Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்கிரமபாகுவை அரசின் கையாட்கள் விமான நிலையத்தில் தாக்கியமையை நேரில் கண்டேன்! சிவாஜிலிங்கம் பேட்டி

Featured Replies

விக்கிரமபாகுவை அரசின் கையாட்கள் விமான நிலையத்தில் தாக்கியமையை நேரில் கண்டேன்! சிவாஜிலிங்கம் பேட்டி

செவ்வாய், 07 டிசம்பர் 2010 19:43

E-mail அச்சிடுக PDF

Share 0

vikkiramapaaku_karunartna_200_194.jpg

”சம சமாய கட்சியின் செயலாளர் நாயகம் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை அரசின் கையாட்கள் தாக்கியமையை நேரில் கண்டேன்.”

இவ்வாறு தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ்.சி.என்.என் இற்கு தெரிவித்தார். ”விக்கிரமபாகு கருணாரட்ண பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு மாலை 4.00 மணி அளவில் திரும்பி இருந்தார்.

இவரை வரவேற்க சமசமாய கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கலாக சுமார் 50 ஆதரவாளர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர். விக்கிரமபாகுவை வரவேற்க தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தனி வாகனத்தில் சென்று இருந்தார்.

ஆனால் விக்கிரமபாகு கருணாரட்ண வெளியில் வந்தபோது அரசின் கையாட்கள் ஏராளமானோர் அவரைத் தாக்கினர். அவர் சிறுகாயங்கள் அடைந்தார். ஆயினும் ஆதரவாளர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். பெண்கள் உட்பட சுமார் 12 ஆதரவாளர்கள் காயப்பட்டு விட்டனர்.

விக்கிரமபாகு கருணாரட்ணவை ஏற்றிச் செல்ல கட்சியினரால் இரு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு ஏற்கனவே தயார் நிலையில் இருந்தன. அவர் ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு கொழும்பை வந்து அடைந்துள்ளார். அவரின் ஆதரவாளர்கள் விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் இத்தாக்குதல் சம்பந்தமாக முறையிட்டு உள்ளனர்.

அவர்களை தாக்க வெளியில் மூர்க்கத்தனத்தோடு அரசின் ஆட்கள் காத்திருக்கின்றனர். இதனால் அவர்கள் தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்திலேயே இருக்கின்றார்கள்.

கொழும்பை வந்தடைந்து இருக்கும் விக்கிரமபாகு உடனடியாக பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு, நிலைமையை விளக்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றார்.

ஆயினும் எந்நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சிறுபான்மைத் தமிழ் மக்களுக்காக கொடுத்து வருகின்றார் என்கிற ஒரே காரணத்துக்காக விக்கிரமபாகு அரசின் கையாட்களால் தாக்கப்பட்டிருக்கின்றமை இனவெறியின் உச்சத்தையே காட்டுகின்றது.”

நன்றி

tamilcnn

  • கருத்துக்கள உறவுகள்

Dec 7, 2010 / பகுதி: செய்தி /

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் தாக்கப்பட்டுள்ளார்

என்.எஸ்.எஸ்.பி கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன, லண்டனில் இருந்து கொழும்பு திரும்பியபோது இன்று மாலை வானூர்தி நிலையத்தில் வைத்து காடையர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.

லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த இவர், தமிழ் மக்கள், தமிழ் அமைப்புக்கள், சிங்கள மக்கள். ஊடகவியலாளர்கள், மற்றும் பிரித்தானிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பியபோது தாக்கப்பட்டுள்ளார்.

வானூர்தி நிலையத்திற்கு வெளியே விக்கிரமபாகுவின் கட்சி உறுப்பினர்கள், சட்டவாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தவேளை, அங்கு சென்ற 20 முதல் 30 வரையிலான சிங்கள காடையர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

தமது தலைவர் மகிந்த ராஜபக்ச நாட்டை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க, விக்கிரமபாகு நாட்டைப் பிரிக்க முயல்வதாகவும், துரோகி எனவும் கெட்ட வார்த்தைகளால் தூற்றியவாறு காடையர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக அங்கிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலின்போது லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் சாந்த ஜயசூரிய உட்பட மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காடையர்களின் தாக்குதலில் இருந்து விக்கிரபாகுவைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டதால் அவர் மிக மோசமான தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிங்கள ஊடகர் ஒருவர் கூறினார்.

முன்னர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், தற்போதையை சபாநாயகருமான சமல் ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் வானூர்தி சேவை இருந்தது. தற்பொழுது வானூர்தி மற்றும் துறைமுக அமைச்சுக்கள் மகிந்த ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், மகிந்த குடும்பத்தின் ஆதரவாளர்களே வானூர்தி நிலையத்தில் அதிகளவில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பணியாற்றும் காடையர்களே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாகவும், இதுவொரு திட்டமிடப்பட்ட தாக்குதல் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

என்.எஸ்.எஸ்.பி கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜயலத் ஜயவர்த்தன ஆகியோர் மகிந்தவிற்கு எதிரான பரப்புரையிலும், செயற்பாட்டிலும் லண்டனில் ஈடுபட்டிருப்பதாக சிங்கள இனவாத அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் கடந்த சில நாட்களாகக் கண்டனம் வெளியிட்டுவரும் பின்புலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்னத்திற்கு சார்பாக வேறு ஒருவன் குரல் குடுப்பதே அதிகம் .. இங்க காப்பி பேஸ்டு செய்வதை விடுத்து..அவருக்கு பிரியாணி எதாவது வாங்கி குடுத்து ராஜா மாதிரி கவனியுங்க அப்புக்களா :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.