Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவர் பிரபாகரன் உயிருடன்??? : இந்தியா ஊடாக கசியும் தகவல்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ.பதில் அளித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இராணுவத்துக்கு எதிரான போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி சிறீலங்கா அரசு அறிவித்தது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், பிரபாகரன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதால், பிரபாகரன் பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், இதுவரை பிரபாகரன் பெயர் ராஜிவ் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்ற தகவல், சி.பி.ஐ.யிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

திருப்பூர், குத்தூஸ்புரத்தை சேர்ந்த மணி என்பவர், சி.பி.ஐ.,யிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரி இருந்தார். அதில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாரா? இலங்கை அரசு, பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ மாக அறிவித்துள்ளதா? இதுதொடர்பாக அரசு ரீதியான தகவல் இலங்கை அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளதா? பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளதா? ராஜிவ் கொலை வழக்கில் பிரபாகரன் விடுவிக்கப்பட்டுள்ளாரா? என்ற தகவல்களை கோரி இருந்தார்.

இந்நிலையில் இக்கேள்விகளுக்கு கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி சி.பி.ஐ., எம்.டி.எம்.ஏ., பிரிவு பதில் அளித்துள் ளது. அந்த பதிலில், ராஜிவ் கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குற்றவாளிதான் எனவும், பிரபாகரன் இறந்து விட்டதாக, சிறீலங்கா அதிகாரிகள் தகவல் தெரிவித்திருப்பதாகவும், அரசு ரீதியான தகவல் பெறப்பட்டுள்ளதாகவும், பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இறப்புச் சான்றிதழ் தொடர்பான கேள்விக்கு, அலுவலகதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மட்டும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜிவ் கொலை வழக்கில் இருந்து பிரபாகரன் விடுவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.tharavu.com/2010/10/blog-post_4500.html

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சி.பி.ஐ.பதில் அளித்துள்ளது.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இராணுவத்துக்கு எதிரான போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி சிறீலங்கா அரசு அறிவித்தது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், பிரபாகரன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதால், பிரபாகரன் பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், இதுவரை பிரபாகரன் பெயர் ராஜிவ் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்ற தகவல், சி.பி.ஐ.யிடம் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.

திருப்பூர், குத்தூஸ்புரத்தை சேர்ந்த மணி என்பவர், சி.பி.ஐ.,யிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரி இருந்தார். அதில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளாரா? இலங்கை அரசு, பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ மாக அறிவித்துள்ளதா? இதுதொடர்பாக அரசு ரீதியான தகவல் இலங்கை அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளதா? பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளதா? ராஜிவ் கொலை வழக்கில் பிரபாகரன் விடுவிக்கப்பட்டுள்ளாரா? என்ற தகவல்களை கோரி இருந்தார்.

இந்நிலையில் இக்கேள்விகளுக்கு கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி சி.பி.ஐ., எம்.டி.எம்.ஏ., பிரிவு பதில் அளித்துள் ளது. அந்த பதிலில், ராஜிவ் கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் குற்றவாளிதான் எனவும், பிரபாகரன் இறந்து விட்டதாக, சிறீலங்கா அதிகாரிகள் தகவல் தெரிவித்திருப்பதாகவும், அரசு ரீதியான தகவல் பெறப்பட்டுள்ளதாகவும், பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இறப்புச் சான்றிதழ் தொடர்பான கேள்விக்கு, அலுவலகதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மட்டும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜிவ் கொலை வழக்கில் இருந்து பிரபாகரன் விடுவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.tharavu.com/2010/10/blog-post_4500.html

இந்த செய்திக்கும் தலைப்பிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை...அதாவது ஈழத்தமிழர்களை தொடர்ந்தும் குழப்பத்தில் வைத்திருக்கும் ஒரு தொடர் முயற்சியாக இதை நோக்கலாம்.

இந்த செய்திக்கும் தலைப்பிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை...அதாவது ஈழத்தமிழர்களை தொடர்ந்தும் குழப்பத்தில் வைத்திருக்கும் ஒரு தொடர் முயற்சியாக இதை நோக்கலாம்.

வாசகர்களை கவரும் படியான செய்திகள் போய், இப்போ வாசகர்களை குழப்பும் செய்திகள் பிரசுரிப்பது ஒரு பாஷன் ஆச்சுது... :lol:

தலைவர் இருக்கிறார் என்டு சொன்னாலும் பிரச்சினை...!!!

தலைவர் இல்லை என்டு சொன்னாலும் பிரச்சினை...!!! :lol:

எதையாவது சொல்லி... வம்பை விலைக்கு வாங்கி... துரோகி என்ட பட்டத்தை இலவசமாக வாங்குவதைவிட பேசாமல் உட்கார்ந்து "நடக்கிறத பார்த்து நடக்கிறது" ரொம்ப நல்லது என்டு நினைக்கிறன்! :lol:

அவர் இருக்கிறாரோ இல்லையோ... நாம் நாமாக இருக்கின்றோமா...???? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீபன்

தலைவர் இருக்கிறார் என்று சொல்வதும் பிரச்சினையில்லை

இல்லை என்று சொல்வதும் பிரச்சினையில்லை

ஏனெனில் எவருக்கும் தெரியாத ஒரு விடயம் அது.

எனக்கு தெரியாது என்றால் உங்களுக்கும் தெரியாது

இங்கு எழுதுபவருக்கும் தெரியாது

இப்போ பிரச்சினை என்னவென்றால்

இருப்பது போல் தொடங்கி இல்லை என்பது......

இல்லை என்பது போல் தொடங்கி இருக்கிறார் என்பது...........

இதைத்தான் நாம் வெறுக்கின்றோம்

இந்த தலைப்புக்கு அவரால் எங்காவது பதில் சொல்ல முடிந்துள்ளதா....???

ஏனெனில் அவருக்கு உண்மை தெரியாது.

சும்மா தானும் குளம்பி

மற்றவரையும் குளப்பும் தருணம் இது.

அவரது பிழைப்புக்காக அவர் அதைச்செய்கின்றார்.

இதற்கு பதில் எழுத எடுத்த இந்த நேரத்துக்காக நான் வெட்கப்படுகின்றேன்

பார்த்தீபன்

தலைவர் இருக்கிறார் என்று சொல்வதும் பிரச்சினையில்லை

இல்லை என்று சொல்வதும் பிரச்சினையில்லை

ஏனெனில் எவருக்கும் தெரியாத ஒரு விடயம் அது.

எனக்கு தெரியாது என்றால் உங்களுக்கும் தெரியாது

இங்கு எழுதுபவருக்கும் தெரியாது

இப்போ பிரச்சினை என்னவென்றால்

இருப்பது போல் தொடங்கி இல்லை என்பது......

இல்லை என்பது போல் தொடங்கி இருக்கிறார் என்பது...........

இதைத்தான் நாம் வெறுக்கின்றோம்

இந்த தலைப்புக்கு அவரால் எங்காவது பதில் சொல்ல முடிந்துள்ளதா....???

ஏனெனில் அவருக்கு உண்மை தெரியாது.

சும்மா தானும் குளம்பி

மற்றவரையும் குளப்பும் தருணம் இது.

அவரது பிழைப்புக்காக அவர் அதைச்செய்கின்றார்.

இதற்கு பதில் எழுத எடுத்த இந்த நேரத்துக்காக நான் வெட்கப்படுகின்றேன்

உண்மைதான் அண்ணை...! ஏற்றுக்கொள்கின்றேன்! :lol:

மாவீரர் தினம் வருகுது.... இனிமேல் கொஞ்ச நாளுக்கு இப்பிடி கதையள தொடங்குவினம்! :lol:

நீங்கள் சொல்லுற மாதிரி... பேசாமல் இருப்பதுதான் நல்லது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தில் நான் வணங்கி எழும்போது....

எல்லோரும் எம்முடன் கூட இருங்கள் என்றுதான் கேட்பேன்

போராளிகள் எவரும் இறந்து விட்டதாக நான் நம்புவதில்லை

எம்மோடு

எமது இனத்தோடு இரண்டற கலந்துவிட்ட அவர்களுக்கு இறப்பு என்பது வராது.

சாவு என்பது எம்மைப்போல் சாதாரண மனிதர்களுக்குத்தான்

மாமனிதர்களுக்கு அல்ல....

  • கருத்துக்கள உறவுகள்

ஆகமொத்தம் இந்திய அரசை நம்பித் தான் நீங்கள் இருக்கின்றீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.