Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உளவு பார்க்க நோர்வே நாட்டவரை விலைக்கு வாங்கிய அமெரிக்கா!

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழ அனுதாபிகள் ஆகியோரை

வியாழன், 04 நவம்பர் 2010 21:12 . .

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்கள், ஈழ அனுதாபிகள் ஆகியோரை நோர்வேயில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மிக நீண்ட காலமாக ஈடுபட்டு வந்திருப்பது அம்பலம் ஆகி உள்ளது.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் கடந்த காலங்களில் நோர்வேயில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை அமெரிக்காவுக்காக நோர்வேயின் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளில் ஒருவர் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் படம் பிடித்துக் கொடுத்திருக்கின்றார்.

குறிப்பாக இலங்கை அரசு - தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் சமாதான அனுசரணையாளராக நோர்வே செயல்படத் தொடங்கிய காலம் தொடக்கம் இவ்வுளவுப் பணி இடம்பெற்று வந்திருக்கின்றது.

இவ்வுளவுப் பணிகளை அங்குள்ள அமெரிக்க தூதரகம் நேரடியாக மேற்பார்வை செய்து வந்திருக்கின்றது. அமெரிக்காவின் உளவாளியாக செயற்பட்ட நபர் தூதரகத்துக்கு அருகில் உயர்ந்த மாடிக் கட்டிடத்துடன் கூடிய வீடு ஒன்றை உளவுப் பணிமனை ஆக்கிக் கொண்டார்.

தூதரகத்துடன் எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில் இவ்வீட்டுக்கும், தூதரகத்துக்கும் இடையில் மிகவும் நுட்பமான முறையிலான தொடர்பாடல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

வீட்டு மொட்டை மாடியில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் படம் பிடிக்கக் கூடியதாக இருந்தமை உளவு பார்க்கும் பணிக்கு மிக வசதியாக அமைந்திருக்கின்றது.

தூதரகத்தில் கடமையாற்றும் கனேடிய நாட்டைச் சேர்ந்த ஊழியர்களின் உதவி, ஒத்தாசைகளும் இந்நடவடிக்கைகளுக்கு கிடைக்கப் பெற்று இருக்கின்றன.

இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நாட்களில் அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக நோர்வேயில் உள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.

அவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை இந்நபர் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றில் படம் பிடித்துக் கொண்டார். இதனிடையில் இவர் புலம்பெயர் தமிழர் அமைப்புப் பிரமுகர்களாலும், ஊடகவியலாளர்களாலும் கவனிக்கப்பட்டு விட்டார்.

இவர் ஏன் புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களை புகைப்படம், வீடியோ பிடிக்கின்றார்? என்று ஊடகவியலாளர்கள் கண்காணிக்கத் தொடங்கி விட்டனர். கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் உண்மைகள் வெளிப்பட்டு விட்டன.

ஆனால் வீடியோ, புகைப்படம் பிடித்தது அவரின் தனிப்பட்ட விசயம் என்கிறார் அமெரிக்க உளவாளியாக செயற்பட்ட நோர்வே நாட்டவர். நோர்வேயை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது இச்சம்பவம் . உலகின் மிகப் பெரிய வல்லரசு அமெரிக்கா.

ஒரு நாட்டுக்குள் ஊடுருவி இன்னொரு நாட்டினர் உளவுப் பணியில் ஈடுபடுவது மிகப் பெரிய குற்றம். அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளை கூட துண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் நோர்வேக்கு உண்டு என்கின்றனர் அரசியல் அவதானிகள்

(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன tamilcnn.com)

:lol::D:wub::lol:

Edited by சுனாமி

:lol::):D:blink::huh::huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.