Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விழிப்புணர்வும் ஒரு போராட்டமே

Featured Replies

குடாநாட்டில் தொடரும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களை நிறுத்த விசேடஏற்பாடுகள் உடன் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று உறுதியளித்துள்ளனராம் பொலிஸ்மாஅதிபரும் இராணுவ தளபதிகளும்.

பொலிஸ்மா அதிபர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தவை வருமாறு:

யாழ்ப்பாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் இல்லை.அதேவேளை நாட்டின் ஏனைய மாகாணங்களில் இடம்பெறும் வன்செயல்களுடன் ஒப்பிடும்போது, இங்கு குறைந்த எண்ணிக்கையான குற்றச்செயல்களே இடம்பெறுகின்றன.ஏற்கனவே இடம்பெற்ற சம்பவங்களுடன் தீவிராவதச் செயற்பாடுகளுக்குத் தொடர்புகள்இருப்பதாகவும் கண்டறியப்படவில்லை.பெரும்பாலான சம்பவங்கள் சொந்தக் காரணங்களுக்காகவே இடம்பெற்றுள்ளன என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாம்.

நடந்த சம்பவங்களை ஊடகங்களை மிகைப்படுத்தியுள்ளன என்றே கருதுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சோடிப்புக்கள் செய்தார்.

நடந்தவை சாதாரண சம்பவங்கள்தான் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என கூறும் பொலிஸ் மா அதிபர் அவர்களே உங்களால் விசாரணைகள் மூலம் ஏன் குற்றவாழிகள் அல்லது சந்தேக நபர்களை இதுவரை கைது செய்யவில்லை?

வவுனியாவில் வைத்து பொதுமக்களால் தகவல் தந்து கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை ஏன் இன்னமும் வெளிவிடவிலை?

ஏற்கனவே ஊடக அமைச்சர் ரம்புக்வெல குடா நாடு முழுமையாக படையினர் ம்கட்டுப்பாட்டில் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது பொலிஸ்மா அதிபர் குடா நாஅட்டில் பாதாள உலக கோஸ்டிகளும் இல்லையென கூறுகின்றார். கூடவே மிகப்படுத்தப்பட்ட செய்திகள் எனவும் கூறுகின்றார்.

நான்கு வாரத்தில் எட்டு கடத்தல்கள், மூன்று கொலைகள், இவை எல்லாம் முழுமையான ஆயுத படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பட்டப்பகலில் நடந்தேறிய சம்பவங்கள். இந்த செய்திகள் மிகப்படுத்தப்பட்டுள்ளன என கூறும் பொலிஸ் மா அதிபரின் கூற்று எவ்வளவு அசட்டத்தனம்.

எதிர்காலத்தில் யாழ் குடா நாட்டில் பாதுகாப்பை வழங்குவோம் என்ற இவரது வாக்குறுதி எப்படி சாத்தியம் ஆகும் என்பதனை இவரது அசட்டைத்தனத்தில் இருந்து அறிந்து கொள்ள முடியும்.

அடுத்ததாக ஏனைய இடங்களுடன் ஒப்பிடும் போது குறைந்த குற்ற செயலே இருப்பதாக கூறுவதும் எவ்வளவு முட்டாள்த்தனம். ஏனைய பிரதேசங்களில் 50 ஆயிரம் இராணுவத்தினர் உள்ளனரா? பொலிசார் ரோந்து நடவடிகையில் அதிகமாக ஈடுபடுகின்றனரா? அல்லது அப்படி இருந்தாலும் குறிப்பிட்ட நான்கு வாரத்தினுள் ஆட்கடத்தல், கொலைகள், கொள்ளைகள் என்பன இவ்வாறு நடந்துள்ளனவா? பிரச்சினை வடபகுதியில் அதனை ஏனைய இடங்களுக்கு ஒப்பிட முடியுமா? போகின்ற போக்கைப்பார்த்தால்.. உலகத்தில் நடக்கின்ற குற்ற செயல்களுடன் ஒப்பிடும் போது யாழ்ப்பாணத்தில் குறைவுதான் என்றும் பொலிஸ் மா அதிபர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அடுத்து ரம்புக்வெல கூறி இருக்கின்றார்: வெளி நாட்டுத்தமிழர்கள் அரசாங்கத்திற்கு அபகீர்த்தியினை ஏற்படுத்த இவ்வாறான சம்பவங்களை தூண்டுவதாக..

ரம்புக்வெல என்ன இலங்கை அரசாங்கத்திற்கே இப்போதுள்ள பிரச்சினை என்னவெனில் தமிழ் மக்கள் மீதான கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் ஆகியவற்றை விடுதலைப்புலிகளின் பேரில் பழி சுமத்த முடியாது அல்லது யார் என்று எமக்கு தெரியாது எனவும் இப்போ கூற முடியாது. அடுத்ததாக ஆயுத குழுக்கள் தான் செய்திருக்கலாம் எனவும் கூற முடியாது. முன் நாள் புலி உறுப்பினர்கள்தான் என கூற முற்பட்டும் அவை பெரிதாக எடுபடவில்லை ஏனெனில் மக்கள் எதனையுமே நம்ப தயாராக இல்லை.

வடபகுதி மக்கள் நடக்கின்ற சம்பவங்களுக்கு அரச ஆதரவு இருக்கின்றது என நம்புகின்றனர் அதுவே உண்மை என்பது ஒருபக்கம் இருக்க சர்வதேசம் மனித உரிமை அமைப்புக்கள் கூட அப்படித்தான் நம்புகின்றனர்.

ஆகவே தான் ரம்புக்வெல இப்போ வடபகுதி சம்பவங்களை வெளி நாட்டுத்தமிழர்களுடன் முடிச்சுப்போடப்பார்க்கின்றார். இந்த முடிச்சுப்போடலை தமிழர்கள் எப்படி பார்க்கின்றார்கள் என்றால் ` முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடுவது போல் தான் பார்ப்பார்கள்.

ரம்புக்வெலவின் வெளினாட்டுத்தமிழர்களுடன் முடிச்சுப்போடும் இந்த சோடிப்புக்கு இன்னொரு காரணம் வடபகுதியில் நடக்கின்ற சம்பவங்களை உடனுக்குடன் வெளியில் பகிரங்கப்படுத்துவதில் வெளி நாட்டு தமிழர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். அத்துடன் உள்ளூர் மக்கள், தொண்டர் அமைப்புக்கள் ஆகியோரும் பெரும் பங்கு வகிக்கின்றனர். ஆகவே தான் வெளி நாட்டுத்தமிழர்கள், தொண்டர் அமைப்புக்கள் மீது அரசாங்கம் தாக்குதலினையும் சோடிப்புக்களினையும் தொடர்கின்றது.

விடுதலைப்புலிகளை முற்றாக அழித்த பின்னர் முழுமையான இராணுவ அழுத்தத்தின் கீழ் தாம் விரும்பியவற்றை செய்துவரும் மஹிந்த அரசின் செயற்பாடுகளை தாயகத்தில் வாழும் தமிழர்கள் உயிராபத்துக்களையும் பொருட்படுத்தாது தம்மால் முடிந்தவரை வெளியில் கொண்டு வருகின்றனர். தாயக மக்களின், சில அரசியல் கட்சிகளின், சில உள்ளூர் ஊடகங்களின் இத்தகைய விழிப்புணர்வு பணிகள் அரசாங்கத்தை தடுமாறவாவது வைக்கின்றது.

அடுத்ததாக அனைத்துலக ரீதியாக வெளி நாட்டுத்தமிழர்களின் விழிப்புணர்வு, பிரச்சார பணிகளும் இலங்கை அரசாங்கத்தை கேள்வி கேட்க வைத்துள்ளது.

இந்த செயற்பாடுகளும் அற்பணிப்புக்களும் மஹிந்த அரசு தனது இனச்சுத்திகரிப்பினையும் அடக்கு முறைகளையும் எந்த வித தடைகளும் இன்றி சுதந்திரமாக செய்யலாம் என்ற இறுமாப்பும் நம்பிக்கையும் அவர்களுக்கு இலகுவானதல்ல என்பதனை புரிய வைத்திருக்கும்.

உண்மையில் தாயகத்திலும் வெளி நாட்டிலும் அனைத்து தமிழர்களும், ஊடகங்களும், ஏன் அரசியல் கட்சிகளும் ஒன்று பட்டு விழிப்பாக இருப்பதன் மூலம் சிங்கள அரசின் அடக்குமுறையில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதில் கணிசமான பங்களிப்பினை ஆற்ற முடியும். விழிப்புணர்வும் விடுதலைப்போராட்டத்தின் ஓர் அங்கமே

My link

  • தொடங்கியவர்

உரும்பிராய் பகுதியில் குடும்பஸ்தரை காணவில்லை _

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=29506

உரும்பிராய் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று மாலை முதல் காணாமல் போயுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மனைவியினால் முறையிடப்பட்டுள்ளது.

உரும்பிராயைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய சின்னத்துரை குகதாஸ் என்பவரே காணாமல் போயுள்ளார். செருப்புத் தைக்கும் தொழிலாளியான இவர் தனது வீட்டுத் தேவைக்கு விறகு வாங்கி வருவதாக கூறி கடைக்குச் சென்றவர் நேற்று மாலை வரை வீட்டிற்குத் திரும்பாத நிலையில் மனைவி இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

கடந்த பத்து நாட்களுக்குள் இந்தப் பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளவர்களில் இது மூன்றாவது சம்பவமாகும் இத்தகைய நிகழ்வுகளையிட்டு இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் கலங்கிப் போயுள்ளதுடன் பதட்டத்துடனும் காணப்படுகின்றார்கள்.

வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.