Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய தமிழர் நிலை !

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய தமிழர் நிலை !

உலகெங்கும் வாழுந்தமிழர்கள் சிந்தித்துச் செயல் படவேண்டிய முக்கிய தருணம் இது.ஈழத்தில் நாம் அடைந்த வேதனையும்,வெட்கமும் உணர்வுள்ளத் தமிழர்களை மென்று,தின்று ,அரைத்துக் கொண்டுள்ளது.உலகிலே நமக்கென்று உள்ள சில நல்ல உள்ளங்கள் நம்மை எதிர்த்தவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.இப்போது ஒரு சிலர் உண்மையைப் புரிந்து கொண்டு நம் பக்கத்து நியாயத்தை உணரத் தலைப்பட்டிருக்கின்றார்கள்.இன்னும் நமது முயற்சிகள் பல்வேறு வழிகளில் பலரை அடைய வேண்டியுள்ளது.உலக மக்களுக்கு நமது நிலைமையும்,உரிமையும் நன்றாக எடுத்துச் சொல்லப் பட வேண்டியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தமிழர் எங்குமே ஆட்சி,அதிகாரத்தில் இல்லை.

தமிழ்நாட்டில் ஆட்சியாளர் யாராக இருந்தாலும் டில்லி ஆதிக்கத்தை எதிர்த்துப் பெரிதாக ஒன்றும் செய்து விட முடியாது என்ற உண்மை நிலையை நன்கு புரிந்து கொண்டு செயல் பட வேண்டியது மிகவும் முக்கியம்.அங்கே தமிழக மக்கள் உணர்வு ஈழத்தமிழர்கட்கு ஆதரவாக இருந்தாலும் எதிர்த்து நேராகவும் ,மறைமுகமாகவும் உள்ள சூது வாது நிறைந்த சுப்பிரமணிசாமி,இந்து ராம், சோ,காங்கிரசார் என்று பலர் உள்ளனர்.காங்கிரசுடன் கூட்டணி வைத்து வாழ்த்தான் தமிழக அரசியல் தலைமைகள் ஆர்வம் காட்ட வேண்டிய நிலைமை உள்ளது.தமிழ் ஆர்வலர்களை அடக்கி வைக்கும் இந்திய சூழ்ச்சி முழு அளவிலே உள்ளது.

தமிழ்நாடு தாண்டி ,இந்திய அளவிலே ஈழத்தமிழரின் உண்மையான் நிலை நன்றாக எடுத்து வைக்கப் படவில்லை.மற்ற இந்திய நண்பர்களை உண்டாக்கிக் கொள்ளும் முயற்சியில் தமிழீழ ஆதரவாளர்கள் திறம்படச் செயல் படவில்லை.அங்கே உள்ள நமது நண்பர்களையும் நாம் நன்றாகப் பயன் படுத்திக் கொள்ளவில்லை.ராசிவ் காந்தியைத் தாண்டி நமது மக்களின் துயரங்கள் ஆதரவைத் தேட முடியும்,ஆனால் அதற்காண செயல்பாடுகள் சரிவரச் செய்யப் பட்டுள்ளனவா? மற்றத் தமிழர்கள் வாழும் நாடுகளில் இலங்கை அரசின் சூழ்ச்சியும் செயல் பாடும் தமிழர்களை எழ விடாமல் செய்து வருகின்றன

. இந்த நிலையிலே நாம் செய்யக் கூடியவை பற்றியும் செய்யக் கூடாதவை பற்றியும் சிந்தித்துச் செயல் படுவது நலம்.

செய்யக் கூடியவை.

முதலில் நமது உள்ளத்து உணர்வுகளை இதயத்தின் அடித்தளத்திலே மாறாமல் கருவாக வைத்துக் கொண்டு, அதை வெளிப்படுத்தாமல் உலகத்திற்கு நமது இன அழிப்பையும்,நமது உரிமைகள் மறுக்கப் பட்டு,ஒழிக்கப் படுவதையும் அரசியல் தந்திரத்துடன் அனைதுலக மக்கட்கும்,அரசியல் மற்ற தலைவர்கட்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.தமிழர்கள் பயங்கர வாதியல்ல, "யாதும் ஊரே யாவருங்கேளிர்" எனற மனித நேயப் பண்புடையவர்கள் என்பதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே யிருக்க வேண்டும்.

உலகப் பத்திரிக்கை,தொலைக் காட்சிகளில் தமிழருக்கு இழைக்கப் பட்ட இன்னல்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கவும், தனி மனித குடும்ப அவலங்கள் உலகப் பத்திரிக்கை,தொலைக்காட்சிகட்குத் தொடர்ந்து திட்டமிட்டபடி எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருக்க வும் வேண்டும்.

இனவாத தென் ஆப்பிரிக்காவை விட மோசமானது இலங்கை இனவாத அரசு, ஹிட்லரை விட மோசமான மனித நேய எதிரி ராசபக்சே என்ற் உண்மைகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க வேண்டும்.

உலகத் தமிழர் அமைப்பும், நாடு கடந்த தமிழீழ அரசும் சிறப்பாகச் செயல் பட அனைத்துத் தமிழரும் தம்மால் இயன்ற செயல்பாடுகளை மனந்தளராமல் விடாது தொடர்ந்து செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

உலக அள்விலே தமிழரை இணைத்து ஒவ்வொரு அரச தூதுவருடனும் அனுமதி பெற்றுச் சென்று பார்த்து நமது நிலையை நன்கு விளக்க வேண்டும்.

உலக அள்விலே உள்ளத் தமிழர்கள் ஈழ்த்திலே ஒரு குடும்பத்தையாவது தமது நெருங்கிய உறவாகக் கருதி அவர்களின் புணர்வாழ்வுக்கு உதவி செய்ய வேண்டும்.இதைச் செய்யக் கூடிய வழி வகைகளை அடையாளங்காட்ட வேண்டும்.

உலக அள்விலே தமிழரின் பொருளாதார வளர்ச்சி யூத இனத்தைப் போல வளர வழிவகைகள் காண வேண்டும்.

நாம் செய்யக் கூடாதவை பற்றிச் சிந்திப்போம்.

ஒரு தமிழரைப் புகழும் போதுப் பொதுவில் புகழ்வோம்.இகழும் போதோ குறை கூறும் போதோ தனியே,நேரே சொல்வோம்.யாராக இருந்தாலும் இந்த நிலை வரட்டும்.

தமிழ்நாட்டு அரசியலிலும்,அரசியல் மற்ற தலைவர்கள் பற்றியும் வெளி நாட்டுத் தமிழர்கள் பேசுவதோ, எழுதுவதோ எந்தப் பயனாவது த்ருமா?

தலைவர் பிரபாகரணின் வழியைப் பின் பற்றுவோம்.தமிழக அரசியல் தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்கள்,செயல் பாடுகளைக் கொண்டது.நமக்கு அத்ரவளிபவர்களைப் பாராட்டுவோம்.நமக்கு ஆதரவளிகாதவர்களையும் நம் வழிக்குக் கொண்டுவர முயற்சிப்போம்.தமிழ்நாட்டு அரசியலிலே நாம் தலையிட மாட்டோம்,என்பதே கொள்கையாக இருப்பது நல்லது

.சில உணர்ச்சியாளர்களும்,மற்றவர்களும் அங்குள்ளத் தமிழர்களை இழிவாக எழுதுவதும், பேசுவதும் நமக்கு வேண்டிய செயல்களா? அதனால் நமக்கு ஏதாவது நல்லது விளையுமா?அந்த நேரத்தை நமக்கு வேண்டிய செயல் பாடுகளில் செலவழிப்பது நல்லதா? அங்குள்ளக் குற்றம் குறைபாடுகளை அங்குள்ளவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்று விடுவது நல்லதல்லவா? அங்குள்ள நமது ஆத்ரவாளர்களை நாம் பாராட்டுவோம், ஆதரிப்போம். அதற்கு மேல் எழுதுவதும் பேசுவதும் நமக்குள்ள சில நண்பர்களையும் இழப்பதற்கும், சில நண்பர்களின் மனக்கசப்பை உண்டாக்க வும் வழி செய்யும், எதிரியின் சூழ்ச்சி வலையில் விழ ஏதுவாகும் என்பதை உணர வேண்டாமா?

தமிழக மக்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஈழத்தமிழர்கள் இழிவாகப் பேசுவதையோ,எழுதுவதையோ ஆதரிக்கலமா? அதிலே உள்ள சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழர்களைப் பிரித்துவிடத் துடிக்கும் துரோகிகளுக்கு இடங்கொடுக்கலாமா?

உன்னுடைய போர்க்கருவி என்ன என்பதை உனது எதிரி தீர்மானிக்கின்றான்.

இன்றைய நமது கருவி அரசியல் தந்திரம் என்பதை உணர்ந்து செயல் படுவோம்

. இதை யார் எழுதியது என்பது முக்கியமல்ல. என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்.

தன்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கும் ஓர் உலகத் தமிழன்.

I received this via email.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.