Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீளக்குடியேற்றக் கோரிக்கை?

Featured Replies

நிரந்தர நிலைப்பாட்டுக் கோலமா?

இடம்பெயர்ந்திருக்கும் ஒன்றரை லட்சம் சிங்கள மக்களையும் வடக்கு, கிழக்கில் குடியமர்த்துமாறு ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தி உள்ளது. அதற்கு அடை மொழி வைத்தால் போன்று யாழ்ப்பாணம் ரயில் நிலை யத்தில் தெற்கிலிருந்து வந்து தங்கி இருக்கும் சிங்கள மக்களை யாழ்ப்பாணத்தில் அவர்களின் சொந்த இடங் களில் குடியேற்ற வேண்டும் என்று ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் வலியுறுத்தி உள்ளார்.

யாழ்ப்பாணம் சென்றுள்ள சிங்கள மக்களின் மீள்குடி யேற்றம் குறித்து மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருப்பதா கவும், அவர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையென் றால் இவ்விடயத்தை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டிவரும் என்றும் எச்சரிக்கும் தொனியில் கூறியிருக்கிறார் ஹெல உறுமயவின் தலைவர்.

போர் முடிந்து ஒன்றரை வருடங்கள் கழிந்தபோதி லும் யாராலும் பேசப்படாத, கண்டுகொள்ளப்படாத விட யத்தைத் தாம் மீள்குடியேற்ற அமைச்சரின் கவனத்துக் குக் கொண்டு வந்திருப்பதாகவும் தேரர் தகவல் கூறி உள்ளார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங் களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக உள்ளதாகவும் தேரர் ""சத்தியம்'' பண்ணியுள் ளார். போர் முடிந்து விட்டது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களை அவரவர்களின் சொந்த இடங்களில் அவர்கள் முன்னர் வாழ்ந்த பகுதிகளில் மீளக்குடியேற்ற வேண் டும் என்பது சோபித தேரரின் வாதம்.

போர் நடைபெற்ற பிரதேசங்களில் வாழ்ந்து, தமது உயிரைக் காப்பாற்றினால் போதுமென்ற மனநிலையில், தமது சொந்தங்களில் பலரை இழந்து, திக்கற்றவர்களாக முட்கம்பி வேலிகள் இடப்பட்ட முகாம்களில் சிறைப் பட்டு மேன்மேலும் சொல்லொண்னா கஷ்டங்களை அனுபவித்து, வாழ்வாதாரத்தில் வெறுமை நிலைக்கு ஆளான தமிழ் மக்களின் மீளக்குடியமர்வுடன், ஏதே ஒரு சக்தியால் தூண்டப்பட்டு யாழ்ப்பாணம் வந்திருக்கும் சிங்கள மக்களின் மீள்குடியமர்வை சமன்பாடாகக் காட்டு வது எந்த வகையில் பொருத்தம்?

இத்தனைக்கும், யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் வந்து தங்கியுள்ளவர்கள் முன்னர் இங்கு குடியிருந்த மைக்கான சான்றுகள் எதுவும் இல்லையென்றும், இது விடயத்தில் எதனையும் உடனடியாகச் செய்வதற்குச் சாதகமான நிலை எதுவும் இல்லை என்றும் அரச நிர்வாக துறையினால் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கு திடீரென வந்து, மீள்குடியேறப் போவதாக யாழ்.வந்திருக்கும் பெரும்பான்மை இனத்த வர்களால் கூறப்பட்டாலும், அது குறித்து தமக்கு எதுவித உத்தியோகபூர்வ அறிவிப்பும் இல்லையென்று ஆளு நரும் கூறியிருந்தார். தாம் இங்கு மீளக்குடியமராமல் திரும்பிப் போகப் போவதில்லையென்று யாழ்.ரயில் நிலையத்தில் தங்கி யிருக்கும் சிங்கள மக்கள் சபதம் கூறுகின்றனர்.

இவற்றுக்கிடையில், சிங்கள மக்களை குடாநாட்டில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்றும், அதற்கான உதவி களையும் ஒத்தாசைகளையும் அரசாங்கம் வழங்கவேண் டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா வற்புறுத்தியிருக்கிறார்; ஒத்து ஊதியுள்ளார். அரசாங்கக் கட்சிகள் தரப்பில் காக்கப்பட்டு வரும் மௌனம் இது விடயத்தில் அதன் சம்மதத்துக்கு அறிகுறி யாகும். ஏன் அதன் முன்னெடுப்பு என்று சந்தேகிப்பதும் தப்பாகாது.

இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் , இது தெற்கின் அரசியல் கட்சிகள் சேர்ந்து வகுத்துக்கொண்ட "சதி' என்றே யாழ்ப்பாண மக்கள் கருதுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் முன்னர் வசித்துப் போரினால் இடம்பெயர்க்கப்பட்ட முஸ்லிம் மக்கள், மீண்டும் இங்கு வந்து மீளக்குடியேறி உள்ளனர். அது குடாநாட்டு மக் களுக்கு எவ்வித சந்தேகத்தையும் எழுப்பவில்லை. ஏனெ னில் அவர்கள் பூர்வீகமாகவே, சொந்த நிலம், சொந்த வீடுகளில் வாழ்ந்தவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தவை. அதற்கான சான்றுகள் உள்ளன. மேலும் அவர்கள் இங்கு நீண்டகாலமாக சகோதரர்கள் போன்று வாழ்ந்தவர்கள்.

இப்போது திடீரென யாழ்ப்பாணத்துக்கு வந்து தம்மை மீளக்குடியேற்றுமாறு கேட்பவர்களுக்கும் உரிய சான்றா தாரங்கள் இருப்பின் அவர்களின் மீளக்குடியேற்றக் கோரிக்கையில் குடாநாட்டு மக்களுக்கு சந்தேகம் எழுவதற்கு நியாயமிருக்காது.

மேலும், இவர்கள் தாம் இங்கு முன்னர் வசித்ததாகக் கூறும் காணிகளை அன்றி அரச காணிகளில் குடியேற்று மாறு கேட்பது சிங்களக் குடியேற்றங்களை ஏதோ ஒரு கூட்டுச் சக்தி தூண்டிவிட்டிருக்கிறது என்ற ஐயுறவை யும் இங்குள்ளவர்கள் மத்தியில் உண்டாக்கியிருப்பது இயல்பே; அது இயற்கையும் கூட.

மொத்தத்தில் போருக்குப் பின்னரான காலத்தில் வளர்க்கப்பட வேண்டிய இன ஒற்றுமை, இன சௌஜன் யம் என்பவற்றுக்குப் பதிலாக மீண்டும் இன முரண் பாட்டை தோற்றுவிப்பதற்கான ஓர் ஊற்றுக்காலாக இப்போதைய முயற்சியைப் பார்ப்பதே பொருத்தம் இன உறவும் ஒற்றுமையும் சகோதரத்துவமும் சம வாய்ப்புகளும் சகலருக்கும் கிடைக்க மனம் கொண்டு உழைப்பதற்குப் பதிலாக,

இத்தகைய குறுக்குப் புத்தி கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடைக் கற்களாக விளங்கும் என்பதனை உணராதிருப்பதேனோ? இந்த நாட்டின் அரசியலை, இனவாதப் படுகுழியிலிருந்து இனி எப்போதுமே மீட்கமுடியாது என்பது நிரந்தர நிலைப்பாட்டுக் கோல மாகிவிட்டது; அவ்வளவுதான்!

[ உதயன் ] - [ Oct 16, 2010 04:00 GMT ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.