Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேசக்கரம் உறவுகளுக்கு உதவும் சுயதொழில் சத்துணவுத் திட்டம் ஒக்ரோபர் மாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் உறவுகளுக்கு உதவும் சுயதொழில் சத்துணவுத் திட்டம் ஒக்ரோபர் மாதம்

போரால் பாதிக்கப்பட்டு உதவிகள் அற்ற உறவுகளுக்கான உதவும் திட்டத்தை நேசக்கரம் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரையில் 256000ரூபாவுக்கான (இரண்டு இலட்சத்து ஐம்பத்து ஆறாயிரம் ரூபா) உதவிகளை வழங்கியுள்ளது.

இவ்வுதவிகளானது சுயதொழில் வேலைவாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு கல்வித் தேவைகள் துவிச்சக்கர வண்டி போன்றவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளது.

தங்கராசா நாகலட்சுமி 10000ரூபா எள்ளுக்காடு உருத்திரபுரம் , சிவசுப்பிரமணியம் உருத்திரபுரம் எள்ளுக்காடு 5000ரூபா , திருச்செல்வம் வித்தியா எள்ளுக்காடு உருத்திரபுரம் 5000ரூபா , இராசன் சுப்பிரமணியம் மருதநகர், கிளிநொச்சி 11000ரூபா , பாலநந்தினி கிளிநொச்சி 5000ரூபா , கேதீஸ்வரன் மல்லாகம் 25000ரூபா , சிவானந்தம் சிவரூபன் மல்லாவி 50000ரூபா , பிறேமிளா மட்டக்களப்பு – 20000ரூபா , ஞானமணி பரமேஸ்வரன் மட்டக்களப்பு 30000ரூபா எனும் வகையில் 9பேருக்கும் சுயதொழில் ஊக்குவிப்பு உதவியாக 161000ரூபா (ஒரு இலட்சத்து அறுபத்து ஓராயிரம் ரூபா) வழங்கப்பட்டுள்ளது.

மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஊற்றுப்புலம் கிராமம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் 218 மாணவர்களிற்கான சத்துணவு வழங்கலும் கல்விக்கான பண உதவிவழங்கும் இரண்டாவது நிகழ்வும் ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையின் அதிபர் பரந்தாமன் தலைமையில் நேசக்கரம் அமைப்பினால் 15.10.2010 அன்று நிறைவேற்றப்பட்டது.

ஊற்றுப்புலம் பாடசாலை மாணவர்களுக்கு கடந்த மாதம் நேசக்கரம் அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட உதவித்திட்டத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக ஜம்பத்தையாயிரம் இலங்கை ரூபாய் பெறுமதியான சத்துணவுகள் வழங்கும் திட்டத்தினையும் இரண்டாம் கட்ட உதவியான எண்பதாயிரம் ரூபா பெறுமதியான உதவிகளை நேசக்கரத்தின் யாழ்மாவட்ட இணைப்பாளர் திரு தீபச்செல்வன் அவர்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட மணவர்களிடம் கொண்டு சென்று சேர்க்கப்பட்டது.

இம்மாணவர்களுக்கான உதவியினை ஜேர்மனியில் வசிக்கும் திரு திருமதி .ராஜேந்திரம் குடும்பத்தினர் வழங்கியிருந்தனர். அதே நேரம் இந்தப்பாடசாலையில தாய் தந்தையரை இழந்த இருபத்தியிரண்டு மாணவர்களிற்கு அந்த மாணவர்களின் பெயரில் வங்கிகணக்கு ஆரம்பிக்கப்பட்டு கல்வி ஊக்குவிப்பிற்கான ஆரம்பகட்ட உதவித்தொகையாக இலங்கை ரூபாய் இருபத்தையாயிரம் ரூபாய் அவர்கள் கணக்குகளில் பகிர்ந்து வைப்பிலிடப்பட்டுள்ளது.

ஊற்றுப்புலத்தைச் சேர்ந்த பெற்றோரை இழந்த இளைஞர் ஒருவருக்கு வேலைக்குச் சென்று வருவதற்கான துவிச்சக்கர வண்டிக்கும் அவரது தேவைக்காகவும் 15000ரூபா வழங்கப்பட்டது.

மேற்படி உறவுளுக்கான உதவிகள் வழங்கலில் தமது பங்களிப்புக்களை வழங்கிய அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கும் நேசக்கரம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

கிளிநொச்சி ஊற்றுப்புலம் மாணவர்களுக்கான சத்துணவு மற்றும் கல்விக்கான உதவி வழங்கல் படங்களை இந்த இணைப்பில் அழுத்தி பார்வையிடுங்கள்.

சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகளுக்கான படங்களை இந்த இணைப்பில் சென்று பார்வையிடுங்கள்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டு மீழ் குடியேறியுள்ள உறவுகளிற்கு உதவிய அனைவரிற்கும் நன்றிகள் மேலும் உதவிகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் நேசக்கம் சார்பாக நன்றிகள்...வணக்கம்

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.