Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவர்னர் முன் சபாநாயகர் அதிகாரம் செல்லுமா? ஆவுடையப்பனின் அதிகார மீறல்

Featured Replies

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் செய்த குறுக்கீட்டால் உரையை பாதியில் நிறுத்திக்கொண்டார் கவர்னர். இதனையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் சபைக் காவலர்கள். ‘கவர்னர் இருக்கும்போது உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை’ என்ற சர்ச்சை இப்போது அவைக்கு வெளியே கிளம்பியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம், விலைவாசி உயர்வு என சாதகமான விஷயங்கள் கையில் இருக்கும் போது விடுவார்களா எதிர்க்கட்சிகள். எதிர்பார்த்தபடியே, பரபரப்புடன் கூடியது இந்த ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம். கவர்னர் உரை தொடங்கியதும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கு றுக்கிட்டு பேசத் தொடங்கினார்.

அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘மைக் இணைப்பு’ தருமாறு கூச்சலிட்டனர். சபாநாயகர் அனுமதி இல்லாததால் மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இருப்பினும், ஓ.பன்னீர் செல்வம் தனது கையில் வைத்திருந்த தாளைப் படித்து முடித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பேசி முடித்துவிட்டார் என்பதை அறிந்த கவர்னர், தனது உரையை மீண்டும் தொடங்கினார். அப்போது அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எழுந்து தொடர்ந்து கோஷங்களைப் போட்டனர்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஆவுடையப்பன், ‘பேரவையின் ஒழுங்குக்கு ஊறு விளைவித்த அ.தி.மு.க., ம.தி.மு.க., இடதுசாரி உறுப்பினர்களை ஆளுநரின் அனுமதியோடு பேரவை விதி 286-ன் கீழ் வெளியேற்ற உத்தரவிடுகிறேன்’ என்றார். இதைத் தொடர்ந்து அவைக் காவலர்கள் அவர்களை வெளியேறச் சொன்னார்கள். உறுப்பினர்கள் வெளியேற மறுத்ததால் கையைப் பிடித்து இழுத்தனர்.

இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு களேபரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் அவைக் காவலர் தொப்பியைத் தட்டிவிட்டதாகவும், அதனால் அவரை காவலர்கள் அடித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமனிடம் பேசினோம்.

அதிகபட்சம் போனால் பத்து நிமிடம் கோஷம் போட்டு நாங்களாக வெளியேறியிருப்போம். ஆனால், துணை முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் பரிதியும் கு றுக்கிட்டு, ‘அவன்தான் காய்கறி மாலையோடு உள்ளே வந்தான். அவனைத் தூக்கி வெளியே எறியுங்கள்’ என்று சத்தம் போட்டனர். அதைத் தொடர்ந்துதான் சபாநாயகர் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஏழெட்டுப் பேர் என்னைச் சுற்றி வளைத்து இழுத்துச் சென்றனர். எனக்கு குடல்வால் ஆபரேஷன் நடந்த இடத்தில் ஒரு காவலர் கையை வைத்து அழுத் தித் தள்ளினார். நான் வலி பொறுக்க முடியாமல் அவரைத் தள்ளிவிட்டேன். அப்போதுதான் அவருடைய தொப்பி கீழே விழுந்திருக்கிறது.

ஒரு காவலர் என் வேட்டியை மிதித்ததால் இடுப்பு வேட்டி அவிழ்ந்துவிட்டது. ‘வேட்டியைக் கட்டிக் கொண்டு நானே செல்கிறேன்’ என்று சொல்லியும் வ லுக்கட்டாயமாகத் தள்ளிச் சென்றனர். வீடியோவில் இதெல்லாம் முழுமையாகப் பதிவாகியிருக்கும்.

ஆனால், அவைக் காவலர் தொப்பியை நான் தட்டிவிட்டது மட்டும் டி.வி.யில் போட்டுக் காட்டினார்கள். முழுமையான வீடியோவை வெளியிட்டால் உண்மை நிலை புரியும். அவைக் காவலர் என்னிடம் நடந்துகொண்ட விதம் பற்றி அலுவல் ஆய்வுக் கூட்டம் நடப்பதற்கு முன்பு சபாநாயகரிடம் புகார் செய்தேன்.

ஆனால், அவர் என்னுடைய புகாரை எடுத்துக் கொள்ளாமல் ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக நடந்து கொண்டார். அவைக் காவலர்கள் புகார் குறித்து என் னிடம் விசாரிக்கப் போவதாகக் கூறியுள்ளார். சபாநாயகர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்’’ என்று ஆதங்கத்தோடு முடித்துக் கொண்டார்.

இதற்கிடையில், ‘கவர்னர் உரையாற்றும் போது குறுக்கிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களை சபாநாயகர் கூண்டோடு வெளியேற்றியது தவறானது’ என்ற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. பொதுவாக, கவர்னர் உரையாற்றும்போது அவையில் சட்டசபை விதிமுறைகள் நடைமுறையில் இருக்காது. குறிப்பாக, சட் டப்பேரவை பதினேழாவது விதியில் அரசியலமைப்பின் 175 மற்றும் 176 பிரிவின்படி அவை கூடியிருக்கும்போது, கவர்னர் உரை நிகழ்த்திக் கொண்டி ருக்கும்போதோ, உறுப்பினர்கள் எழுந்து குறுக்கீடு செய்தால் பேரவை ஒழுங்குக்கு ஊறுவிளைவிக்கும் உறுப்பினர்கள் மீது அடுத்த கூட்டத்தில்தான் சபாநாயகர் தக்க நடவடிக்கை எடுக்க முடியும்’ என்று சட்டப்பேரவை விதியின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனிடம் பேசினோம்.

“உலக நாடாளுமன்ற, சட்டப் பேரவையில் நடந்திராத ஒரு முன்னுதாரணத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் தமிழக சட்டசபையில் ஏற்படுத்தியுள்ளார். சட்டப் பேரவையில் சபாநாயகர் இருக்கையில் கவர்னர் அமர்ந்திருப்பதால், அவைக்கு அவர்தான் தலைவர் ஆகிறார்.

எனவே, அன்றைய தினம் சட்டப்பேரவை விதிகள் நடைமுறையில் இருக்காது. கவர்னர் அருகில் தனியாக ஒரு இருக்கையைப் போட்டு சபாநாயகர் அமர்வது விதிமுறை மீறலாகும். கவர்னர் உரையாற்றும்போது, எதிர்க்கட்சியினர் தங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பது ஜனநாயகக் கடமை.

இது நாடாளுமன்றத்திலேயே பலமுறை நிகழ்ந்துள்ளது. தமிழகத்திலும் பலமுறை நடந்துள்ளது. சமீபத்தில் கூட கர்நாடக கவர்னர் பரத்வாஜ் உரையாற்றும் போது, உறுப்பினர்கள் எதிர்ப்புக் காட்டியபோதும் உரையை முடித்து விட்டுத்தான் சென்றார். உறுப்பினர்களை வெளியேற்றவில்லை.

ஆனால், தமிழக சட்டசபையில் உறுப்பினர்களை வெளியேற்றியுள்ளார்

சபாநாயகர். சட்டப்பேரவையின் விதிமுறை நடைமுறையில் இல்லாத நாளில் அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? விதிமுறைகள் தெரியாத ஒருவர் நமக்கு சபாநாயகராக இருக்கிறார்’’ என்றார் பி.எச்.பாண்டியன்.

இது குறித்து சபாநாயகரிடம் விளக்கம் கேட்க பலமுறை முயன்றும் முடியவில்லை.

திங்கள்கிழமை சபை கூடியதும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் வெளிநடப்புச் செய்தன. அவர்கள் அனைவரும் சட்டசபை கேட் அருகே தர்ணா செய்தனர். பின்னர் தி.மு.க. பாணியில் ஜெயகுமாரை சபாநாயகராக்கி போட்டி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தி பரபரப்பாக்கினார்கள்.

படங்கள் பார்க்க...

http://www.thedipaar.com/news/news.php?id=23059

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.