Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்சான் சூகி விடுவிக்கப்படுவாரா?

Featured Replies

மியான்மர் நாட்டின், ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகியை வீட்டு காவலில் இருந்து விடுவிக்க கோரிய மனுவை, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

மியான்மர் நாட்டின், ஜனநாயக தேசிய லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகி 90ம் ஆண்டு நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.

ஆனால், அவரை ஆட்சியில் அமரவிடாமல் வீட்டு சிறையில் அடைத்தது ராணுவ அரசு. கடந்த 21 ஆண்டுகளில் சூகி 15 ஆண்டுகள் வீட்டு காவலில் இருந்துள்ளார். கடந்தாண்டு இவர் முறைப்படி விடுதலையாகி இருக்க வேண்டும். அமெரிக்கர் ஒருவர் இவரை பாதுகாப்பை மீறி சந்தித்த குற்றத்துக்காக, இவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 13ம்தேதி இவரை விடுவிக்க அரசு திட்டமிட்டிருந்தது. ஜனநாயக தலைவர் ஆங் சான் சூகி(65) சார்பில் வீட்டு காவலை ரத்து செய்ய கோரும் மனு, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. எனினும், ராணுவ அரசு இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டதால், ஆங் சான் சூகியை விடுவித்து விடும் என, நம்புவதாக ஆங் சான் சூகியின் வக்கீல் நியான் வின் தெரிவித்துள்ளார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=124407

நிபந்தனையுடனான விடுதலையை ஆங் சான் சூகி ஏற்கமாட்டார்?

யங்கூன்: மியன்மார் எதிரணித்தலைவி ஆங் சான் சூகி நிபந்தனையுடனான விடுதலையை ஏற்றுக்கொள்ளமாட்டாரென அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.சூ கியின் வீட்டுக்காவல் தண்டனை நாளை சனிக்கிழமையுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், கட்டுப்பாடுகளுடனான விடுதலையை அவர் ஏற்றுக்கொள்ளமாட்டாரென அவரது வழக்கறிஞர் நியான் வான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சூ கி விடுதலை செய்யப்படுவாரா, இல்லையா என்பது குறித்து இராணுவ ஆட்சியாளர்கள் இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.20 வருடங்களின் பின்னர் இங்கு முதன்முறையாக நடைபெற்ற தேர்தலில் 80 வீதமான ஆசனங்களை தாம் வென்றுள்ளதாக இராணுவ ஆதரவுக் கட்சிகள் தெரிவித்துள்ள நிலையிலேயே சூ கியின் விடுதலை குறித்த ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சூ கியின் விடுதலை நிபந்தனையற்றதொன்றாக இருக்க வேண்டியது அவசியமெனத் தெரிவித்துள்ள நியான் வான், கடந்த காலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்பதை நாம் அறிவோமெனக் கூறியுள்ளார்.அத்துடன், தேர்தலில் இடம்பெற்ற மோசடிகளை வெளிப்படுத்துமாறு சூ கி தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பி.பி.சி.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=1061:2010-11-12-08-36-58&catid=52:world&Itemid=87

  • தொடங்கியவர்

மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி விடுதலை!

மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகி இன்று அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மியான்மரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில், ஜனநாயகத்துக்காகப் போராடிய ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி 1989ஆம் ஆண்டு அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களால் வைக்கப்பட்டார்.

மனிதவுரிமைகளுக்கு எதிரான மியான்மர் இராணுவ ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச நாடுகளும், மனிதவுரிமை அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்ததோடு, ஆங் சான் சூகியை விடுதலை செய்யுமாறு அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களை கோரியும் வந்தன.

அத்துடன், மியான்மரில் தேர்தல் நடத்தி ஜனநாயக ஆட்சி அமைக்கப்பட வேண்டும் எனவும் உலக நாடுகள் அந்நாட்டு இராணுவ அரசை வற்புறுத்தி வந்தன.

இந் நிலையில், மியான்மரில் கடந்த 7ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில், இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வரும் ஆங் சான் சூகி போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.

அதேவேளை, 1999ஆம் ஆண்டு இவரது துணைவர் பிரித்தானியாவில் காலமான போது, அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்கும் ஆங் சான் சூகி அனுமதிக்கப்படவில்லை.

மியான்மரின் ஜனநாயகத்துக்காகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங் சான் சூகி போராடி வருகின்றார். இதற்காக இவருக்கு 1991ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

அவரோடு இருந்த இளம் பெண் , முன்பு ராணுவ ஆட்சியில் இராணுவத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு யுவதி லண்டனில் பி.பி.சிக்கு பேட்டி கொடுக்கும் போது இப்படி முன்பும் இரண்டு தடவை இவர் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும் இராணுவ ஆட்சியில் எதுவும் நடக்கலாம் எனவும் அரசியல் கைதிகளாக பல காலமாக சிறையில் வாடுபவர்களையும் உடனடியாக விடுவிக்க உலக நாடுகள் உதவவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

  • தொடங்கியவர்

சீனவைபோல நாட்டை விட்டு வெளியால் இருந்து திபெத்திய டலை லாமா போல மக்களின் விடுதலைக்கு போராட மியான்மார் விடுமா இல்லை சிங்களம் போல ( பொன்சேகாவை இல்லை தமிழர்களை) மீண்டும் சிறைக்குள் அடைக்குமா என காலம் பதில் சொல்லும்.

மியன்மாருக்கு இந்தியாவும் சீனாவும் ஆதரவு தருகின்றன, சிங்களத்தை போல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.