Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேபிக்கு விழுந்த அடியால் கையாட்கள் ஆடுகின்றனர்!

Featured Replies

புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி.க்கு(குமரன் பத்மநாதனுக்கு) நேற்றுக் காலை கன்னத்தில் பலமான அடி விழுந்தமையால் அவரின் கையா ட்கள் இங்கு ஆடுகின்றனர் என்று ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதõன நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் இவை குழு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது ரவி எம்.பி உரையாற்ற தயாராக இருந்தார்.

இதனிடையே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது மேசையில் இருந்த புத்தகமொன்றை காண்பித்து இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டா நாம் இன்று (நேற்று) விவாதிக்கின்றோம். அப்படி விவாதிப்பதாயின் அதில் கே. பி.யிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை எனக் கூறி அமர்ந்தார்.

இதனிடையே எழுந்த ஆளும் கட்சியின் பின் வரிசையை சேர்ந்த சில எம்.பி.க்கள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், “காலையில் வந்தவுடனேயே கே.பி… கே.பி… என்று கொக்கரிக்கின்றீர்களே…” எனக் கோஷம் எழுப்பினர்.

உரையை ஆரம்பிப்பதற்கு எழுந்திருந்த ரவி கருணாநாயக்க எம்.பி., “கே.பிக்கு காலையிலேயே கன்னத்தில் பலமாக அடித்தமையினால் அவரின் அடியாட்கள் சபைக்குள் ஆடுகின்றனர்…” என்று எழுந்திருந்து கூச்சல் செய்த உறுப்பினர்களை பார்த்துக் கூறினார்.

“கருணா, பிள்ளையான் போன்ற புலிகளைப் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு எங்களிடம் கேட்கின்றனர்…” எனக் கூறி தனது உரையைத் தொடர்ந்தார்.

http://www.eelampress.com/2010/12/8759/

  • தொடங்கியவர்

மேலே சொல்லப்பட்ட விடயம் எப்படிப்பட்ட அரசியல் அல்லது கொள்கைரீதியாக யாருக்கு எவ்வாறு பயன் என பார்க்கப்படலாம்.

உதாரணத்திற்கு, கடந்த வாரம் ஒபாமா எடுத்த ஒரு முடிவு: "முன் அதிபர் புஸ் அறிமுகப்படுத்திய பணக்கார வர்க்கத்திற்கு உரிய வரிச்சலுகையை நீடித்தார் ". இது பற்றி சூடான விவாதம் நடந்தது, இது ஒரு:

1. வெற்றிகரமான அரசியல் நடவடிக்கை ஆனால் பின்னடைவான கொள்கை ( good politics, but bad policy)

2. வெற்றிகரமான அரசியல் நடவடிக்கை மற்றும் வெற்றிகரமான கொள்கை ( good politics, and good policy)

3. பின்னடைவான அரசியல் நடவடிக்கை மற்றும் பின்னடைவான கொள்கை ( bad politics, and bad policy)

4. பின்னடைவான அரசியல் நடவடிக்கை ஆனால் வெற்றிகரமான கொள்கை ( bad politics, but good policy)

மொத்தத்தில் அவரவர் தமக்கு (சிங்களவர்கள் ) எதில் எவ்வாறு என்ன இலாபம் உள்ளது என பார்த்து, அந்த வழியில் "அரசியல்" இலாபம் தேடுகின்றார்கள்.

அதற்கு தமிழரை பலிக்கடவாகவும் அதற்கு நாம் தெரிந்தும் தெரியாமலும் துணைபோவது எமது சாபக்கேடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தனை அழிவுகளுக்கு பிறகும் தமிழ் ஊடகங்கள் என்று சில இணையதளங்கள் குட்டையை மேலும் குழப்பி அதில் மீன் பிடித்துக்கொண்டே இருக்கின்றன. உருப்படியான தரமான வாதங்களும், ஆலோசனைகள், பிரதிவாதமே தற்போது தேவை. இணையதளங்களை மூடிவிட்டு வேறு எதாவது ஒருபடியான வேலை செய்வது நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தனை அழிவுகளுக்கு பிறகும் தமிழ் ஊடகங்கள் என்று சில இணையதளங்கள் குட்டையை மேலும் குழப்பி அதில் மீன் பிடித்துக்கொண்டே இருக்கின்றன. உருப்படியான தரமான வாதங்களும், ஆலோசனைகள், பிரதிவாதமே தற்போது தேவை. இணையதளங்களை மூடிவிட்டு வேறு எதாவது ஒருபடியான வேலை செய்வது நல்லது.

இதை நான் வழிமொழிகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.