Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுல் காந்திக்கு குடிப்பழக்கம் உண்டா? அவரே அளித்த பதில்

Featured Replies

பெரிய ஏற்பாடுகள்,பிரமாண்ட கூட்டங்கள் இல்லாமல் திடீர் விசிட் அடித்து கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்திவிட்டார் ராகுல்.அவரது வருகையில் முக்கியமான நிகழ்வு சென்னையில் அரசியல்வாதிகளைத் தவிர்த்த மற்ற துறை முக்கியஸ்தர்களைச் சந்தித்தது.கன்னிமரா ஓட்டலில் நடந்த இந்த கலந்துரையாடல் கடைசி வரை ரகசியமாக வைக்கப் பட்டிருந்தது.

சமூக ஆர்வலர்கள்,தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சிந்தனையாளர்கள்,விவசாயப் பிரதிநிதிகள்,எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், திரைப்படத்துறையினர் என பல்வேறு தரப்பிலிருந்தும் ராகுலுடனான கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.ஆரம்பகட்ட செக்அப்கள் தவிர வழக்கமான பார்மாலிட்டிகள் மிஸ்ஸிங்.

முதலில் பேசிய சமூக ஆர்வலரும் ‘பாடம்’ ஆசிரியருமான நாராயணன், ‘‘மதுவிலக்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த ராகுல், “எனக்கு குடிப்பழக்கம் இல்லை. பீச்சில் பீர் பாட்டில்களுடன் காட்சி தரும் இளைஞர்கள் சமுதாயம் குறித்த கவலைகள் எனக்கும் உள்ளது.ஒரு கிராமத்து பெண்மணியுடனான மூன்று மணி நேர உரையாடலில்,மதுவால் ஏழைகள் பணம் பெருமளவில் விரயமாவது குறித்து நிறையச் சொன்னார். ஆனாலும், இது தனிமனித ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் மற்றவர்களை குடிக்கக்கூடாது என்று வலியுறுத்த முடியாது. எனவே, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் திருந்திக்கொள்ள வேண்டும்.அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’’ என்றார்.

நடிகர் ஜெயம் ரவி, இயக்குநர்கள் லிங்குசாமி, வசந்த், ஆர்.கே.செல்வமணி, நடிகர் நாசர், நடிகைகள் ரேவதி, ரோகிணி, ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன், ‘அபிராமி’ராமநாதன்’ ராம.நாராயணன் உள்ளிட்ட திரைப்படத் துறையினர் பலரும் இக்கலந்துரையாடலுக்கு வந்திருந்தனர்.

சுற்றுச் சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன்,பத்திரிகையாளர்கள் ஞானி, மாலன், மதன், பேராசிரியர்கள் வேங்கடாசலபதி, ஜி.ராமதுரை, தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி ஆகியோர் கலந்துகொண்டவர்களில் முக்கியமானவர்கள்.

“உங்களைப் போன்ற சமூக அக்கறை உள்ளவர்கள், நேர்மையானவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்’’ என்ற ராகுல்காந்தி, “சமூகநலனில் அக்கறை கொண்டவர்கள் அரசியலுக்கு வராத காரணத்தாலேயே, தவறானவர்கள் கைகளில் அதிகாரம் செல்கிறது.உங்களுக்கு காங்கிரஸின் கதவுகள் திறந்தே உள்ளன’’ என்று பகிரங்க அழைப்பு விடுத்தார்.

எல்லாக் கேள்விகளுக்கும் பதட்டமில்லாமலும்,சில கேள்விகளுக்கு கிண்டலுடனும் பதிலளித்த ராகுல்,இலங்கை சம்பந்தமான கேள்விகளுக்கு மட்டும் சிறிது பதட்டப்பட்டது போல் தெரிந்தது.

கவிஞரும் பத்திரிகை யாளருமான கவிதா முரளீதரனும் காலச்சுவடு ஆசிரியர் தேவிபாரதியும் இலங்கைத் தமிழர்கள் பற்றிய கேள்விகளை எழுப்பினர்.இந்தக் கேள்வியை எதிர்பார்த்து ஏற்கெனவே தயாராக வந்திருந்த ராகுல்,கையில் வைத்திருந்த குறிப்பைப் பார்த்து இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை ஒவ்வொன்றாகச் சொன்னார்.

“இலங்கையில் தமிழர்கள் நடத்தப்படும் விதம் எங்களுக்கும் திருப்தியளிக்க வில்லைதான். இது தொடர்பாக, இலங்கை அரசி டமே தெரிவித்துள் ளோம். இனி மேல் இலங்கைத் தமிழர் விஷயத்தில் தனி அக்கறை செலுத்துவேன். தில்லி சென்றதும் பிரதமர் மன்மோகன்சிங்கின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்று, தமிழர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கைகளை எடுப்பேன்’’என்று தெரிவித்துவிட்டு கூட்டத்தை முடித்துக்கொண்டார்.

கலந்துரையாடல் முழுக்க பலமுறை காந்தியின் வாழ்க்கையையே மேற்கோள் காட்டிப் பேசினார் ராகுல்.சில பிரச்சினைகளில் இதற்கு உங்களிடம் எதாவது தீர்வு இருந்தால் சொல்லுங்கள்; நீங்கள் டெல்லி வரமுடியுமென்றால் உங்களைச் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

”எது எப்படியிருந்தாலும், இதுபோன்ற திறந்த மன உரையாடலுக்கு ராகுல் வருவதே நல்ல விஷயம்தான். மற்ற அரசியல்வாதிகள் யாரும் இதுவரை செய்யாதது’’ என் றார்கள் கலந்துகொண்ட வி.ஐ.பி.க்கள்.

ஆட்சிப் பணிகளிலும் இதைச் செய்வாரா, ராகுல்..

ராகுலின் ராத்திரி ரவுண்டப்

மதுரையில் தங்கிய ராகுல் திடீரென இரவு சர்க்யூட் ஹவுசில் இருந்து கிளம்பி மேலூர் அருகே தும்பப்பட்டி கிராமத்திற்குச் சென்றார். அதுதான் மறைந்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கக்கன்ஜீ பிறந்த கிராமம். இரவு 10 மணியளவில் அவர் வாழ்ந்த வீடு, நினைவிடம் போய் பார்த்து வந்தார்.

அங்கிருந்து மதுரை திரும்பிய ராகுல்,தான் தங்கிய சர்க்யூட் ஹவுஸ் அருகே புதூரில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு திடீர் விசிட் செய்து மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ராகுலின் இந்த திடீர் ராத்திரி ரவுண்டப்,தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் உற்சாகத்தையும் கொடுத்தாலும் போலீசாருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

இச்செய்தி குறித்த படங்கள் மற்றும் வீடியோ பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=22572

  • கருத்துக்கள உறவுகள்

.

மகாத்மா காந்திக்கும், இந்திரா காந்திக்கும் என்ன தொடர்பு?

இதனை விளங்காத முட்டாள் தமிழக காங்கிரஸ்காரனுக்கு காந்தி என்றால் என்ன கோதாரி? என்றால்.. ராஜீவ் காந்தி என்பான்.

அவன் படிச்சது அவ்வளவு தான்....

ராஜீவ்,சோனியா தம்பதி காந்திகளின் மகன்....

ராகுல் காந்தியின் நண்பர்கள் செய்த கூட்டுக் கற்பழிப்பை இந்த ஒளிப்பதிவில் விவரிக்கின்றார்கள்.

.

Edited by தமிழ் சிறி

விலைக்குப் போகும் மாதுவின், ஒரு பயங்கரவாதியின் மைந்தனிடம் உண்மையை எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.