Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆரம்பமாகியுள்ள அரசுடனான பேச்சுவார்த்தை!:பேச்சு நடக்குமா? அல்லது மூச்சை இழுக்குமா?

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மகிந்த ராஜபக்க்ஷ அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இந்தப் பேச்சுக்கள் ஆரம்பமாகியிருக்கின்ற போதிலும், இந்தப் பேச்சுக்களில் நம்பிக்கை வைக்க முடியுமா என்பதுதான் இப்போது எழும் கேள்வியாகவுள்ளது. கூட்டமைப் புடன் பேச்சுக்களை நடத்தி இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்ற அக்கறையினால் அன்றி, சர்வதேச மற்றும் இந்திய அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவே அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது என்பது தான் உண்மை.

திங்கட்கிழமை ஆரம்பமான பேச்சுக்கள் சுமூகமாக இடம்பெற்றது எனவும், தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு இரு தரப்பும் இணங்கியிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பேச்சுக்களில் பங்குகொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார். இருந்தபோதிலும், பேச்சுக்களுக்கான காலவரையறை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், அடுத்த கட்டப் பேச்சுக்கள் எப்போது இடம்பெறும் என்பதும் தீர்மானிக்கப்படவில்லை. இந்தப் பின்னணியில் பேச்சுக்கள் காலவரையறையின்றித் தொடரக்கூடிய சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவைப் பொறுத்தவரையில் அவர் சிங்களப் பெரும்பான்மையின மக்களின் வாக்குகளைப் பெற்றே அதிகாரத்துக்கு வந்தவர். இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பதோ இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொடுத்து அவர்களை மீளக்குடியேற்ற வேண்டும் என்பதோ அவரைப் பொறுத்தவரையில் அவசியமற்றவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முதலாவதாக நடைபெற்ற பேச்சுக்களின் போதும் இதனை அவர் தெரிவித்திருந்தார். அதாவது மக்கள் எனக்கு வழங்கியுள்ள ஆணையை நான் கவனத்திற்கொள்ள வேண்டும் என மகிந்த ராஜபக்க்ஷ அப்போது கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டது சிங்கள மக்களின் ஆணையை.

சமாதானப் பேச்சுக்களைப் பொறுத்தவரையில் ஜனாதிபதியின் கருததுக்கள் முரண்பட்டவையாகவே தொடர்ந்தும் உள்ளன. கடந்த பொதுத் தேர்தலின் போது அவர் தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவை. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படும் கட்சியுடன் பேச்சுக்கள் நடத்தப்படும் எனவும் அதன் மூலமாக இன நெருக்கடிக்குத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி பொதுத் தேர்தலில் அதிகளவு இடங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் பேச்சுக்களை ஆரம்பித்த போதிலும் அதனை தொடர்ந்தும் முன்னெடுக்க வில்லை.

கூட்டமைப்புடன் மட்டுமன்றி அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும் என பின்னர் அறிவித்தார். அதன்படி அரசாங்கத்தின் ஆதரவுக் கட்சிகளை பெருமளவுக்கு உள்ளடககிய தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடன் பின்னர் பேச்சுக்களை ஆரம்பித்திருந்தார். பின்னர் அதனையும் தொடராமல், தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டுடன் பேச்சுக்கு வரவேண்டும் என்ற அறிவித்தலை வெளியிட்டார். ஜனாதிபதியின் இந்தக் குழப்பமான அறிவிப்புக்கள் இனப்பிரச்சினையை அவர் எவ்வாறு கையாளப் போகின்றார் என்ற கேள்வியை எழுப்பியிருந்த பின்னணியில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான அழுத்தங்களை இந்தியா கொடுத்திருந்தது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்குதான் அதற்குள்ள மிகப் பெரிய பிரச்சினை. இதற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் தன்னுடைய பிரசின்னத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை இந்தியா வகுத்துள்ளது. 50,000 வீடமைப்புத் திட்டம், யாழ்ப்பாணத்தில் பிரதி உயர் ஸ்தானிகராலயம் அமைக்கப்பட்டமை போன்றன இந்த நோக்கத்தைக் கொண்டவையே. இதன்ஒரு கட்டமாக தமக்கு ஆதரவான சக்திகள் வடக்கில் பலமானவையாகவும், இந்த மீள்கட்டு மாணப்பணிகளை முன்னெடுப்பவையாகவும் இருக்க வேண்டும் என இந்தியா கருதியது.

அதற்கு ஆதரவாக வடக்கில் செயற்படக்கூடிய ஒரே சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. இந்தப் பின்னணியில்தான் கூட்டமைப்பைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் இந்தியா செயற்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கத்தின் பேச்சுக்கள் இரண்டு அம்சங்களின் அடிப்படையில் இருக்கும் என ஏற்க னவே இணக்கம் காணப்பட்டுள்ளது. ஒன்று - அரசியல் தீர்வு. இரண்டு - மீள் கட்டுமானம். வடக்கின் அதிகளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்ட கட்சி என்ற முறையில் மீள்கட்டுமானப் பணிகளை தம்மையும் கலந்து ஆலோசித்தே முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் கூட்டமைப்பின் கோரிக்கையாகும்.

கூட்டமைப்பு அண்மைக்காலமாக முன்னெடுக்கும் அரசுக்கான நல்லிணககச் செயற்பாடுகள் மற்றும் எதிர்ப்பு அரசியலைக் கைவிடுதல் போன்ற செயற்பாடுகள் கூட்டமைப்புடன் அரசின் நெருக்கத்தை அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் இந்தியாவின் அழுத்தங்களும் இதற்கான பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்தப் பின்னணியிலேயே கூட்டமைப்புடனான பேச்சுக்களுக்கு அரசு இப்போது இணங்கியிருக்கின்றது. இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமாரின் வருகையைத் தொடர்ந்தே கூட்டமைப்புடனான பேச்சுக்கான திகதி குறிப்பிடப்பட்டது. பிரதீப் குமாரின் விஜயத்தின் போது இராணுவ ஒத்துழைப்பு தொடர்பிலான சில உடன்படிக்கைகள் ஏற்பட்டன. இராணுவ ரீதியான ஒத்துழைப்புடன் தொடர்புபட்ட இந்த உடன்படிக்கைகளின் மூலமாக இலங்கை மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை அல்லது பிடியை மேலும் இறுக்கிக்கொள்வதுதான் இந்தியாவின் நோக்கமாக இருந்துள்ளது என்பது தெரி கின்றது.

கடற்பகுதியில் கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற முதலாவது இணக்கப்பாட்டைப் பொறுத்தவரையில், அது மூன்று காரணங்களுக்காக இந்தியாவுக்கு நலன்தரத்தக்கதாக அமைந்திருப்பதாகக் கருதப்படுகின்றது. இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான கடற்பகுதியை கடற்கொள்ளையர்களோ அல்லது தீவிரவாதிகளோ பயன்படுத்துவதைத் தடுக்க முடியும். குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மும்பைத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் கடல்வழியாகவே இந்தியாவுக்குள் ஊடுருவியிருந்தார்கள். இதனைக் கவனத்திற்கொண்டுள்ள இந்தியா கடல்மூல மான ஊடுருவல்களைத் தடுப்பதற்கு தன்னுடைய பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில் முன்னுரிமை கொடுப்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

கடல் மார்க்கத்தைக் கூட்டாகப் பாதுகாப்பதன் மூலமாக பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க முடியும் அல்லது கட்டுப்படுத்த முடியும் என இந்தியா கருதுகின்றது. குறிப்பாக தெற்காசியப் பிராந்தியத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கு பிராந்திய நாடுகளிலுள்ள துறைமுகங்களையும், கடல்மார்க்கத்தையும் பயன்படுத்துவதுதான் சீனாவின் உபாயமாக இருக்கின்றது. இந்த நிலையில் சீனாவுக்கு எதிரான ஒரு இந்தியாவின் நகர்வாகவும் இதனைக் கருத முடியும்.

இதனைவிட தமிழக மீனவர்கள் மீது இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்பகுதியில் வைத்து இலங்கைக் கடற்படை தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்திவருவது தமிழகத்தில் கொந்தளிப்பான ஒரு நிலையை ஏற்படுத்துவதால் அதற்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவும் இதனைக் கருத முடியும். அதாவது இவ்வாறான தாக்குதல்களைத் தடுப்பதற்கு இந்த கூட்டு ரோந்து பெருமளவுக்கு உதவும் எனக் கருதலாம். (பிரதீப்குமார் கொழும்பில் பேச்சுக்களை நடத்திக்கொண்டிருந்த நேரத்தில் கூட இவ்வாறான தாக்குதல் பற்றிய செய்தி கள் வெளியாகியிருந்தது கவனிக்கத் தக்கது) இந்த வகையில் கூட்டு ரோந்து என்பது தற்போதைய நிலையில் இந்தியாவுக்குச் சாதகமான ஒன்று என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியும்.

இலங்கை விவகாரத்தைக் கையாள்வதில் இந்தியா தன்னுடைய அணுகுமுறையில் தந்திரோபாய ரீதியான மாற்றங்கள் சிலவற்றைச் செய்திருப்பதை புது டில்லியின் இந்த பிந்திய நகர்வுகள் உணர்த்துகின்றன. விடுதலைப் புலிகளுடனான போர் இடம்பெற்ற காலத்திலேயே இந்தியாவின் பிடியிலிருந்து தூர விலகிச் செல்லும் ஒரு போக்கில்தான் கொழும்பு சென்றதைத்தான் காண முடிந்தது. போருக்குப் பிந்திய நிலைமையில் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டிய தேவை கொழும்புக்கு இல்லாமல் போயிருந்தது. கொழும்புடன் நெருக்கமாக சீனா வந்திருந்தமை இதற்குப் பிரதான காரணமாக இருந்தது.

இந்தப் பின்னணியில் கொழும்பை வழிக்குக் கொண்டுவருவதற்கு புதுடில்லி பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டது. இந்தியாவின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொடர்ச்சியான கொழும்பு வருகை கடந்த காலங்களின் புதுடில்லி எதிர்பார்த்த பலனைக் கொடுத்திருக்கவில்லை. ஆனால், தற்போதைய இந்திய பாதுகாப்புச் செயலாளரின் வருகைதான் இந்தியா எதிர்பார்த்த பலனைக் கொடுத்திருப்பதாகக் கருதப்படுகின்றது. சர்வதேச ரீதியாக அதிகரித்துவரும் அழுத்தங்களும் இந்தியாவின் இந்த நிலைப் பாட்டுக்குச் சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்த கொழும்பை நிர்பந்தித்திருக்கலாம்.

பிரதீப்குமாரின் இந்த விஜயத்தின் போது ஏற்பட்டுள்ள உடன்படிக்கைகள் கொழும்புக்குத் திருப்தியளிக்கக் கூடியதாக இருந்திருக்கும் என நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. இருந்தபோதிலும் சர்வதேச ரீதியாக உருவாகியிருக்கும் நிலைமைகள் சில விடயங்களில் தளர்வுப் போக்கைக் காட்ட வேண்டிய தேவையை மகிந்த ராஜபக்க்ஷ அரசாங்கத்துக்கு ஏற்படுத்தியிருப்பதாகவே கருதப்படுகின்றது. குறிப்பாக ஐ.நா. நிபுணர் குழுவுக்கு இலங்கை வருவதற்கான விசா வழங்கப்படாது என முன்னர் அறிவித்திருந்த கொழும்பு பின்னர் அந்தப் போக்கிலிருந்து இறங்கி வந்திருக்கின்றது.

இராணுவ ரீதியான இந்த அழுத்தங்களுக்குச் சமாந்தரமாக அரசியல் ரீதியான நகர்வு ஒன்றையும் புதுடில்லி மேற்கொண்டிருப்பதாகவே கருதப்படுகின்றது. குறிப்பாக இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ராகுல் காந்தி சென்னையில் தெரிவித்திருந்த கருத்துக்களும் இந்திய அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றத்தைப் பிரதிபலிப்பதாகவே கருதப்படுகின்றது. இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என புத்திஜீவிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் இடம்பெற்ற இரு நகர்வுகளில் ஒன்றாகவே இந்தியப் பாதுகாப்புச் செயலாளரின் விஜயத்தின் போது எட்டப்பட்ட இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கைகளைக் கருதமுடியும்.

இரண்டாவதாக இந்தியா விரும்பி யதைப் போல தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான பச்சைக்கொடியை மகிந்த ராஜபக்க்ஷ அரசாங்கம் காட்டியிருந்தது. அதன்படி இப்போது பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. ஆனால், சர்வதேச மற்றும் இந்திய அழுத்தங்கள் காரணமாக ஆரம்பமாகியுள்ள இந்தப் பேச்சுக்களை காலங்கடத்துவதற்கான ஒரு உபாயமாகவே அரசாங்கம் முன்னெடுக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இனநெருக்கடிக்கு வைப்பதற்கான தீர்வு அல்லது விருப்பம் எதுவும் மகிந்த அரசிடம் இல்லை.

நன்றி: இனியநம்நாடு

(கனடாவிலிருந்து வெளிவரும் இனியநம்நாடு இதழுக்காக பார்த்தீபன் எழுதிய ஆய்வுக்கட்டுரை)

http://www.pooraayam.com/mukiaya/325-2011-01-13-12-17-33.html

2 ஜி அலைவரிசை ஊடாக சுருட்டிய பணத்தில் சிறிதை அள்ளிக்கொள்ளவே தமிழ்த் தேசிகக்கூட்டமைப்பு முயற்சிக்கின்றது பொல் இருக்கின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.