Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதீஷ் வெற்றி பிகாரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது

Featured Replies

விஸ்வரூபம் எடுத்துள்ளார் நிதீஷ். அவரது வெற்றி பிகாரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் பிகாரில் நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது எப்படி? என எல்லா கட்சிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

அதேவேளையில், இந்த வெற்றியை எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஏற்ற வகையில் பொருத்திப் பார்க்கின்றன. ஆனால் எல்லோருக்குமே படிப்பினையாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

÷நிதீஷ்குமார் தலைமையிலான அரசு செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள்தான் அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது என திமுக தரப்பில் கூறப்படுகிறது. தமிழகத்தில் செயல்படுத்தும் பல்வேறு நலத் திட்டங்களால் மறுபடியும் தங்களுக்குதான் வெற்றி கிடைக்கும் என்று கூறிக் கொள்வதற்காக இந்த அம்சத்தை மட்டும் திமுக தரப்பில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

÷நிதீஷ்குமாரின் வளர்ச்சித் திட்டங்கள் என்பதில், இலவசம், மானிய அடிப்படையிலான திட்டங்கள் என்பதைவிட, அடிப்படைக் கட்டுமான வளர்ச்சிப் பணிகள்தான் அதிகம். இதை மற்ற ஆளும் கட்சிகள் கவனத்தில் கொள்வது அவசியம்.

÷கிராமப்புறங்களில் கல்வி, மருத்துவம், சாலை வசதிகள்- இதுவே மக்களுக்கு மனநிறைவைத் தந்திருக்கிறது. சட்டம், ஒழுங்கு நிலை வெகுவாக முன்னேறி, எல்லோரும் தைரியமாக வெளியில் போக முடியும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. பிகார் வரலாற்றில் மிக அமைதியாக நடந்த தேர்தல் இது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷியே பாராட்டியுள்ளார்.

எதிரணியில், லாலு பிரசாத் வீழ்ச்சிக்கு, வாரிசு அரசியலே காரணம், குடும்ப அரசியலுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவு என்றும் கருத்துக் கூறப்பட்டுள்ளது. லாலுவின் ஆரம்ப கால அரசியலை நினைவுகூர்ந்த பா.ஜ.க. தலைவர் ரவிசங்கர் பிரசாத், சமூக சமத்துவத்தில் ஆர்வம் உள்ளவர் லாலு. ஆனால் அவருடைய குடும்பத்தினரின் தலையீடு வந்த பிறகுதான் இப்படியாகிவிட்டார் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

÷முதல்வர் பதவியில் தாம் தொடர முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது தன் மனைவி ராப்ரி தேவியை லாலுபிரசாத் முதல்வராக்கினார். அதன் பிறகு வந்த தேர்தல்களில் அவருடைய ராஷ்டிரீய ஜனதா தளம் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வந்திருப்பதைக் காண முடிகிறது என்பதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

÷தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், பா.ம.க. உள்பட முன்னணியில் உள்ள கட்சிகள் பலவற்றிலும் வாரிசுகள்தான் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளாக பேசப்படுகிறார்கள். மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் வாரிசுகள் இல்லாத அரசியலை காண்பது அரிது என்றாகிவிட்டது.

÷குடும்ப அரசியல், வாரிசு அரசியலால்தான் லாலு தோற்றிருக்கிறார், எனவே தமிழகத்திற்கு இது நல்ல பாடம் என்ற கருத்தை அதிமுக தரப்பினர் முன்வைக்கிறார்கள்.

÷லாலுவைப் போல தாங்களும் பிற்பட்ட மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறிவரும் அரசியல் கட்சிகள், நிதீஷ்குமாரின் வெற்றி பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

÷ஜாதியை முன்வைத்து நடந்த பிரசாரங்கள் எடுபடவில்லை என்பதையும் பிகார் முடிவுகள் காட்டியுள்ளன. அதேபோல மதம் என்ற அம்சமும் தேர்தல் முடிவை நிர்ணயிக்கவில்லை. முஸ்லிம்களின் கோட்டை என கருதப்பட்ட 49 தொகுதிகளில் 40-க்கும் மேலான தொகுதிகளில் நிதீஷ் கூட்டணிதான் வென்றுள்ளது. யாதவ மக்கள் அதிகம் உள்ளதாகக் கருதப்படும் 38 தொகுதிகளில் 30-க்கும் மேல் நிதீஷ் அணிக்கு சென்றுவிட்டன. தலித், மகாதலித் என சமுதாயத்தின் எல்லா பிரிவு மக்களும் நிதீஷ் அணியைத்தான் ஆதரித்திருக்கிறார்கள்.

÷இவ்வளவுக்கும் மாநிலத்தில் தனிநபர் வருமானம் பெரிதாக உயர்ந்துவிடவில்லை. ஆனால் கண்ணுக்குத் தெரியும் வகையில் வளர்ச்சிப் பணிகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த வெற்றிக்கான தாரக மந்திரமாகப் பேசப்படுகிறது.

÷2005 தேர்தலில் லாலு கூட்டணிக்கு எதிரான வாக்கு என்ற அடிப்படையில் நிதீஷ் அணி வென்றது. இப்போது இந்த அரசு தொடர வேண்டும் என்ற ஆதரவு வாக்குகளின் அடிப்படையில் வெற்றி கிடைத்திருக்கிறது.

÷படித்தவர்கள் அதிகம் இல்லாத மாநிலம், மிகவும் பின்தங்கிய மாநிலம் என்றெல்லாம் பேசப்பட்ட பிகாரின் வாக்காளர்கள் இந்தியாவின் வாக்காளர்களுக்கு நல்ல முன்னுதாரணத்தைக் காட்டியிருக்கிறார்கள். ஜாதி, மதம் என்று பேசுவோரை எல்லாம் விரட்டிவிட்டு, உண்மையான வளர்ச்சி என்பதை மட்டுமே மனதில் கொண்டு வாக்களியுங்கள் என்று உணர்த்தியிருக்கிறார்கள்.

÷பிகார் தேர்தல் முடிவு எல்லா தரப்பினருக்குமே ஒவ்வொரு பாடத்தை தருவதாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களுக்கு வேண்டிய பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றதைத் தள்ளிவிடாமல், எல்லா அம்சங்களையும் எடுத்துக் கொண்டு, ஜாதி, மதத்தை முன்னிறுத்தாத தேர்தல், வளர்ச்சிப் பாதை அரசியல் என்பதில் கவனம் செலுத்துவது மக்களுக்கு பயன் தருவதாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&artid=337762&SectionID=205&MainSectionID=199&SEO=&Title=

  • கருத்துக்கள உறவுகள்

நிதிஷ் குமாரின் வெற்றி என்பது.,தனிப்பட்ட வெற்றி.

இது, கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு... மஞ்சள் சால்வையையும் போட்டுக் கொண்டு, மரினாவில் மூண்டு மணித்தியாலம் நடத்திய நாடகம் அல்ல.

பன்னாடைப் பயல்

  • தொடங்கியவர்

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் மிக அதிகமான அளவில் வளர்ச்சி நடந்திருந்தது என்றால் அது பிகார்தான்.

அதன் காரணமாகவே, மைக்கைப் பிடித்து அடித்து அசத்திப் பேசத் தெரியாத நிதீஷ் குமார் + பாஜக கூட்டணி அபார அளவில் வெற்றிபெற்று பிகாரில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

வெற்றிக்குக் காரணமாக அனைவரும் சொல்வது:

-- சட்டம் ஒழுங்கை நேர்ப்படுத்தினார்;

-- சாலைகளைப் போட்டார்;

-- ஊழலை முடிந்தவரை கட்டுப்படுத்தினார்;

-- கல்விக்கான வாய்ப்புகள் அதிகப்படுத்தப்பட்டது.

  • தொடங்கியவர்

காங்கிரஸ் படுபயங்கரமாக அடிவாங்கியதும் ஒருவிதத்தில் நல்லதே. நிதீஷ் குமாரின் யோசனையைக் கேட்டு ராகுல் காந்தி ஒன்று செய்யவேண்டும்.

பேசாமல் உத்தரப் பிரதேசத்துக்குச் சென்று, அடுத்த மாநிலத் தேர்தலில் தன்னை முதலமைச்சர் பதவிக்கு முன்வைத்து பிரசாரத்தை ஆரம்பிக்கவேண்டும். ஒருவேளை அவரும் காங்கிரஸும் வெல்ல வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து ஐந்தாண்டுகள் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலத்தை ஆட்சி செய்து, பிரச்னைகளைச் சமாளித்து, வளர்ச்சியைக் கொண்டுவந்தால், இந்தியப் பிரதமராக ......

காங்கிரஸ் நிர்வாகத்தில் தீவிர மாறுதல்கள்: ராகுல் முடிவு

இளைஞர் காங்கிரஸில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைச் சேர்க்க முயற்சி மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்போது குஜராத் பக்கமும் அவரது கவனம் திரும்பியுள்ளது. முதல்வர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் குஜராத்தி மொழியிலேயே பிரசாரத்தில் ஈடுபட ராகுல் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் குஜராத்தி மொழியை பயின்று வருகிறார். ராகுலின் தாத்தா பெரோஸ் காந்தி, குஜராத்தி மொழியில் சிறந்த பேச்சாளர் என்பதும் நினைவுகூரத்தக்கது.

உ.பி. யுக்தி: 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது ராகுலின் யோசனைப்படி உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது.

2004-ல் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் 2009-ல் அங்கே தனித்துப் போட்டியிட்டு 21 இடங்களைக் கைப்பற்றியது.

அண்மையில் நடைபெற்ற பிகார் பேரவைத் தேர்தலில் இதே யுக்தியைக் காங்கிரஸ் கடைப்பிடித்தது. ஆனால், 243 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

எனினும், காங்கிரஸ் ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்த ராகுல் காந்தி முனைப்புடன் உள்ளார். அதற்காக பல்வேறு திட்டங்களை அவர் வகுத்து வருகிறார். அதன்படி, வாக்கெடுப்பு மூலம் நிர்வாகிகள் நியமனம், ஒருவருக்கு ஒரு பதவி உள்ளிட்ட கொள்கைகளை கட்சியில் அமல்படுத்த அவர் தீவிரமாக முயன்று வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறும் ராகுல் காந்தியின் பரிசோதனை முயற்சிக்கு காலம்தான் பதில் சொல்லும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=337816&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் திட்டங்கள்;

மூண்று பெஞ்சாதிகளை வாழ வைப்பது.

பிறகு... அதுகளுக்குப் பிறந்த குட்டிகளை வாழ வைப்பது.

இடையில் முதல்வர் என்னும், இருக்கிற அதிகாரத்தை பாவித்து சினிமா நடிகைகளுக்கு பக்கத்தில் இருந்து சுய இன்பம் பெற்றுக் கொண்டதை தவிர, வேறு ஏதாவது உருப்படியான வேலை செய்தாரா,,,?

  • தொடங்கியவர்

இன்னும் நான்கு மாதத்தில் படு குழப்பமான நிலையை தமிழகம் அடையப்போகிறது.

1. தயாநிதி மாறன், தான்தான் திமுகவின் முக்கியமான ஆள் என்று காங்கிரஸிடம் சொல்லியுள்ளார்

2. கனிமொழிதான் கருணாநிதியின் நம்பிக்கைக்குரிய ஆள். ஆனால் கனிமொழி ஏதோ காரணத்தால் தன்னை முழுவதுமாக முன்னிலைப்படுத்தவில்லை.

3. கருணாநிதிக்குப் பிறகு கட்சி ஸ்டாலின் கைக்கு வரும்.

திமுக விரைவாக உள்கட்சிப் பிரச்னையை முடித்தாகவேண்டும். ஆனால், மேலோட்டமாகப் பார்க்கும்போது இந்தச் சிக்கலுக்குத் தீர்வே இல்லை என்று தோன்றுகிறது. ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி - மாறன்(சன் டிவி) - கருணாநிதி என்ற இந்த சமன்பாடு நீடிக்குமா?

யார் யாரைத் துரத்தப் போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சமன் பாடு எல்லாம் தமிழ் நாட்டுக்குச் சரிவராது.

மதுரை வீரன் அண்ணன் அழகிரி எல்லாரரையும் தள்ளிப் போட்டு முன்னுக்கு வருவார்.

வாழ்க, வருங்கால தமிழ் நாட்டு முதலமைச்சர், தளபதி, அண்ணன் அழகிரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களுக்காக

அயராதுளைதவர்களை மக்கள் மனதால் அறிவார்கள் அப்படிப்பட்ட தலைவர்கள் தான் வெற்றியை பெறுவார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.