்களுக்கு அரசியல் இருந்தது. அழித்தொழிக்கப்பட்ட தமிழர்களில் எஞ்சியவர்கள் தெருக்களில் அனாதைகளாக, உண்பதற்கு உணவின்றி, உடுப்பதற்கு உடையின்றி, மனிதகுலம் வெட்கித் தலைகுனிய இனச்சுத்திகரிப்பை ராஜபக்ச குடும்பம் மேற்கொள்கின்ற போது இவர்களுக்கு அரசியல் இருந்தது. அது ராஜபக்சவின் அரசியல். மக்கள் விரோத அரசியல்.

சமூகப்பற்றுள்ள மனிதர்களின் மீதான அவதூறு அரசியல். தமது சொந்த நோக்கங்களுக்கான வியாபார அரசியல். சிங்கள் மக்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்படும் போது மட்டும் அரசியல் வேண்டாம் என்கின்றனர். அது அவர்களுக்கு வெறும் செய்தி மட்டும்தான்.

வன்னியில் மக்கள் தெருவோரங்களின் வாழ்க்கை நடத்தும் நிலையை அரசு உருவாக்கியிருக்கும் வேளையில், பெண்களைப் பாலியல் வதைக்கு உட்படுத்தும் நிலையில், அவசர அவ்சரமான சிங்களக் குடியேற்றங்களுக்கு அரசியல் பின்ன்ணி இல்லை என்று இவர்கள் கூறிவதன் பின்னால் சமூகவிரோத அரசியல் உள்ளது.

தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சமுக்தி அதிகார சபையின் தலமையக அதிகாரிகள் குழுவொன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளது.

தெற்கில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த சிங்களக் குடும்பங்களுக்கு அரச உதவிகள் கிடைப்பதற்கு பணிப்புரை வழங்கும் டக்ளஸ் தேவானந்தாவாவும், ஆனந்த சங்கரியும், புலம்பெயர் நாடுகளில் வாழும் அவர்களின் நீட்சிகளும், இவர்களின் எஜமானார்களான மகிந்த ராஜபக்ச குடும்ப சர்வாதிகார அரசும் வினாவெழுப்பபபட வேண்டும்.

வன்னியில் விலங்குகள் போல வாடும் மக்களுக்கும், கிழக்கில் அனாதரவாக விடப்பட்ட குடும்பங்களுக்கும் ஏன் இதே கவனிப்பும் உதவிகளும் வழங்கப்படக் கூடாது எனக் கோரவேண்டும். அதற்கான அழுத்தங்கள் இலங்கையிலும் இலங்கைக்கு அப்பாலும் பிரயோகிக்கப்பட வேண்டும். அழுத்தங்கள் பிரயோகிக்க முனையும் புலம் பெயர் தமிழர்களை ‘அரசியல் வேண்டாம் உதவி தேவை என்று’ குற்ற உணர்வுக்கு உள்ளாக்குபவர்கள் அரச அடிவருடிகள் என அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

-விஜிதா

http://inioru.com/?p=17391

அரசியல் என்பது என்ன என்பதற்கு அவரவர் அப்பப்போது விளக்கமளித்து அரசியல் நடத்துவது தமிழர் அரசியலில் சாதரணமாய் விட்ட ஒன்று.

- உதாரணத்துக்கு நேர்டோ அரசியலில் " அல்லலுறும் போராளிகள், பொதுமக்களின் புனர்வாழ்வே முக்கிய தேவை" என்பது மனிதாபிமானம். அரசியல் அல்ல.

- "ஈழம் மலர்ந்தால் மகிழ்வேன்" எனக்கூறியும் முள்ளிவாய்க்கால் மனித படுகொலையின் போது "உண்ணாவிரதம்" நடத்தியதும் உலகத்தமிழர் தலைமை!

- ஐக்கிய இலங்கைக்குள் நடப்பது "உள்நாட்டு பிரச்சனை" எனச்சொல்லிக்கொண்டே தமிழரை இனஅழிப்பு செய்வதும் உலகத்தின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் அரசியல் பண்பு.

"சனநாயகம்", "மனித உரிமைகள்" என்பன அரசியலின் நாடகங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள். சிறுபான்மை இனமான தமிழருக்கு ஒரு சரியான அரசியல் தலைமை இல்லாதமையால் ஏழு கூடி தமிழினம் தனக்கென ஒரு நாடும் இல்லாமல் அடிமைகளாக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.

அடுத்த தேர்தலுக்கு புலம்பெயர் தமிழ் தேசிய தூண்களே!!!! ... இன்னும் இரு கஜேந்திர குதிரைகளை இறக்கி விட்டு போட்டிக்கு ஓட விடுங்கோ, இந்த டக்லஸ் பரதேசி மூன்று ஆசனங்களை ஆறாக்குவான்!!! ... இந்தப்பரதேசி, இத்தனை அழிவுகளின் பின்னும் இன்னும் நிறுத்தவில்லை, சிங்கள எஜமானர்களுக்கு காக்கா பிடிப்பதை???

  • கருத்துக்கள உறவுகள்

<_< உந்த நாய் யார் போட்டி போட்டாலென்ன திரும்பவும் பதவிக்கு வருவான். அப்பிடி வெல்லாவிட்டாலும் கூட தேசியப்பட்டியலிலாவது வந்து நக்குவான்.

ஆனால் கூத்தமைப்பு வென்றாப்போல என்ன நடக்கப்போகுது?? வெல்லிரதில எத்தினை மகிந்தவின்ர காலில விழுந்து சம்பந்தருக்கு ஆப்படிக்குதென்று ஆருக்குத் தெரியும். கஜேந்திரனை ஆதரிச்ச காரணமே வேறை. இந்தியாவின்ர மகுடிக்கு ஆடிக்கொண்டிருந்த சம்பந்தருக்கு பாடம் புகட்டத்தான் கஜேந்திரனக்கு ஆதரவு குடுக்கப்பட்டது. இப்ப ஒருத்தற்ற சத்தத்தையும் காணோம். சம்பந்தனுமில்லை, கஜேந்திரனுமில்லை. அப்பப்ப பொடியப்பு பியசேன மட்டும் கதைச்சுக்கொண்டிருக்குது.

சரி, அடுத்த தேர்தலில் சம்பந்தைரையே எல்லாரும் ஆதரிப்பம் எண்டு வைச்சுக்கொள்ளுவம், அப்ப மட்டும் என்ன வித்தியாசமா நடக்கப்போகுது?

வெல்லிரதில எத்தினை மகிந்தவின்ர காலில விழுந்து சம்பந்தருக்கு ஆப்படிக்குதென்று ஆருக்குத் தெரியும்.

ஆணானப்பட்ட புலிகளிலேயே ஆயிரம் விலை போய் சிங்களத்தின் காலில் விழும்போது, கூட்டமைப்பில் உள்ளவர்கள் விழமாட்டார்களென எதிர்பார்க்க முடியாது!

ஆனால் கூத்தமைப்பு வென்றாப்போல என்ன நடக்கப்போகுது??

ஆகக்குறைந்தது இந்த பரதேசிகளின் ... தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லி எண்ணிக்கையை காட்டும் ... எண்ணிக்கையையாவது குறைக்கலாம்!

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.