Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டி ஃபிரிஜ்ஜில் ஒளித்து வைத்த கொடூரக் கணவன்

Featured Replies

உத்தரகாண்ட் தலைநகர் டெஹராடூனில் நடந்த ஒரு கொடூரம், கேட்பவரை ஜில்லிட வைக்கும்!

இளம் மனைவியைக் கொன்ற கணவன், உடலை 70 துண்டுகளாக்கி... சுமார் இரண்டு மாதங்கள் வீட்டின் ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டு... அங்கேயே வாழ்ந்திருக்கிறான்!

பிரகாஷ் நகர் காலனியின் அடுக்குமாடி வீடுகளின் இரண்டாவது தளத்தில் வசித்து வந்தவர், டெல்லியைச் சேர்ந்த 37 வயது ராஜேஷ் குலாத்தி. இவருடன் 33 வயது மனைவி அனுபமா குலாத்தி மற்றும் ஐந்து வயது இரட்டைக் குழந்தைகள். டெல்லியைச் சேர்ந்த அனுபமா இரண்டு மாதங்களாக ஒரு முறைகூட போன் செய்யாமல் வெறும் எஸ்.எம்.எஸ்., இ-மெயிலில் மட்டுமே தொடர்புகொள்ள... அவரது சகோதரர் சித்தாந்த் பிரதானுக்கு சந்தேகம் வந்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி நேரடியாகக் கிளம்பி வந்தார். சகோதரி, வீட்டில் இல்லாமல் போகவே... அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பிரகாஷ் நகர் காலனிக்குச் சென்ற டெஹராடூன் போலீஸார், வீட்டைச் சோதனையிட்டு, எதுவும் கிடைக்காமல்... கடைசியாக பூட்டி இருந்த ஃபிரிஜ்ஜை உடைத்தனர். அங்கே காட்சியைப் பார்த்த அவர்களின் மூச்சே நின்றுவிடும்போல ஆகிவிட்டது!

இரண்டு பாலித்தீன் பைகளில் அனுபமாவின் உடல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி பேக் செய்யப்பட்டு இருந்தது. உடன் இருந்த சித்தாந்த், அவை தனது சகோதரியின் உடல் பாகங்கள்தான் என உறுதி செய்தார். குழந்தைகளுடன் ஷாப்பிங் சென்றிருந்த ராஜேஷைத் தேடிப்பிடித்து, உடனே கைது செய்தனர். கொலையை ஒப்புக்கொண்ட ராஜேஷ், போலீஸிடம் தந்த வாக்குமூலம் இதுதான்...

"சில ஆண்டுகளாகவே என்னிடம் அனுபமா அடிக்கடி தகராறு செய்து வந்ததால், குழந்தைகள் அமைதியின்றி இருந்தனர். சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாய்த் தகராறில் அவளைக் கோபத்தில் அடித்துவிட்டேன். அதற்காக என் மீது குடும்ப வன்முறை சட்டத்தில் புகார் செய்து, வழக்குப் பதிவு செய்து விட்டாள். இதேபோல், கடந்த அக்டோபர் 17-ல் ஒரு தகராறு வந்து, நான் அவளை அடித்தபோது, மயங்கி விழுந்துவிட்டாள்.

ஏற்கெனவே என் மீது புகார் இருப்பதால், 'விழித்து எழுந்ததும் அவள் என்னைச் சிறையில் தள்ளி விடுவாள். குழந்தைகள் அநாதையாகிவிடும்' எனப் பயந்தேன். அதன் பிறகுதான் அவளை ஒரேயடியாக முடித்துவிட முடிவெடுத்தேன். வாயில் ஒரு துணியை இறுக்கமாக அடைத்து, அவளது கழுத்தை இறுக்கிக் கொன்றேன். பிறகு டைல்ஸ் மற்றும் கிரானைட் வெட்டும் மெஷினை கொண்டுவந்து 70 துண்டுகளாக உடலை வெட்டினேன். புதிதாக இதற்காகவே ஒரு ஃபிரிஜ்ஜை வாங்கிவந்து அதில் வைத்துப் பூட்டிவிட்டேன்..."

டெஹராடூன் மாவட்ட எஸ்.எஸ்.பி-யான ஜி.எஸ்.மார்த்தோலியா நம்மிடம், "மனைவியின் பிணத்தை ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டுத் தனது குழந்தைகளுடன் கூலாக வீட்டில் 57 நாட்கள் சாதாரணமாக வாழ்ந்து இருக்கிறான் இவன். மேலும், தான் வெட்டிய உடல் துண்டுகளில், அவ்வப்போது ஒவ்வொன்றாக எடுத்து நகரின் வெளிப்புறப் பகுதியில் உள்ள மசூரி ரோட்டின் மலையடிவாரத்தில் வீசி வந்திருக்கிறான்.

இந்தக் கொலையின் பின்னணியில் கள்ளக்காதல் இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. காரணம், தன்னுடன் எட்டு வருடங்கள் வாழ்ந்து, இரண்டு பிள்ளைகள் பெற்ற மனைவியைக் கொலை செய்யும் கண்மூடித்தனமான வெறிக்கு இதுபோல் ஏதாவது மோசமான காரணம் இருக்கலாம். இத்தனைக்கும் அனுபமாவை ராஜேஷ், 10 வருடங்களாக டெல்லியில் காதலித்து மணம் முடித்து இருக்கிறான்!" என ஆச்சர்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்துவரும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாரிடம் விசாரித்தோம். பல விவரங்களைக் கொட்டினர். "ராஜேஷ், மணம் முடித்த பின் பணியின் காரணமாக மனைவியுடன் அமெரிக்காவில் இருந்தான். பிறகு 2006-ல் உலகம் முழுவதும் ஏற்பட்ட வேலை நெருக்கடியின் காரணமாக இந்தியா திரும்பியவன், கொல்கத்தாவின் வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றியபோது, மணமான ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளான். இதை அனுபமா கண்டிக்கத் துவங்கிய பின்தான் இருவருக்குள்ளும் தகராறு வந்துள்ளது. பிறகு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு 2008-ல் டெஹராடூன் வந்துவிட்டனர். இங்கு வீட்டில் இருந்தபடியே ஒரு அமெரிக்க ஐ.டி. நிறுவனத்துக்கு வேலை செய்து வந்தவன், தனது கள்ளக்காதலையும் விடாமல் தொடர்ந்திருக்கிறான். இதுதான் அவனை குரூரக் கொலைகா?னாக்கி, ஜெயிலில் களி தின்ன வைத்துவிட்டது!" என்றனர்.

ராஜேஷின் லேப்-டாப்பில் டவுன்லோட் செய்யப்பட்ட ஒரு ஆங்கிலப் படம் இருந்துள்ளது. அதில், ஹீரோ தன் காதலியைக் கொலை செய்து சிறிய பல துண்டுகளாக வெட்டி வீசி எறியும் காட்சியும் வருகிறது. எனவே, ராஜேஷ் இந்தக் கொலையைத் திட்டமிட்டுச் செய்துள்ளான் என்றே போலீஸ் நினைக்கிறது.

அநாதைகளான குழந்தைகளை அவரது மாமா சித்தாந்த் வளர்க்க முன்வந்துள்ளார். டெல்லியில் இருக்கும் ராஜேஷின் பெற்றோர், சம்பவத்தின் பயங்கரத்தைக் கேள்விப்பட்டதும், மகனைப் பார்க்கக்கூட வர மறுத்து விட்டனர்.

இப்படிப்பட்ட கொலைகாரன் முகத்தில் முழிக்க யார்தான் விரும்புவார்கள்?

இச்செய்தி தொடர்பான படங்கள் பார்க்க . . . . . .

http://www.thedipaar.com/news/news.php?id=22323

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.