Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சாரம் - கொதித்தெழும் சமூக ஆர்வலர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் சென்னை தவிர பிற மாவட்டங்கள் மின்பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்க,தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் கொண்டு செல்வதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழ்த்தேசிய ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல தரப்பினரிடையேயும் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றிருப்பதாக உலக நாடுகளே ஒப்புக் கொண்டிருக்கின்றன.போர் நடைபெறும்போதே தமிழர்களின் உணர்வை மத்திய அரசு மதிக்க வில்லை.போர் முடிந்த பிறகும் தொடர்ந்து இலங்கையுடன் பல ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது.

தமிழக மீனவர்களையும் இலங்கை ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்கி வரும் நிலையில், ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதா? எனக் கொதித்து எழுந்துள்ளன பல்வேறு தமிழ் அமைப்புகள்.

இந்தப் பிரச்னை தொடர்பாக டாக்டர் மீனாட்சிசுந்தரத்தைச் சந்தித்தோம். மதுரை மருத்துவக் கல்லூரி மைக்ரோ பயாலஜி துறையின் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இவர், தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

‘‘தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மின்வெட்டு கடுமையாக உள்ளதற்குக் காரணம் கேட்டு கடந்தாண்டு நான் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தேன். அதற்கு இதுவரை அரசு பதிலளிக்காத நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.

இந்தியாவிலிருந்து, இலங்கைக்கு மின்சார விநியோகம் வழங்கப்படுவது தொடர்பான மதிப்பீடு மற்றும் மண் ஆய்வுப்பணி ஆகியவற்றை ‘பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ நிறுவனம் தொடங்க உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ஆற்றாகரை கடல் பகுதியிலிருந்து இலங்கை தலைமன்னார் வரை மண் ஆய்வுப்பணி நடக்க உள்ளது. இந்த ஆய்வுப் பணிக்காக மத்திய அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

இதற்காக தூத்துக்குடியிலிருந்து ‘பார்ஜ்’ என்ற மிதவைப் படகு மண்டபம் தென்கடல் பகுதிக்கு வந்துள்ளது. அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் ஊடாக தமிழகத்தின் மதுரை வரை அமைக்கப்படவுள்ள இந்த நிலத்தடி மின்சார விநியோக கட்டமைப்பின் நீளம் 125 கிலோ மீட்டராகும். இதில் 39 கிலோ மீட்டர் கடலுக்கடியில் அமைந்துள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆகும் 430 மில்லியன் டாலர் செலவை அமெரிக்க சர்வதேச வளர்ச்சி ஏஜென்சி ஏற்றுக் கொண்டுள்ளது என இலங்கை ஊடகத்துறை அமைச்சர் அனுரா பிரியதர்ஷனா யாபா கூறியுள்ளார்.

இந்தியாவில் 17சதவிகித மின் பற்றாக்குறை என்பது நிரந்தரமான பிரச்னையாக இருக்கிறது. இந்தியாவில் 30 சதவிகித மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கும்போதே இந்தப் பற்றாக்குறை இருக்கிறது. அப்படியிருக்கையில், இலங்கைக்கு ஏன் மின்சாரம் வழங்க வேண்டும்? என்பதுதான் எனது கேள்வி’’ என்றார் டாக்டர் மீனாட்சிசுந்தரம்.

‘‘இந்தத் திட்டத்தின் அரசியல் பிரச்னைகள் ஒருபுறம் இருக்க, இதனால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படும்’’ என்கிறார் சுற்றுச்சூழல் ஆய்வாளரும், அருளகம் என்ற இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநருமான பாரதிதாசன்.

“பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு வரை 160 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா கடல்பகுதியில் 3600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்களும், அரிய பவளப் பாறைகளும், அவற்றின் மூலமாக உருவான 21 குட்டித் தீவுகளும் உள்ளன. 1986-ம் ஆண்டு இப்பகுதியை ‘தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா’ என அறிவித்த தமிழக அரசு, பல்வேறு பன்னாட்டு நிதி அமைப்புகளிடம் கடன் வாங்கி இதனைப் பராமரிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறது.

மண்டபம் - தலைமன்னாருக்கு இடைப்பட்ட 40 கி.மீ. தூர கடல் பகுதியில் மின்சாரம் கொண்டு செல்வதற்காக கடல் பகுதியில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணியால் உயிரினங்களின் வாழ்வியல் சூழல் பாதிப்பிற்குள்ளாகும். அங்குள்ள அரிய வகைத் தாவரங்களும், அரிய வகை உயிரினங்களும் அழிந்து விடும். சேதுசமுத்திரக் கால்வாய் அமைப்பதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுமோ, அது அத்தனையும் இந்த மின்சாரத் திட்டத்திற்கும் பொருந்தும்.

மின் பகிர்மானத்தின்போது சிறிது கவனக்குறைவு நேர்ந்தாலும் அதன் விளைவுகள் அப்பகுதியிலுள்ள மீனவர்களை கடுமையாக பாதிக்கும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்’’ எனப் பதறினார் பாரதிதாசன்.

வழக்கறிஞர் அழகுமணியிடம் கேட்டபோது,“தமிழகத்தின் மின் பற்றாக்குறை மூன்றாண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இன்றைக்கு தமிழகத்துக்கு ஒரு ஆண்டுக்கு எழுபத்து ஏழாயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் கிடைப்பதோ, எழுபதாயிரம் மில்லியன் யூனிட்டிற்கும் குறைவு.மின் பற்றாக்குறையால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் கூட ஆறாயிரம் பின்னலாடை நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படாததால் முப்பதாயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். தமிழகத்தை விட வடமாநிலங்களில் மின்வெட்டு மேலும் மோசம்.இந்த நிலையில் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவது எந்த வகையில் நியாயம்?

இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு.அதிலும் குறிப்பாக தமிழர்களைக் கொன்று குவித்த நாடு. அந்த நாட்டுக்கு தமிழகம் வழியாக மின்சாரம் என்பது தமிழினத்திற்குச் செய்யும் மற்றொரு துரோகம்.. என்ற கருத்துக்களின் அடிப்படையில் வழக்கு தொடரப் போகிறோம்’’ என்றார்.

இந்தப் பிரச்னைக்காக போராட்டம் நடத்தியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.இதுகுறித்து அக்கட்சியின் நகர துணைச் செயலாளர் ரமேஷ் கூறுகையில், “ஏற்கெனவே ஏழு கோடி தமிழர்களுக்கு துரோகம் இழைத்த இந்திய அரசு,மீண்டும் சிங்களருக்கு மின்சாரம் வழங்குவதன் மூலம் அடுத்த துரோகத்தை அரங்கேற்றப் போகிறது. இதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்’’ என்றார்.

ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்படுவதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அரசு,இந்த சின்ன சலசலப்புக்கெல்லாம் அஞ்சிவிடுமா என்ன?

- ப.திருமலை

- குமுதம் ரிப்போட்டர்

இந்த திட்டத்தால் "தமிழின துரோகத்தின்" அடுத்த அத்தியாயம் எழுதப்படுகின்றது.

இந்த திட்டம் யாருக்கு?

இந்த திட்டத்தால் யாருக்கு பலன்?

இந்த மாதிரி திட்டங்களின் நீண்ட கால தாக்கங்கள் என்ன? என்ன மாதிரியான கடல் சுற்ற சூழல் பாதிப்புக்கள் ஏற்படும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.