Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்திரன் படக்கதை என்னுடையது: போலீஸ் கமிஷனரிடம் ஆரூர் தமிழ்நாடன் புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 25, அக்டோபர் 2010 (14:41 IST)

எந்திரன் படக்கதை என்னுடையது: போலீஸ் கமிஷனரிடம் ஆரூர் தமிழ்நாடன் புகார்

""ஜூகிபா'' என்ற தனது சிறுகதையை மூலக்கதையாக வைத்து ரஜினி நடித்த 'எந்திரன்' படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான ஆரூர் தமிழ்நாடன் புகார் அளித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஆரூர் தமிழ்நாடன் இன்று ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், நான் எனது மாணவ பருவத்திலிருந்து கவிதைகள் எழுத ஆரம்பித்து 1983-ல் கற்பனை சுவடுகள் என்ற எனது முதல் கவிதை நூலை கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் அணிந்துரையோடு வெளியிட்டு உள்ளேன். கவிஞர்கள் வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான் போன்றோர் தலைமையில் கவியரங்குகளில் பங்கு பெற்றுள்ள நான் கவிதைகள், கதைகள், நாவல்கள் என பல பிரபல தமிழ் பத்திரிகைகளில் என் பெயரிலும், எனது புனைப்பெயரான அமுதா தமிழ்நாடன் என்ற பெயரிலும் எழுதி பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ளேன். கவிமாமணி என்ற சிறப்புப் பட்டம் பெற்றுள்ள நான் திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி வருகிறேன். கடந்த 16 ஆண்டுகளாக ஒரு வாரமிருமுறை புலனாய்வு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.

எனது ""ஜூகிபா'' என்ற சிறுகதை பிரபல இலக்கிய பத்திரிகையான ""இனிய உதயம்'' என்ற பத்திரிகையில் 1996-ம் வருடம் ஏப்ரல் மாத இதழில் வெளிவந்தது. பின்னர் 2007-ம் ஆண்டு சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட ""திக் திக் தீபிகா'' என்ற புத்தகத்திலும் ""ஜூகிபா'' என்ற அந்த கதை வெளிவந்தது.

சமீபத்தில் திரைக்கு வந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் ""எந்திரன்'' திரைப்படத்தை பார்த்த எனது வாசகர்கள் மற்றும் நண்பர்கள் நேரிலும், போன் மூலமும், கடிதம் மூலமும் இந்த எந்திரன் படம் எனது படைப்பான ""ஜூகிபா'' என்ற சிறுகதையை அப்படியே எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து சமீபத்தில் நானும் ""எந்திரன்'' திரைப்படத்தை திரையரங்கத்தில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனது ""ஜூகிபா'' கதையை மூலக்கதையாக வைத்து சினிமா சங்கதிகளான பாட்டு, சண்டை, கிராபிக்ஸ் காட்சிகளை சேர்த்து ""எந்திரன்'' திரைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்திய பத்திரிகை பதிவாளர் முன்பு பதிவு செய்யப்பட்டு பதிவு எண் 49612/1990 கொண்ட ""இனிய உதயம்'' இதழில் வெளியான காப்புரிமை கொண்ட எனது ""ஜூகிபா'' கதையை என்னிடமோ, இனிய உதயம் வெளியீட்டாளரிடமோ எந்த முன் அனுமதியும் பெறாமல் மோசடி செய்து லாபம் சம்பாதிக்கும் கெட்ட உள்நோக்கத்துடன் திரைப்பட இயக்குநர் சங்கர் 1997-98-ல் தான் கற்பனை செய்தது என்று பொய்யாகக் கூறி ""எந்திரன்'' திரைப்படத்தை உருவாக்கி அவரே அதன் இயக்குநராகவும் செயல்பட்டு, சன் பிக்சர்ஸும் அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு கூட்டு சதி செய்து ""எந்திரன்'' திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் வெளியிட்டு எனது காப்புரிமையை சட்டத்திற்கு விரோதமாக உரிமை மீறல் செய்துள்ளனர்.

இந்திய காப்புரிமை சட்டம் 1957 பிரிவு 63-ன் படி கிரிமினல் குற்றம் புரிந்துள்ள திரைப்பட இயக்குநர் சங்கர் மற்றும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஆரூர் தமிழ்நாடன் கூறியுள்ளார்.

புகார் அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆரூர் தமிழ்நாடன்,

ரஜினி நடித்த 'எந்திரன்' படத்தின் மூலக்கதையை "இனிய உதயம்' பத்திரிகையில் கடந்த 1996ஆம் ஆண்டு நான் எழுதி வெளியான ""ஜூகிபா'' என்ற சிறுகதையில் இருந்து எடுத்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை ஆணையர், புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.

நக்கீரன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்திரன் படத்துக்கு எதிராக வழக்கு: இயக்குநர் சங்கர், கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

First Published : 10 Nov 2010 11:25:02 AM IST

சென்னை, நவ. 9: எந்திரன் படத்துக்கு எதிரான வழக்கு தொடர்பாக இயக்குநர் சங்கர், சன் பிக்சர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் இயக்குநர் சங்கர், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் ஆகியோரை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கின் விவரம்:

எந்திரன் படத்தில் வரும் கதை நான் 1996-ல் எழுதிய சிறுகதை. இனிய உதயம் என்ற மாத இதழில் கடந்த 1996 ஏப்ரலில் ஜூகிபா என்ற பெயரில் எழுதியுள்ளேன். அதே கதை திக் திக் தீபிகா என்ற பெயரில் புதினமாகவும் கடந்த 2007-ல் வெளிவந்தது.

எனது கதைக்கு பதிப்புரிமை (காபிரைட்) சட்டத்தின் கீழ் கடந்த 1.1.97 முதல் பதிப்புரிமை பெற்றுள்ளேன். எனது அனுமதியில்லாமலும், பதிப்பகத்தார் அனுமதியில்லாமலும் அந்தக் கதை சில சினிமா தனத்தைச் சேர்த்து எந்திரன் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இது தொடர்பாக சங்கர், கலாநிதி மாறன் ஆகியோர் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், எனக்கு இழப்பீடு கேட்டு நோட்டீஸýம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், எந்தப் பதிலும் இல்லை.

எனவே, அந்தப் படம் தொடர்ந்து திரையிடப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், எனக்கு நஷ்ட ஈடாக ரூ. 1 கோடி தர அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வரும் 18-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

தினமணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.